News Update :
Home » » பாரத ரத்னாவுக்கு தகுதியானவர் சச்சின்

பாரத ரத்னாவுக்கு தகுதியானவர் சச்சின்

Penulis : karthik on Tuesday 10 April 2012 | 09:03

 

நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு சச்சின் தகுதியானவர் என்று இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். சச்சின் உண்மையிலேயே பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர். அவருடைய 100 சத சாதனைக்கு அருகில்கூட யாராலும் நெருங்கக்கூட முடியாது.

அதற்கு வாய்ப்பேயில்லை என்று நினைக்கிறேன் என்றார். ஐபிஎல் போட்டி குறித்துப் பேசிய அவர், "கடந்த ஐபிஎல் போட்டியில் எனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

ஆனால் இப்போது சர்வதேச அளவில் சிறப்பாக ஆடி திறமையை நிரூபித்துவிட்டதோடு, நல்ல பார்மில் உள்ளதால் எவ்வித நெருக்கடியுமின்றி மகிழ்ச்சியாக விளையாடுவேன்.

இந்த ஐபிஎல்லைப் பொறுத்தவரையில் 18 ஆட்டங்களில் விளையாடவுள்ளோம். அனைத்துப் போட்டிகளுமே சவால் நிறைந்தவை. ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாட வேண்டும் என்றே காத்திருக்கிறோம்.

கடந்த காலத்தைப் பற்றியோ, வரும் போட்டிகளையோ பற்றியோ அதிக அளவில் சிந்திக்கவில்லை' என்றார்.

சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு தனது தலைமையிலான அரசு பரிந்துரைக்கும் என்று மகாராஷ்டிர மாநில முதல்வர் பிருதிவிராஜ் சவாண், மகராஷ்டிர சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger