News Update :
Powered by Blogger.

2 வது வெற்றி யாருக்கு?: இந்தியா இங்கிலாந்து நாளை பலப்பரீட்சை

Penulis : karthik on Friday, 21 September 2012 | 23:47

Friday, 21 September 2012

கொழும்பு, செப். 22-
20 ஓவர்உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் கடந்த 18-ந்தேதி
தொடங்கியது. நேற்றுடன்6 லீக் ஆட்டம் முடிந்துவிட்டது. இந்தப்போட்டியில்
பங்கேற்றுள்ள 12 அணிகளும் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு
பிரிவிலும் 3 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில்
உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொருபிரிவிலும் முதல் இரண்டு இடங்களை
பிடிக்கும் அணிகள் "சூப்பர் 8" சுற்றுக்கு தகுதி பெறும். இதுவரை இந்தியா,
இங்கிலாந்து ("ஏ"பிரிவு), இலங்கை, தென்ஆப்பிரிக்கா ("சி" பிரிவு) ஆகிய 4
அணிகள் "சூப்பர் 8" சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இன்றைய ஆட்டத்தில் "சி" பிரிவில்உள்ள இலங்கை- தென்ஆப்பிரிக்கா, "பி"
பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. 2007-ம்
ஆண்டு சாம்பியனான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வென்றது.
2-வது "லீக்" ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை நாளை
(23-ந்தேதி) சந்திக்கிறது.
கொழும்பில் நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு
தொடங்குகிறது. இரு அணிகளுமே "சூப்பர் 8" சுற்றுக்கு நுழைந்து விட்டதால்
இந்த ஆட்டத்தின் முடிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இந்திய அணி
வெற்றி பெற்றாலும் "ஏ" பிரிவில் 2-வது இடத்தில் தான் இருக்கும்.
ஏனென்றால் இங்கிலாந்து அணி தரவரிசைப்படி அந்த பிரிவில் முதல் இடத்தில்
உள்ளது. இந்திய அணி பலவீனமான ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடுமையாக போராடியே
வெற்றி பெற்றது.
அதே நேரத்தில் இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தானை எளிதில் நசுக்கி தள்ளியது.
இதனால் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்துவது எனபது சவாலானது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஷேவாக், காம்பீர் ஆகியோர் சிறப்பான
தொடக்கத்தை கொடுக்கவில்லை. இதனால் இந்த இருவரும் அதிரடியாக ஆட வேண்டிய
நெருக்கடியில் உள்ளன.
வீராட் கோலி, ரெய்னா, யுவராஜ்சிங்ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில்
உள்ளனர். அவர்கள் இதே அதிரடி ஆட்டத்தை தொடர வேண்டும். நமது பந்துவீச்சில்
பலவீனம் உள்ளது. இதை சரி செய்வது அவசியம். முன்னணி வேகப்பந்து வீரரான
ஜாகீர்கானின் பந்துவீச்சு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஏமாற்றம் அளிப்பதாக
இருந்தது. இதனால் அவர் சிறப்பாக பந்துவீச வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
இங்கிலாந்து அணி பேட்டிங் பந்து வீச்சில் சமபலத்துடன் உள்ளது. லுகேரைட்
ஹால்ஸ், பட்லா, பேர்ஸ்டோவ், கீவ்ஸ் வெட்டர், மார்கன் போன்ற சிறந்த
பேட்ஸ்மேன்களும், கேப்டன் ஸ்டூவர்ட் பிராட், சுவான், பிரேஸ்னென் போன்ற
சிறந்த பவுலர்களும் உள்ளனர். உலக கோப்பைபோட்டியிலும் இரு அணிகளும் 2முறை
மோதியுள்ளன. இரு அணிகளும் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. "சூப்பர் 8"
சுற்றில் சிறப்பாக விளையாட இந்த ஆட்டத்தை இந்திய அணி சரியாக
பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
முன்னதாக நாளை பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் "டி" பிரிவில்
உள்ள பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. நியூசிலாந்து அணி
தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தை எளிதில் தோற்கடித்தது.
comments | | Read More...

நாமக்கல்லில் விநாயகர் சிலையை கரைத்த 2 பேர் ஆற்றில் மூழ்கி பலி

பள்ளிப்பாளையம், செப்.22-
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை அடுத்து வெப்படையை சேர்ந்தவர்கள்
சீனிவாசன் (வயது 27), பிரகாஷ் (22). இவர்களும் மற்றும் சிலரும் சேர்ந்து
விநாயகர் சிலையை கரைக்க வெப்படையில் இருந்து பள்ளிபாளையம் அக்ரஹாரம்
ஓம்காளியம்மன் கோவிலுக்கு பின்புறமுள்ள காவிரி ஆற்றுக்கு நேற்று கொண்டு
வந்தனர்.
விநாயகர் சிலையை ஆற்றில் கரைத்தபோது சீனிவாசன், பிரகாஷ் ஆகிய 2 பேரும்
தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இறந்த சீனிவாசனுக்கு திருமணம் ஆகி 15 நாட்களே
ஆகி உள்ளது. புதுமாப்பிள்ளையான அவரது உடலை பார்த்து மனைவி மற்றும்
உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. பிரகாசத்துக்கு
இன்னும் திருமணம் ஆகிவில்லை.
comments | | Read More...

கோவையில் ஒரு தலைக்காதல் விபரீதம்: 9-ம் வகுப்பு மாணவி கழுத்தை அறுத்து கொலை

கோவை கணபதி கணேஷ் லே-அவுட் 5-வது வீதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது
மனைவி அஜிதா. இவர்களது மகள் அபிநயா (வயது 14). இவர் அதே பகுதியில் உள்ள
அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அபிநயா வீட்டிற்கு எதிர்
வீட்டில் வசிப்பவர் வேணுகோபால் (21). லேத் ஒர்க்ஷாப்பில் கேஸ் வெல்டிங்
தொழிலாளியாக உள்ளார். வேணுகோபால் ஒருதலையாக அபிநயாவை காதலித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அபிநயா பள்ளியில் தேர்வு எழுதிவிட்டு வீட்டில் தனியாக
இருந்தார். இதையறிந்த வேணுகோபால் யாருக்கும் தெரியாமல் அபிநயா வீட்டுக்கு
சென்று அவரிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். அதிர்ச்சியடைந்த அபிநயா
மறுப்புதெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த வேணுகோபால் தான் வைத்திருந்த
கத்தியால் மாணவி அபிநயாவின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார்.
பின்னர்தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். வேலைக்கு
சென்றுவிட்டு வீடு திரும்பிய அபிநயாவின் தாய் அஜிதா வீடு உள்புறமாக
பூட்டப்பட்டிருந்ததால் கதவை தட்டிப்பார்த்தார். நீண்ட நேரமாகியும் கதவு
திறக்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே
சென்று பார்த்தார். அங்கு மாணவி அபிநயா ரத்த வெள்ளத்தில் இறந்து
கிடந்தார். அருகில் வேணுகோபால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த
சரவணம்பட்டி போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி
வைத்தனர். வேணுகோபாலை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில்
சேர்த்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் தீவிர
சிகிச்சையளிக்கப்படுகிறது.
இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger