News Update :
Home » » 'ஜஸ்ட் மிஸ்'... சிம்ரனின் ஏக்கப் பெருமூச்சு!

'ஜஸ்ட் மிஸ்'... சிம்ரனின் ஏக்கப் பெருமூச்சு!

Penulis : karthik on Tuesday 20 December 2011 | 09:02

 
 
 
ஒரு நடிகையின் வாக்குமூலம் படம் குறித்து பெரும் பெருமூச்சு விட்டுள்ளார் கடந்த கால கனவுக் கன்னியான சிம்ரன். இப்படத்தில் நான் நடிக்காமல் போய் விட்டேனே என்ற ஏக்கப் பெருமூச்சுதான் அது.
 
சோனியா அகர்வாலின் இரண்டாவது இன்னிங்ஸாக கருதப்படுகிறது ஒரு நடிகையின் வாக்குமூலம் படம். இப்படத்தில் அவர் நடிகையாக நடித்துள்ளார். ஒரு நடிகையின் உண்மைக் கதையாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாம். இப்படத்தை ராஜ்கிருஷ்ணா இயக்கியுள்ளார்.
 
இயக்குநர் செல்வராகவனை விட்டுப் பிரிந்த பின்னர் மீண்டும் நடிக்க ஆரம்பித்த சோனியாவுக்கு நல்ல ரோல்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் வந்து அமைந்தது ஒரு நடிகையின் வாக்குமூலம் படம். கதையைக் கேட்டவுடன் கால்ஷீட் கொடுத்து விட்டார் சோனியா.
 
இந்த நிலையில் ராஜ்கிருஷ்ணாவை சமீபத்தில் சந்திக்க நேர்ந்த சிம்ரனுக்கு, ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில் தான் நடிக்க முடியாமல் போனதை வெளிப்படையாகவே தெரிவித்தாராம். இந்தக் கதையை என்னிடம் சொல்லியிருந்தால் நிச்சயம் நான் நடித்திருப்பேன் என்று ஏக்கத்துடன் கூறினாராம் சிம்ரன். இதனால் தனது அடுத்த படத்தில் சிம்ரனை நடிக்க வைக்கிறாராம் ராஜ் கிருஷ்ணா.
 
இது என்ன முன்னாள் கனவுக் கன்னியின் கதையா...?

 


Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger