News Update :
Home » » சங்கரன் கோயில்: மதிமுக தனித்துப் போட்டி - வைகோ அறிவிப்பு!

சங்கரன் கோயில்: மதிமுக தனித்துப் போட்டி - வைகோ அறிவிப்பு!

Penulis : karthik on Friday 10 February 2012 | 03:51

 
 
 
ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணாநகர் விஜயசேஷ மகாலில் நடந்தது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
 
*முல்லைப்பெரியாறு பிரச்சினையில் மத்திய அரசு கேரளாவுக்கு சாதகமாக நடக்கக்கூடாது. அணையை பாதுகாத்து நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
*மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகளை தேசிய உடமை ஆக்க வேண்டும். அதற்கான சட்டத்தை பாராளு மன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.
 
*தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் உதவி வழங்க வேண்டும். தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.
 
*மின்சார நிலமை முன்பு இருந்ததைவிட மோசமாகி உள்ளது. இந்த மின்வெட்டுக்கு பொதுக்குழு கண்டனம் தெரிவிக்கிறது. மின் கட்டணத்தை எந்த காரணத்தை கொண்டும் உயர்த்தக்கூடாது.
 
*அமராவதி, பவானி ஆற்றுநீரை தடுக்கும் விதத்தில் கேரள அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
 
*ஒரு டன் கரும்புக்கு ரூ.3 ஆயிரமும், ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2 ஆயிரத்து 500-ம் விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.
 
*தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
 
*திருப்பூர் சாயக்கழிவு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
 
*ஆசிரியர் பணியிடங்களை பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும்.
 
*மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
 
*பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
*தமிழக அரசு ஒப்பந்தப் பணிகளில் மின் ஆளுமை முறையை பின்பற்ற வேண்டும்.
 
*படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வர வேண்டும்.
 
*சமச்சீர் கல்வியை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
 
*அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றக்கூடாது. கோட்டூர்புரத்திலேயே தொடர்ந்து இயங்க வேண்டும்.
 
*தமிழ்நாட்டில் ஊழலை அகற்றும் வகையில் லோக் ஆயுக்தா (ஊழல் விசாரணை மன்றம்) அமைக்க வேண்டும்.
 
*விஷவாயு விபத்துக்கு காரணமான டோகெமிக்கல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்யாவிட்டால், இந்தியா ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்க வேண்டும்.
 
*கூடங்குளம் அணு மின்நிலையத்தை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
*சிறையில் இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்குத்தண்டனையை குறைக்க தமிழக அரசு அதிகார உரிமையை பயன்படுத்த வேண்டும்.
 
*இலங்கை தமிழர் பிரச்சினையில் சிங்கள அரசுக்கு மத்திய அரசு உடந்தையாக இருக்கக் கூடாது. இலங்கையில் தமிழர்களிடம் ஐ.நா.சபை பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
 
*தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு மாற்றாக ம.தி.மு.க.வை மக்கள் மன்றத்தில் முன்னெடுத்துச் செல்வது என்றும் சங்கரன் கோவில் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடுவது என்றும் பொதுக்குழு தீர்மானிக்கிறது.
 
இவ்வாறு தீர்மானகள் நிறைவேற்றப்பட்டன.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger