News Update :
Powered by Blogger.

பாதிக்கப்பட்ட தமிழர்களை சந்திக்க அனுமதி வேண்டும்:இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழு புதிய கோரிக்கை

Penulis : karthik on Sunday, 15 April 2012 | 23:42

Sunday, 15 April 2012




இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது, இலட்சக்கணக்கான அப்பாவி ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். போரின் போதும், போருக்கு பிறகும் ஈழத் தமிழர்களிடம் ஏராளமான மனித உரிமை மீறல்கள் நடந்தன. இதில் அவர்களது வாழ்வாதாரங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன.

முகாம்களில் அடைக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள். போர் முடிந்ததும் ஈழத்தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு இணையான உரிமைகள் பெற்றுத் தருவோம் என்று கூறிய மத்திய காங்கிரஸ் அரசு தற்போது மவுனமாக உள்ளது.

இந்தியா உள்பட பல நாடுகளிடம் உதவி பெறும் இலங்கை அரசு அதை தமிழர் பகுதியில் சிங்கள மயமாக்கலுக்கே பயன்படுத்தி வருகிறது. இது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்ததால், இலங்கையில் நடந்து வரும் சீரமைப்புப் பணிகளை பார்வையிட அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவை அனுப்பி ஆய்வு செய்ய முடிவு செய்தது.

பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் 16 எம்.பி.க்கள் இந்த குழுவுக்காக தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் இருந்து அ.தி. மு.க. சார்பில் ரபிபெர்னாட், தி.மு.க. சார்பில் இளங்கோவன், காங்கிரஸ் சார்பில் என்.எஸ்.வி.சித்தன், சுதர்சன நாச்சியப்பன், மாணிக்க� ��் தாகூர், கிருஷ்ணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த நிலையில் எம்.பி.க்கள் குழு பயணம் வெறும் கண்துடைப்பு நாடகம் என்று புகார்கள் எழுந்தன. இதையடுத்து இலங்கை செல்லும் குழுவில் இருந்து அ.தி. மு.க. விலகியது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ராஜபக்சேயுடன் எம்.பி.க்கள் விருந்து சாப்பிட மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவருடன் எந்த விவாதத்துக்கும் ஏற்பாடு செய்யாததால் அ.தி.மு.க. குழுவில் இடம் பெறாது என்று கூறியிருந்தார்.

தற்போது தி.மு.க.வும் எம்.பி.க்கள் குழுவில் இருந்து விலகிவிட்டது. ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதில் முதன்மையாக உள்ள தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் விலகிவிட்ட நிலையில், அந்த குழுவில் 14 எம்.பி.க்களே உள்ளனர்.

இவர்கள் இன்று மாலை டெல்லியில் இருந்து புறப்பட்டு இலங்கை செல்கிறார்கள். அவர்களிடம் நேற்று மத்திய வெளியுறவுச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் பயணத் திட்டம் பற்றிய நிகழ்ச்சி நிரல்களை விளக்கி கூறினார்.

எம்.பி.க்கள் குழுவினர் ராஜபக்சே, பசில் ராஜபக்சே, பிரீஸ், ரணில் விக்கிரமசிங்கே பிள்ளையான் உள்பட சிலரை சந்தித்து பேசுவது பற்றி தெரிவிக்கப்பட்டது. 21-ந் தேதி ராஜபக்சேயுடன் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பற்றியும் கூட்டத்தில் கூறப்பட்டது. இதற்கு எம்.பி.க்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

தி.மு.க., அ.தி.மு.க. விலகிவிட்ட நிலையில், ராஜபக்சேயுடன் சிற்றுண்டி சாப்பிடும் வி� ��ுந்து நிகழ்ச்சியை மாற்றவேண்டும் என்று குழுவில் இடம் பெற்றுள்ள தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் கூறினார்கள்.

ராஜபக்சேயுடன் 21-ந் தேதி காலை சாப்பிடுவதற்கு பதில் 20-ந் தேதி மாலை அவரை சந்திக்க ஏற்பாடு செய்யும்படி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுபோல 18-ந் தேதி இலங்கை ரெயில்வே திட்டப்பணிகளை பார்வையிட பயணத் திட்டத்தில் நிகழ்ச்சி சேர்க்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்ச ியை ரத்து செய்து விட்டு மாணிக்கன் தோட்ட முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களை சந்தித்துபேச அனுமதிக்க வேண்டும் என்றும் எம்.பி.க்கள் வலியுறுத்தினார்கள்.

பா.ஜ.க. தலைவர் சுஷ்மா சுவராஜ் இதுபற்றி கூறுகையில், இலங்கையில் இந்தியா உதவியுடன் நடக்கும் சீரமைப்பு பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை பார்வையிடுவது முக்கியம் அல்ல. முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களை சந்திப்பதே முக்கியம். அதற்காக வற்புறுத்தியுள்ளோம் என்றார்.

எம்.பி.க்கள் குழு நாளை முதல் 4 நாட்கள் இலங்கையில் பல்வேறு இடங்களுக்கு செல்லவுள்ளனர். நாளை (17-ந் தேதி) காலை இலங்கை வெளியுறவு மந்திரி பிரீஸ், பொருளாதார வளர்ச்சி மந்திரி பசி� ��் ராஜபக்சேயை சந்தித்து பேசுகிறார்கள்.

பசில் ராஜபக்சேயுடன் பேசி முடித்த பிறகு இந்திய எம்.பி.க்கள் இலங்கை பாராளுமன்றத்துக்கு செல்ல உள்ளனர். அங்கு அவர்களுக்கு சபாநாயகர் சாமல் ராஜபக்சே மதிய விருந்து கொடுக்கிறார்.

நாளை பிற்பகல் முதல் மாலை வரை தமிழ் தேசிய கூட்டணி பிரதிநிதிகளை எம்.பி.க்கள் குழுவினர் சந்தித்து பேசுகிறார்கள். இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தோட்ட தொழிலாளர் காங்கிரஸ் நிர்வாகிகளையும் எம்.பி.க்கள் சந்தித்து பேச உள்ளனர்.

நாளை மறுநாள் (புதன்) காலை இந்திய எம்.பி.க்கள் குழுவுக்கு கொழும்பில் உள்ள இந்திய தூதர் அசோக் கே.காந்தா காலை விருந்து கொடுக்கிறார். பிறகு எம்.பி.க்கள் இலங்கை வடக்கு பகுதிக்கு செல்கிறார்கள். அங்கு ஈழத்தமிழ் எம்.பி.க்களை சந்தித்து பேசுகிறார்கள். மனித உரிமை சங்கத் தினரையும் சந்திக்கிறார்கள்.

அன்றிரவு யாழ்ப்பாணத்தில் தங்குகிறார்கள். 19-ந் தேதி காங்கேசன் துறைமுகம் சென்று சீரமைப்பு பணிகளை பார்வையிடுகிறார்கள். அன்று எதிர்க்கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்கேயை சந்தித்து பேசுகிறார்கள்.

20-ந் தேதி இலங்கை கிழக்கு பகுதிகளை பார்வையிடுகிறார்கள். அங்கு மாகாண முதல்-மந்திரி பிள்ளையானை சந்தித்து பேசுகிறார்கள். 21-ந் தேதி சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்சேயை சந்தித்து விட்டு எம்.பி.க்கள் குழு இந்தியா திரும்ப திட்டமிட்டுள்ளது.

இந்திய எம்.பி.க்கள் குழுவினர், போர் குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கும் ராஜபக்சேயின் தம்பி கோதபயாவை சந்தித்து பேசமாட்டார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் ஈழத் தமிழர்க� ��் முகாம்களை பார்வையிட எம்.பி.க்கள் குழு விடுத்துள்ள கோரிக்கை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். எம்.பி.க்களின் கோரிக்கை ஏற்கப்படுமா? என்பது இன்று மாலை தெரிய வரும்.



comments | | Read More...

இருக்கிற தமிழர்களாவது அச்சமின்றி வாழ வழி செய்யுங்கள் -இல.கணேசன்




இலங்கையில் தமிழ் இனத்தையே அழித்து விட்டது சிங்கள அரசு. எனவே இலங்கையில் தற்போது மிச்சமிருக்கிற தமிழர்களையும் அச்சமின்றி, நிம்மதியாக, சம உரிமைகளுடன் வாழ வழி செய்யும் விதத்தில் இலங்கைக்குப் போகிற இந்திய எம்.பிக்கள் குழு செயல்பட வேண்டும் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

ராமநாதபுரம் வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இலங்கை அரசு ஒரு இனத்தையே அழித்து விட்டது. இந்த நிலையில் இலங்கையில் மீதமிருக்கும் தமிழர்கள் அச்சமில்லாமலும், நிம்மதியாகவும் வாழ வழிசெய்யப்பட வேண்டும். மேலும் அவர்களு க்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும்.

இலங்கைக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் இந்தியக் குழு செல்கிறது. இந்த குழு இலங்கையில் என்ன செய்ய வேண்டும் என்பதை பாஜக ஏற்கனவே தெரிவித்துள்ளது என்றார் இல.கணேசன்.



comments | | Read More...

பிரதீபாபாட்டீல்க்கு பங்களா கட்ட ஆங்கிலேயர் கால கட்டிடங்கள் இடிப்பு




ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், வருகிற ஜூலை மாதம் ஓய்வு பெறுகிறார். ஓய்வுக்கு பின்பு, ஜனாதிபதிகள் அரசு அளிக்கும் இல்லத்தில் தங்கி கடைசி காலத்தை கழிப்பது மரபாக உள்ளது. இதற்காக டெல்லியிலோ அல்லது அவர்களது சொந்த மாநிலத்திலோ அரசு செலவில் வீடு கட்டி கொடுக்கப்படும். 

பிரதீபா பாட்டீல் சொந்த மாநிலத்திலேயே வசிக்க விரும்பியதால், மராட்டிய மாநிலம் புனேயில் வீடு கட்டி கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ராணுவத்துக்கு சொந்தம ான 5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னாள் ராணுவ அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதிக செலவில் புதிய பங்களா கட்டப்பட உள்ளதால், எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆனால், எதிர்ப்பையும் கண்டனத்தையும் பொருட்படுத்தாமல், கட்டுமான பணியை அரசு தொடங்க உள்ளது.

நிலம் எடுக்கப்பட்டதிலோ, அல்லது பங்களா கட்டப்படுவதிலோ மரபு எதுவும் மீறப்படவில்லை, என்றும் மத்திய அரசும், ஜனாதிபதி மாளிகையும் விளக்கம் அளித்துள்ளது. 

பிரதீபா பாட்டீலுக்காக கட்டப்பட உள்ள ஓய்வுகால பங்களா, அங்கு எற்கனவே உள்ள பிரிட்டிஷ் காலத்து 2 பங்களாக்களை இடித்து தள்ளிவிட்டுதான் அமைக்கப்பட இருக்கிறது. இதுவரை எந்த ஜ� ��ாதிபதிக்கும் டெல்லிக்கு வெளியே ஓய்வுகால பங்களா கொடுக்கப்படவில்லை என்ற மரபு இருந்தாலும், முந்தைய ஜனாதிபதிகள் அதை விரும்பியதும் இல்லை. 

முதல் ஜனாதிபதியான ராஜேந்திரபிரசாத், பதவிக்காலம் முடிந்த பின்பு சொந்த மாநிலமான பீகாரில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு திரும்பினார். அடுத்து ஜனாதிபதிகள் டாக்டர் ராதாகிர� ��ஷ்ணன், வி.வி. கிரி, சஞ்சீவ் ரெட்டி, ஆகியோர் பதவிக்காலம் முடிந்த உடன் சொந்த ஊருக்குச் சென்று பூர்வ� ��க வீட்டில்தான் வாழ்ந்தனர்.

ஆர்.வெங்கட்ராமன், சென்னையில் சிறிது காலம் தங்கி இருந்தார். கடைசி காலத்தில்தான் டெல்லியில் அரசு பங்களாவில் வசித்தார். ஜெயில்சிங், சங்கர் தயாள் சர்மா, கே.ஆர். நாராயணன் ஆகியோர் ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறியதும், டெல்லியில் உள்ள அரசு பங்காளவுக்கு சென்றனர்.  < o:p>

பிரதீபா பாட்டீலுக்கு முன்பு ஜனாதிபதி பதவி வகித்த அப்துல்கலாமும் டெல்லி அரசு பங்களாவில்தான் தங்கியுள்ளார். தற்போது பிரதீபா பாட்டீலுக்குதான் முதல் முறையாக டெல்லிக்கு வெளியே அரசு செலவில் பங்களா கட்டப்படுகிறது.

ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோதே, பிரதீபாபாட்டிலுக்கு எதிராக சர்ச்சைகள் கிளம்பின. பதவி ஓய்வு பெறும் போதும் அவருக்கு எதிராக சர்ச்சைகள் கிளம்பி இருக்கிறது.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger