News Update :
Powered by Blogger.

அக்னி-5 ஏவுகணை 5,000 கி.மீ. அல்ல, 8,000 கி.மீ. தூரம் பாயக்கூடியது: சீனா

Penulis : karthik on Friday, 20 April 2012 | 01:46

Friday, 20 April 2012




அணு ஆயுதம் ஏந்தி கண்டம் விட்டு கண்டம் தாவும் திறன் கொண்ட அக்னி 5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக செலுத்தியதை ஜீரணிக்க முடியாமல் சீனா தவித்து வருகிறது.

இந்த ஏவுகணை குறித்து சீன அரசு அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்காவிட்டாலும், அந் நாட்டின் அரசு பின்பலம் கொண்ட பத்திரிக்கைகள், இந்த ஏவுகணை சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தெற்காசியப் பிராந்தியத்தில் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக அவை குற்றம் சாட்டியுள்ளன.

இந் நிலையில் சீன ராணுவத்தின் மிலிட்டரி சயின்ஸஸ் பிரிவின் ஆராய்ச்சியாளரான டியு வென்லாங், அக்னி ஏவுகணை இந்தியா சொல்வது போல 5,000 கி.மீ. தூரம் மட்டும் பாயக்கூடியதல்ல. அது 8,000 கி.மீ. தூரத்தை கடந்து செல்லத் தக்கது என்று கூறியுள்ளார்.

மற்ற நாடுகளிடையே கலக்கத்தை உருவாக்குவதைத் தவிர்க்க இந்த ஏவுகணையின் உண்மையான திறனை இந்திய அரசு மறைத்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

சீன ராணுவ பல்கலைக்கழகத்தின் பேராசியரான ஷாக் ஷாவோஷாங் குளோபல் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில், அக்னி 5 ஏவுகணையை இந்தியா மேலும் பலம் வாய்ந்த ஆயுதமாக வலுப்படுத்தக் கூடும் என்று கூறியுள்ளார்.

இந்த ஏவுகணை மூலம் இந்தியா, சீனாவுக்கு இணையான இடத்தைப் பிடித்துவிட்டதாக ஜெனீவா சர்வதேச பாதுகாப்பு மையத்தின் தலைவரான கிராம் ஹெர்ட் தெரிவித்துள்ளார்.



comments | | Read More...

ராஜபக்சேவை திடீரென சந்தித்த சுஷ்மா சுவராஜ்- 'பிரேக்பாஸ்ட்' சாப்பிட்டபடி பேச்சு!




இந்திய எம்.பி்க்கள் குழு இன்று மாலை ராஜபக்சேவை சந்திக்கவுள்ள நிலையில் இன்று காலை குழுத் தலைவர் சுஷ்மா சுவராஜ் மட்டும் � ��னியாக போய்ச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது அவருக்கு காலை விருந்தளித்துள்ளார் ராஜபக்சே. இருவரும் சாப்பிட்டுக் கொண்டே பேச்சுவார்த்தை நடத்தியதாக ராஜபக்சேவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சேவுடன் சாப்பிட விரும்பவில்லை. அப்படிச் சாப்பிட்டால் தமிழகத்தில் விமர்சனங்களை சந்திக்க நேரிடும் என்பதால், நாளை ராஜபக்சேவுடன் நடப்பதாக இருந்த காலை விருந்துடன ் கூடிய சந்திப்பை ரத்து செய்யுமாறு தமிழக எம்.பிக்கள் மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டதால் நாளைய சந்திப்பு ரத்து செய்யப்பட்டு இன்று மாலை இந்தியக் குழுவினரை ராஜபக்சே சந்திக்க திட்டம் மாற்றியமைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை திடீரென சுஷ்மா சுவராஜ் மட்டும் போய் ராஜபக்சேவை சந்தித்துப் பேசியுள்ளார். அவருக்கு ராஜபக்சே காலை உணவு அளித்து கெளரவித்துள்ளார். இருவரும் சாப்பிட்டபடியே பேசியுள்ளனர்.

இதுகுறித்து இலங்கை அதிபரின் செய்தித் தொடர்பாளர் பந்துல்ல ஜெயசேகரா கூறுகையில், இந்தியத் தூதர் அசோக் காந்தாவும் இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர்கள் த விர இலங்கை அமைச்சர்கள் பெரீஸ், லலித வீரதுங்கா ஆகியோரும் உடன் இருந்தனர் என்றார்.

சக இந்தியக் குழுவினரைத் தவிர்த்து விட்டு சுஷ்மா மட்டும் போய் ராஜபக்சவை பார்த்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் சுஷ்மா மட்டும் தனியாக போயிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.



comments | | Read More...

ஈழம் குறித்துப் பேசும் கருணாநிதி பயங்கரவாதி- சொல்கிறார் கோத்தபயா

Penulis : karthik on Thursday, 19 April 2012 | 22:52

Thursday, 19 April 2012




ஈழம் பற்றி யார் பேசுகிறார்களோ அவர்களை நாம் பயங்கரவாதிகளாகவே கருதுகிறோம். தழீழத்தை அமைக்கும் தனது கனவை, திமுக தலைவர் மு.கருணாநிதி இந்தியாவில் வைத்துக் கொள்ளட்டும், இலங்கையில் அது ஒருபோதும் சாத்தியமாகாது என ராஜபக்சேவி்ன் தம்பி கோத்தபயா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கையில் வாழும் தமிழர்களை விட மிகவும் அதிகமான தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழ்கின்றனர். அவரால் இலங்கையில் ஈழத்தை உருவாக்க முடியாது. இது ஒ� �ு இறைமையுள்ள நாடு.

ஈழம் பற்றி யார் பேசுகிறார்களோ அவர்களை நாம் பயங்கரவாதிகளாகவே கருதுகிறோம். இலங்கையில் இப்போது போர் இல்லை. இன இணக்கப்பாடு உள்ளது.

எல்லோருடைய வாழ்வும் அமைதியாக உள்ளது. இலங்கையில் உள்ள தமிழ் மக்களை கருணாநிதி தூண்டிவிடக் கூடாது. சர்ச்சைக்குரிய அறிக்கைகளின் மூலம் எமது நாட்டை அழிக்கும் இந்திய அரசியல்வாதிகளில் கருணாநிதியும் ஒருவர். இது அரசியல் ஆதாயத்துக்கான தரம்குறைந்த தந்திரோபாயம்.

எமது நாடு சுதந்திரமான ஒரு நாடு என்பதை கருணாநிதி புரிந்து கொள்ள வேண்டும். ஈழத்தை உருவாக்க அவர் முயற்சிக்கக் கூடாது. அவருக்கு ஈழத்தை அமைக்கும் விருப்பம் இருந்தால் அதை பெருமளவு தமிழர்கள் வசிக்கும் தமிழ்நாட்டில் உருவாக்கட்டும் என்றார் கோத்தபயா.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger