News Update :
Home » » நடிகர் கார்த்திக்கிடம் தயாரிப்பாளர் சங்கத்தினர் மோசடி - எஸ்ஏசி புகார்

நடிகர் கார்த்திக்கிடம் தயாரிப்பாளர் சங்கத்தினர் மோசடி - எஸ்ஏசி புகார்

Penulis : karthik on Saturday 1 October 2011 | 04:58

 
 
 
 
 
நடிகர் கார்த்திக்கிடம் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சிலர் பண மோசடி செய்துள்ளதாக தயாரிப்பாளர் சங்க பொறுப்புத் தலைவர் எஸ் ஏ சந்திரசேகரன் குற்றம் சாட்டினார்.
 
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வருகிற 8-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
 
இதில் தலைவர் பதவிக்கு எஸ்.ஏ. சந்திரசேகரன், கே.ஆர். ஆகியோர் போட்டியிடுகின்றனர். எஸ்.ஏ.சந்திரசேகரன் அணியில் துணைத்தலைவர் பதவிக்கு ராதாகிருஷ்ணன், கதிரேசன் ஆகியோரும், செயலாளர் பதவிக்கு கே.ஆர்.ஜி., பி.எல்.தேனப்பன் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு கலைப்புலி தாணுவும் போட்டியிடுகின்றனர்.
 
இவர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் தியாகராயநகரில் நடந்தது.
 
இதில் பங்கேற்று எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசுகையில், "தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்த நிர்வாகத்தில் கேபிள் டி.வி. உரிமை வழங்கியதில் ரூ.2 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எங்கள் அணி வென்றால் அந்த தொகை மீட்கப்படும்.
 
முதல்வரிடம் பேசி சிறு தயாரிப்பாளர்களுக்கான மானிய தொகையை பெற்றுத் தருவோம். டெலிவிஷன்களில் விளம்பர கட்டுப்பாடு கொண்டு வரப்படும். தயாரிப்பாளர் சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.
 
கார்த்திக்கிடம் மோசடி
 
நடிகர் கார்த்திக் பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோது ஒன்பது தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பணம் வாங்கி விட்டு அவர்கள் படங்களில் நடிக்கவில்லை என புகார் கூறப்பட்டது. தற்போது கார்த்திக் சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு படத்தில் இருந்தும் ரூ.5 லட்சம் வசூலித்து ஒன்பது தயாரிப்பாளர்களுக்கும் பிரித்து கொடுப்பது என சங்கத்தில் முடிவு செய்யப்பட்டது.
 
அதன்படி கார்த்திக் நடித்து ரிலீசான கலக்குற சந்துரு, ராவணன், மாஞ்சாவேலு ஆகிய படங்களில் இருந்து ரூ.15 லட்சம் வசூல் செய்யப்பட்டது.
 
அதில் 7 லட்சம் பணத்தை தயாரிப்பாளர்களுக்கு திருப்பி கொடுக்காமல் மோசடி செய்யப்பட்டுள்ளது. கேபிள் டி.வி. மூலம் வசூலான பணத்திலும் மோசடி நடந்துள்ளது.
 
சங்கம் சார்பில் வெளிவரும் இதழுக்கு விளம்பர கட்டணம் என்ற பெயரில் 400 தயாரிப்பாளர்களிடம் டி.டி. வாங்கி 4 ஆண்டாக வங்கியில் போடப்படவில்லை.
 
இது போன்ற பல குற்றற்சாட்டுகளை போலீசில் புகாராக அளித்துள்ளோம். எங்கள் அணி வென்றால் சேவை மையமாக சங்கம் செயல்படும்," என்றார்.
 
இந்தக் கூட்டத்தில் கே.ஆர்.ஜி., நடிகர் ராதாரவி, முக்தா சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger