News Update :
Home » » சிரிப்பால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் - ஜனனி அய்யர்

சிரிப்பால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் - ஜனனி அய்யர்

Penulis : karthik on Monday 5 March 2012 | 21:19

 


கோபத்தால் சாதிக்க முடியாததை சிரிப்பால் சாதிக்க முடியும் என்று நடிகை ஜனனி ஐயர் கூறியுள்ளார். பாலாவின் அவன் இவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஜனனி ஐயர். அந்த படத்தைத் தொடர்ந்து தற்போது அவர், அமீரின் மாணவர் அஸ்லாம் இயக்கும் "பாகன் படத்தில் நடித்து வருகிறார்.

எப்போது சிரித்த முகத்துடன் இருக்கும் ஜனனி, அந்த சிரிப்பிற்கான காரணத்தை பேட்டியொன்றில் கூறியிருக்கிறார். கோபத்தால் சாதிக்க முடியாததை, புன்னகையால் சாதிக்க முடியும் என நான் நம்புகிறேன். நம்ம குணம் எப்படிப்பட்டது என்பதை சொல்ற விசிட்டிங் கார்டே இந்தப் புன்னைகைதான். சினிமாவில் ஜெயிக்க இந்த விசிட்டிங் கார்டு எப்பவும் என் இதழ்களில் இருந்துக் கொண்டே இருக்கும், என்று கூறியிருக்கிறார் ஜனனி.

டைரக்டர் பாலா குறித்து கூறுகையில், பாலாவை என் லைஃப்ல யாருடனும் ஒப்பிட முடியாது. பாலா சார் இப்ப கூப்பிட்டாலும் அதே நன்றியோடு பேசுகிறேன். என் வீடு, கமிட் ஆகிற படங்கள் என எல்லாவற்றையும் அவரிடம் சொல்றேன். பாகன் பட வாய்ப்பை முதலில் சொல்லி பகிர்ந்துக்கிட்ட நபர் பாலாதான், என்று கூறியுள்ளார்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger