News Update :
Home » » சிகிச்சைக்கு பின் நாடு திரும்பிய யுவராஜ்சிங்கிற்கு சச்சின் வாழ்த்து

சிகிச்சைக்கு பின் நாடு திரும்பிய யுவராஜ்சிங்கிற்கு சச்சின் வாழ்த்து

Penulis : karthik on Tuesday 10 April 2012 | 08:47


இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவரான யுவராஜ்சிங், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். 60 நாட்கள் நடைபெற்ற புற்று நோய் சிகிச்சையில், அவருக்கு 3 முறை கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு ஓரளவு குணமடைந்தார்.


அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக் கொண்டதற்குப் பிறகு ஒரு மாத கால ஓய்விற்காக லண்டன் சென்றார்.

ஓய்வுக்கு பிறகு லண்டனில் இருந்து இன்று காலை டெல்லி திரும்பினார். யுவராஜ் சிங்கை அழைத்து செல்ல யுவராஜ்சிங்கின் தாயார் ஷப்னம் மற்றும் அவரது உறவினர்கள் இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வந்து அவரை வரவேற்றனர்.

யுவராஜ்சிங் தாயகம் திரும்பும் தகவலை அறிந்து கொண்ட அவரது ரசிகர்களும் அங்கே திரண்டு இருந்தனர்.
சிகிச்சை முடிந்து நாடு திரும்பிய யுவராஜ் சிங்குக்கு நட்சத்திர கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் இணையதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


சீக்கிரமாக குணமடைந்து நாடு திரும்பிய சகோதரார் யுவராஜ்சிங்கிற்கு எனது வாழ்த்துக்கள். கேன்சர் என்னும் நோயுடன் போராடி வென்ற யுவியை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என கூறியிருந்தார்.

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger