News Update :
Home » » ஜெயலலிதாவை பிரதமராக்க ஒத்துழைக்க வேண்டும்: பாஜகவுக்கு கோரிக்கை

ஜெயலலிதாவை பிரதமராக்க ஒத்துழைக்க வேண்டும்: பாஜகவுக்கு கோரிக்கை

Penulis : karthik on Saturday 14 January 2012 | 22:57

சென்னையில் நேற்று ( 14.1.2012) நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜகவின் மூத்த
தலைவரும் , முன்னாள் துணைப் பிரதமருமான அத்வானி , குஜராத் முதல்வர்
நரேந்திர மோடி , தமிழக பா.ஜ. , தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் , முன்னாள்
தலைவர் இல.கணேசன் , இந்து முன்னணி ராம.கோபாலன் , உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.
குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி பேசும்போது
`` வணக்கம் , அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் '' என்று தமிழில்
பேசி தன் பேச்சை ஆங்கிலத்தில் தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது ;-
தமிழ்நாட்டிற்கும் , குஜராத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. நீண்ட
காலமாகஇரு மாநிலங்களுக்கு நல்லுறவு இருந்து வருகிறது. தமிழர்களுக்கு
காப்பி என்றால் மிகவும் பிடிக்கும். அந்த காப்பிக்கு தேவைப்படும்
சிக்கிரி குஜராத்தில் அதிகம் விளைகிறது. அதேபோல் , தமிழ் பெண்களுக்கு
பருத்தி சேலை மிகவும் பிடிக்கும்.
இந்தியாவில் அதிக பருத்தி சேலைகள் தயாரிக்கப்படுவது குஜராத்
மாநிலத்தில்தான். தமிழர்கள் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தும் கடலை
எண்ணெய் உற்பத்தியில் குஜராத் முன்னணியில் உள்ளது. குஜராத்தை பூர்வீகமாக
கொண்ட சவுராஷ்டிரர்கள் தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து
மண்ணின் மைந்தர்களாகவே மாறிவிட்டார்கள்.
இதேபோல் குஜராத்திலும் எனது மணிநகர் தொகுதியில் மட்டும் 20
ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள். இரு தரப்பினரும்
தத்தம் மாநில பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
குஜராத் , தமிழ்நாடு இரு மாநிலங்களும் வளர்ச்சி பாதையை நோக்கி பயணம்
செய்கின்றன.
மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு , காங்கிரஸ் ஆட்சியில் அல்லாத
மாநிலங்களிடம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறது. அந்த
வகையில் தமிழகமும் , குஜராத்தும் தொடர்ந்து மத்திய அரசால்
புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய அரசு
பறிக்கிறது.
இது இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது ஆகும். காங்கிரஸ் அரசு
ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதில் மட்டுமே குறியாக இருக்கிறதே தவிர ,
நாட்டின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சியிலோ , முன்னேற்றத்திலோஅக்கறை
செலுத்தவில்லை. சிறுபான்மை மக்களை வாக்கு வங்கிகளாக பயன்படுத்திவிட்டு
மக்களிடையே மத , இன , பிராந்திய ரீதியாக வேற்றுமை உணர்வை ஏற்படுத்தி
வருகிறது.
இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.
முன்னதாக , துக்ளக் ஆசிரியர் சோ , துக்ளக் அலுவலக நிர்வாகிகளை மேடையில்
ஒவ்வொருவராக அறிமுகப்படுத்திவைத்தார். பின்னர் துக்ளக் வாசகர்கள்
எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துப்பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த சட்டமன்ற தேர்தலில் இலவச திட்டங்களை ஜெயலலிதா
அறிவித்திருக்காவிட்டால் தி.மு.க.தான் தொடர்ந்து ஆட்சியில்
இருந்திருக்கும். அரசியல் உத்திக்காகத்தான் ஜெயலலிதா இலவசங்களை அறிவிக்க
வேண்டியது இருந்தது. ஆனால் , பதவியேற்றதும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான்
அறிவித்த இலவச திட்டங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்.
அவரை போல் தினமும் தலைமைச் செயலகத்திற்குச் சென்று உழைக்கக்கூடிய ஒரு
முதல்-அமைச்சரை இதுவரை பார்த்து இல்லை. தவறு என்று தெரிந்துவிட்டால்
அவரைப் போல தைரியமாக யாராலும் நடவடிக்கை எடுக்க முடியாது.
குஜராத் மாநிலம் அனைத்து துறைகளிலும் வளர்ந்தது போல தமிழகத்திலும்
வளர்ச்சியை ஏற்படுத்த ஜெயலலிதா ஆசைப்படுகிறார். அதற்கு அவர் தொடர்ந்து 10
ஆண்டுகள் ஆட்சியில் இருக்க வேண்டும். தேசப்பக்தி , கடின உழைப்பு ,
பலமொழிகள் பேசும்திறன் , எதையும் எளிதாக கிரகித்துக்கொள்ளும் ஆற்றல்
உள்பட பல்வேறு திறமைகள் அவரிடம் காணப்படுகின்றன.
மத்தியில் அடுத்து அமைய உள்ள புதிய ஆட்சியை உருவாக்கும் பணியில்
அ.தி.மு.க.வுக்கு நிச்சயம் பங்கு இருக்கும். மத்தியில் பா.ஜ.க. அல்லாமல்
அது ஆதரிக்கும் கட்சி ஆட்சிக்கு வருவதாக இருந்தால் ஜெயலலிதா பிரதமராக வர
வேண்டும்.
இவ்வாறு சோ கூறினார்.
விழாவில் , பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் , மாநில தலைவர்
பொன்.ராதாகிருஷ்ணன் , முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் , துணை
பொதுச்செயலாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பத்திரிகையாளர்
எஸ்.குருமூர்த்தி , சினிமா டைரக்டர் கே.பாலச்சந்தர் , நடிகர் ரஜினிகாந்த்
, முன்னாள் டி.ஜி.பி. நட்ராஜ் , வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர்
ஜி.விஸ்வநாதன் , முன்னாள் எம்.பி.இரா.செழியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger