News Update :
Home » » காதலன் திருமணம் செய்யாவிட்டால் உயிரை மாய்ப்பேன்: கல்லூரி மாணவி பேட்டி

காதலன் திருமணம் செய்யாவிட்டால் உயிரை மாய்ப்பேன்: கல்லூரி மாணவி பேட்டி

Penulis : karthik on Monday 9 July 2012 | 07:55


மார்த்தாண்டம் அருகே உள்ள மேல்புறத்தைச் சேர்ந்தவர் அனிதா (வயது 21). பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், அருமனை அருகே உள்ள முக்கூட்டுக்கல் என்ற இடத்தைச் சேர்ந்த ராணுவ வீரரான சாஜனும் (25) காதலித்து வந்தனர். 

திருமண ஆசை காட்டி உல்லாசமாக இருந்து விட்டு தற்போது அனிதா� ��ை சாஜன் திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அனிதா, சாஜன் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். 

சாஜன் தன்னை திருமணம் செய்து கொள்ளும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக அனிதா கூறி வருகிறார். ஆனால் சாஜன் வீட்டில் யாரும் இல்லை. அவரது வீடு பூட்டியே கிடக்கிறது. இன்று 3-வது நாளாக போராட ்டத்தை தொடர்ந்த அனிதாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- 

சாஜனுக்கும், எனக்கும் பள்ளி பருவத்திலேயே காதல் ஏற்பட்டது. அவர் தான் என் கணவர் என்று எண்ணிய நான் பலமுறை என்னையே அவருக்கு கொடுத்தேன். கன்னியாகுமரி, திருநெல்வேலி, வேளாங்கண்ணி ஆகிய இடங்களுக்குச் சென்று நாங்கள் ஜாலியாக இருந்தோம். 

இந்தநிலையில் தான� �� அவருக்கு ராணுவத்தில் வேலை கிடைத்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் விடுமுறையில் ஊருக்கு வந்தார். நாங்கள் 2 பேரும் கன்னியாகுமரியில் லாட்ஜ் அறை எடுத்து தங்கி இன்பமாக இருந்தோம். அங்கிருந்து மார்த்தாண்டத்துக்கு ஜோடியாக வந்தோம். அப்போது எனது தந்தை மற்றும் உறவினர்கள் எங்களை பிடித்து ஊர் பிரமுகர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது சாஜன் என்னை திருமணம் செய்து கொள்வதாகவும், 7-ந் தேதி எனது வீட்டுக்கு முறைப்படி பெண் கேட்க வருவதாகவும் கூறினார். ஆனால் அவர் சொன்னபடி 7-ந் தேதி வரவில்லை. இங்கு வந்து பார்த்தால் வீட்டில் யாரும் இல்லை. போனில் தொடர்பு கொண்டு கேட்டால் என்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்கிறார். 

நல்ல வேலையில் இருப்பதால் வரதட்சணைக்கு � ��சைப்பட்டு அவரை உறவினர் ஒருவர் இயக்கி வருகிறார். அவரும் அதற்கேற்ப நடந்து கொள்கிறார். நேற்று மாலை சாஜன் எனக்கு போன் செய்தார். நாளை போலீசார் பேச்சு வார்த்தைக்கு அழைப்பார்கள். அங்கு உன்னை கைகழுவி விடுவேன். நீ வரா விட்டால் நடப்பதே வேறு என்று கூறி மிரட்டினார். நான் இன்று பேச்சுவார்த்தைக்கு போக மாட்டேன். சாஜனின் மனைவியாக தான் இங்கிருந்து செல்வேன். இல்லாவிட்டால் இங்கேய� � பிணமாவேன். 

இவ்வாறு அவர் கூறினார். 

போராட்டத்தில் ஈடுபட்ட அனிதாவுக்கு அந்த பகுதியினர் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger