News Update :
Powered by Blogger.

பாகிஸ்தானில் 4 சகோதரிகள் தற்கொலை: வரதட்சணை கொடுக்க வழியில்லாததால் உயிரை மாய்த்தனர் 4 Pakistani sisters kill themselves over dowry

Penulis : Tamil on Friday, 20 September 2013 | 18:13

Friday, 20 September 2013

பாகிஸ்தானில் 4 சகோதரிகள் தற்கொலை: வரதட்சணை கொடுக்க வழியில்லாததால் உயிரை மாய்த்தனர் 4 Pakistani sisters kill themselves over dowry
Tamil NewsYesterday,

முல்தான், செப். 20-

'ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்' என்று சொல்வார்கள். உண்மையில் இது ஐந்து விஷயங்களைப் பற்றியது என்றாலும், ஐந்து பெண் பிள்ளைகளை பெற்றவன் ஆண்டி ஆவான் என்று பேசுவது வழக்கமாக உள்ளது. இது சில நேரங்களில் உண்மையாகவும் ஆகிவிடுகிறது.

ஐந்து பெண்களை பெற்ற தந்தை, அவர்களை திருமணம் செய்து கொடுக்க படும் சிரமங்கள் அதிகம். அதுவும் ஏழையாக பிறந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். ஏழையாகப் பிறந்த அந்தப் பெண்களின் மனத்துயரங்களையும் சொல்லி மாளாது.

அந்த வகையில், வரதட்சணை கொடுக்க தந்தைக்கு வழியில்லாமல் போனதால், முதிர்கன்னியாக கண்ணீர் வடித்த சகோதரிகள் கால்வாயில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் நடந்துள்ளது.

பஞ்சாப் மாகாணத்தின் மெயில்சி நகரில் வசித்து வருபவர் பஷிர் அகமது ராஜ்புத். ஏழை விவசாயியான இவருக்கு 5 பெண் பிள்ளைகள். போதிய வருமானம் இல்லாததால், சீர்வரிசை, வரதட்சணை கொடுத்து மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லை.

காலம் கடந்து முதிர்கன்னிகளாக மாறிவிட்ட அந்த பெண்களில் மூத்தவருக்கு வயது 45. அடுத்து 43, 38, 35 மற்றும் 31 வயதுடையவர்கள்.

இந்நிலையில், சகோதரிகள் 5 பேரும் தங்களின் திருமணம் தொடர்பாக தந்தையிடம் பேசினர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த 5 பேரும் கால்வாயில் விழுந்தனர். இதில் 4 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். கடைசி பெண்ணான பாத்திமாவை போலீசார் உயிருடன் மீட்டனர்.

...
Show commentsOpen link

comments | | Read More...

காதல் பிரச்சினையில் அண்ணா மேம்பாலத்தில் இருந்து குதித்து இளம்பெண் yong lady love matter

Penulis : Tamil on Thursday, 19 September 2013 | 14:50

Thursday, 19 September 2013

காதல் பிரச்சினையில் அண்ணா மேம்பாலத்தில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!
by abtamil

ஆண் நண்பருடனான ... - Tamil newsYesterday,

சென்னை அண்ணா மேம்பாலத்தில் நேற்று மாலை 4 மணியளவில் இளஞ்சிவப்பு நிறத்தில் டி-சர்ட்டும், கருப்பு நிற ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்திருந்த இளம்பெண் ஒருவர் ஆவேசமாகவும், கண்ணீருடனும் செல்போனில் பேசியபடி அங்கும், இங்குமாக நடந்து கொண்டிருந்தார்.

திடீரென்று அந்த பெண் மேம்பாலத்தின் கைப்பிடி சுவர் மீது ஏறி உட்கார்ந்தார். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை கீழே இறங்கும்படி கூறினார்கள்.

ஆனால் அந்தப்பெண் பாலத்தின் 20 அடி உயரத்தில் இருந்து தலைகுப்புற கீழே குதித்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அந்த பெண் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

அப்போது வேகமாக ஓடிவந்த வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை கட்டிப்பிடித்து கதறி அழுதார். பின்னர் உயிருக்கு போராடிய அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவமனையில் பெண்ணை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகின.

அண்ணா மேம்பாலத்தில் இருந்து குதித்து இறந்தவர் பெயர் அஞ்சலி(வயது 26). மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த இவர் சென்னை கோடம்பாக்கம் காமராஜர் கிழக்கு தெருவில் தனது 2 சகோதரர்கள்-சகோதரிகளுடன் தங்கியிருந்து, அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்தார். அஞ்சலி திருமணமாகி, விவாகரத்து பெற்றவர். இவருக்கு ஒரு பெண் குழந்தையும் இருப்பது தெரியவந்தது.

அஞ்சலியை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச்சென்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தார்கள். விசாரணையில் அவர் அஞ்சலியின் காதலர் என்று தெரியவந்தது. அவரது பெயர் ஆல்.புவனேஸ்வர் (வயது 30) ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்.

இவர் சென்னை கொரட்டூர் கிருஷ்ணசாமி நாயுடு தெருவில் தங்கியிருந்து, அஞ்சலி வேலை பார்த்த அழகு நிலையம் உள்ள கட்டிடத்தில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

அப்போது அஞ்சலிக்கும், ஆல்.புவனேஸ்வருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்தனர். இந்தநிலையில் ஆல்.புவனேஸ்வருக்கு அவருடைய குடும்பத்தினர் பெண் பார்த்துள்ளனர். கடந்த 2 மாதமாக ஆல்.புவனேஸ்வர், அஞ்சலியிடம் பேசுவதை தவிர்த்து வந்தார்.

இதனால் மனமுடைந்த அஞ்சலி நேற்று மதியம் ஆல்.புவனேஸ்வரை சந்தித்து எதற்காக என்னை சந்திப்பதை தவிர்த்து வருகிறாய்? என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது குடிபோதையில் இருந்த ஆல்.புவனேஸ்வர், அஞ்சலியை கடுமையான வார்த்தைகளால் திட்டினார்.

இதனால் வாழ்கையில் விரக்தியடைந்த அஞ்சலி அண்ணா மேம்பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

அஞ்சலி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக செல்போனில் தான் தற்கொலை செய்யும் முடிவை ஆல்.புவனேஸ்வருக்கு தெரிவித்துள்ளார். இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அவர், அஞ்சலி அண்ணா மேம்பாலத்தில் இருந்து குதித்த பிறகே பதறியடித்து சென்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து, ஆல்.புவனேஸ்வரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் அஞ்சலியை தற்கொலைக்கு தூண்டியது ஆல்.புவனேஸ்வர் என்று நிரூபிக்கப்பட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர்.

அஞ்சலி இறந்த தகவலறிந்த அவரது சகோதரர்-சகோதரிகள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு அஞ்சலியின் பிணத்தை பார்த்து கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.

பரபரப்பாக இயங்கக்கூடிய அண்ணா மேம்பாலத்திலிருந்து, மேற்கு வங்க பெண் அஞ்சலி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் நேற்று மாலை அண்ணா சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

Show commentsOpen link

comments | | Read More...

கோயம்பேடு பஸ் நிலையத்தில் ருசிகர சம்பவம்: மாரடைப்பால் இறந்ததாக கருதப்பட்ட ராணுவ வீரர் உயிரோடு வந்தார் soldier came alive thought to have died of heart attack

Penulis : Tamil on Wednesday, 18 September 2013 | 18:31

Wednesday, 18 September 2013

கோயம்பேடு பஸ் நிலையத்தில் ருசிகர சம்பவம்: மாரடைப்பால் இறந்ததாக கருதப்பட்ட ராணுவ வீரர் உயிரோடு வந்தார் soldier came alive thought to have died of heart attack
Tamil NewsYesterday, 05:30

சென்னை, செப்.19-

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் காத்திருந்த பயணி ஒருவர் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு துடித்தார். பஸ் நிலையத்திலேயே சுருண்டு விழுந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் 108 ஆம்புலன்ஸ் வேனை வரவழைத்தனர்.

மாரடைப்பால் சுருண்டு விழுந்த வரை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அந்த பயணி மரணம் அடைந்து விட்டார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

அவரது உடல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை சவகிடங்கில் வைக்கப்பட்டது. கோயம்பேடு பஸ் நிலைய போலீசார், அவர் யார் என்று விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்தார். மாரடைப்பில் பயணி சுருண்டு விழுந்த இடத்தில் செல்போன் ஒன்று கிடந்தது என்று கூறி அந்த செல்போனை போலீசாரிடம் ஒப்படைத்தார்.

அந்த செல்போன் மாரடைப்பில் இறந்த பயணியின் செல்போனாக இருக்கலாம் என்று போலீசார் கருதினர். அந்த செல்போனை வைத்து, இறந்தவரை அடையாளம் காண முயற்சி மேற்கொண்டனர். அந்த செல்போனில் கடைசியாக 3 எண்களில் தொடர்பு கொண்டு பேசியிருப்பது தெரியவந்தது.

அந்த 3 எண்களிலும் போலீசார் தொடர்பு கொண்டு பேசியபோது 3 பெண்கள் போனை எடுத்து பேசினார்கள். அந்த செல்போனின் சொந்தகாரரின் பெயர் ஜெமினி, அவர் திருவண்ணாமலை மாவட்டம் சீலனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது.

போலீசாரிடம் பேசிய 3 பெண்களும் ஜெமினியின் மனைவிகள் என்றும் கண்டறியப்பட்டது. ஜெமினி முன்னாள் ராணுவவீரர் என்றும் அவர் சென்னைக்கு வந்தார் என்றும், அவருடைய 3 மனைவிகளும் தெரிவித்தனர்.

மாரடைப்பில் இறந்தது ஜெமினி தான் என்று முடிவு செய்த போலீசார், உங்கள் கணவர் இறந்துவிட்டார் என்று அவர்களிடம் தெரிவித்தார்கள்.

இதைத்தொடர்ந்து அந்த 3 பெண்களும் தங்களது கணவர் ஜெமினி இறந்துவிட்டார் என்று கூறி கதறி அழுதபடி திருவண்ணாமலையிலிருந்து கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.

போலீஸ் நிலையத்திற்கு வந்து நடந்த சம்பவத்தை கேட்டு, நெஞ்சில் அடித்து போட்டி போட்டு அழுதார்கள். போலீசார் அவர்களுக்கு ஆறுதல் சொன்னார்கள். பின்னர் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு சென்று கணவரின் உடலை பார்க்கலாம் என்று அந்த 3 பெண்களும் புறப்பட்டனர்.

அந்த நேரத்தில் தான் அந்த இன்ப அதிர்ச்சி சம்பவம் நடந்தது. இறந்ததாக கருதப்பட்ட ஜெமினி, போலீஸ் நிலையத்திற்கு வந்தார். தன்னுடைய செல்போன் தொலைந்துவிட்டதாகவும், அதை கண்டுபிடித்து தரும்படியாக மனுகொடுக்க வந்ததாக கூறினார். போலீஸ் நிலையத்தில் அவருடைய 3 மனைவிகளும் கண்ணீர் கோலத்தில் நிற்பதை பார்த்து அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

இறந்து போனதாக கருதிய தங்கள் கணவர் உயிரோடு வந்ததை பார்த்து 3 மனைவிகளும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். இந்த காட்சிகளை பார்த்த போலீசாருக்கோ, நடந்த சம்பவம் கனவா? நனவா? என்று புரியவில்லை. என்றாலும் ஜெமினி உயிரோடு வந்தது அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்தது. ஜெமினி சந்தோஷமாக தன்னுடைய மனைவிகளோடு போலீஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றார்.

போலீசாருக்கு அடுத்த தலைவலி ஆரம்பமானது. பஸ் நிலையத்தில் மாரடைப்பில் இறந்தவர் யார்? என்று கண்டுபிடிக்கும் வேலையை தொடங்கிவிட்டனர்.
...
Show commentsOpen link

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger