News Update :
Home » » எம்.எல்.ஏ.,சரத்குமாருக்கு கொலை மிரட்டல் கடிதம்

எம்.எல்.ஏ.,சரத்குமாருக்கு கொலை மிரட்டல் கடிதம்

Penulis : karthik on Saturday 21 January 2012 | 12:41

தென்காசி எம்.எல்.ஏ.,சரத்குமாருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்தது
குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி எம்.எல்.ஏ.,வும் ச.ம.க.தலைவருமான சரத்குமாருக்குகொலை மிரட்டல்
விடுக்கப்பட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இக்கடிதம் தென்காசி நகராட்சி
தலைவர் பானுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. கடித்தத்தில் பகவத்கீதை, 786ன்படி
1 லட்சத்து 38 ஆயிரம் ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,ஆனது
வயிற்றெரிச்சலாகஇருக்கிறது. தொகுதி பக்கம் வராமல் கிரிக்கெட்
சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதற்கு எதற்கு எம்.எல்.ஏ.,பதவி. தொகுதி
மேம்பாட்டு நிதி 2 கோடியை பயன்படுத்தாமல்.... கடந்த தி.மு.க.ஆட்சியில்
கட்டப்பட்ட தென்காசிநகராட்சி அலுவலக கட்டட திறப்பு விழாவிற்கு வராமல்
இருப்பதற்குபதவி வேண்டுமா.
சுரண்டையில் உள்ள வீட்டிற்கு பாம் வைக்கப்படும். தொகுதியில் எந்த அரசு
விழாவில் கலந்து கொண்டாலும் கொலை செய்யப்படுவாய். 2012ம் ஆண்டுதான்
இறுதியாண்டு... என்ற ரீதியில் கடுமையான அசிங்கமான, அவதூறான
வார்த்தைகளுடன் கடிதம்எழுதப்பட்டுள்ளது.
நகராட்சி தலைவர் இக்கடிதத்தை எம்.எல்.ஏ.,அலுவலகத்திற்கு அனுப்பி
வைத்தார். எம்.எல்.ஏ.,அலுவலக மேலாளர் கருப்பையா இக்கடிதம் மற்றும்
நடவடிக்கை எடுக்க கோரும் மனுவை எஸ்.பி., தென்காசி டி.எஸ்.பி.,க்குஅனுப்பி
வைத்தார். டி.எஸ்.பி.,தென்காசி போலீசாருக்கு மனுவை அனுப்பி நடவடிக்கை
எடுக்க பரிந்துரை செய்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன்
வழக்குப்பதிவு செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் விசாரணை நடத்தி
எம்.எல்.ஏ.,விற்கு கொலை மிரட்டல் விடுத்து கடிதம் எழுதிய நபரை தேடி
வருகிறார்.
[
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger