News Update :
Home » » இரவு நேர காட்சி ரத்து: தியேட்டர் அதிபர்கள் முடிவு...!

இரவு நேர காட்சி ரத்து: தியேட்டர் அதிபர்கள் முடிவு...!

Penulis : karthik on Tuesday 20 December 2011 | 09:00

 
 
தியேட்டர்களில் இரவு காட்சிக்கு கூட்டம் குறைந்து கொண்டே வருவதாலும், பெண்களின் பாதுகாப்பு கருதியும் இரவு நேர காட்சியை ரத்து செய்ய தியேட்டர் அதிபர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் நகர்பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் தினமும் 4 காட்சிகளும், கிராமப்புறங்களில் உள்ள தியேட்டர்களில் 3 காட்சிகளும் நடத்தப்படுகிறது. ஆனால் சமீபத்திய காலமாக தியேட்டர்களில் மக்களின் கூட்டம் குறைத்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக இரவு நேர காட்சிக்கு ஆட்களே வருவதில்லை. இரவு காட்சி முடியும்போது நள்ளிரவு ஆகிவிடுவதால், அந்த காட்சிக்கு வருவதை பெரும்பாலானவர்கள் தவிர்க்கிறார்கள். குறிப்பாக பெண்கள் பாதுகாப்பை கருதி, இரவு காட்சிக்கு வருவதில்லை. இப்போது பனிக்காலமாக இருப்பதால், இரவில் வெளியில் வருவதை பொதுமக்கள் தவிர்க்கிறார்கள். இதனால் தியேட்டர்கள் காலியாக கிடக்கின்றன.
 
இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள பல தியேட்டர்களில் இரவு நேர காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் நிரந்தரமாக இரவு காட்சியை ரத்து செய்வது பற்றியும் தியேட்டர் அதிபர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி பெங்களூரை போன்று காலை காட்சியை 11மணிக்கும், பகல் காட்சியை 2மணிக்கும், மாலை காட்சியை 4மணிக்கும், இரவு காட்சியை 7மணிக்கும் நடத்துவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger