News Update :
Powered by Blogger.

நடராஜன் கைது செய்யப்பட்டது ஏன்?

Penulis : karthik on Sunday, 19 February 2012 | 08:51

Sunday, 19 February 2012

 
 
 
நில அபகரிப்பு மற்றும் மிரட்டல் தொடர்பாக நடராஜன் கைது செய்யப்பட்டார் என்று தஞ்சாவூர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
 
நேற்று இரவு தனது பெசன்ட் நகர் வீட்டில் வைத்து தஞ்சாவூர் போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டார் நடராஜன். அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் தஞ்சாவூர் போலீஸார் ஒரு அறிக்கையை வெளியிட்டனர்.
 
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
 
தஞ்சை அருகே விளார் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் தஞ்சாவூர் மாவட்டம் விளார் பஞ்சாயத்திற்கு உட்பட்ட விளார் கிராமத்தில் உள்ள தனது தகப்பனார் செங்கமலத்தின் பெயரில் இருந்த 20 ஏக்கர் புஞ்சை நிலத்தில் சுமார் 15 ஆயிரம் சதுரஅடி இடத்தை சட்ட விரோதமாக எம்.நடராஜன், சிலருடன் சேர்ந்து அதில் இருந்த மரங்கள் மற்றும் வேலிகளை சேதப்படுத்தி ஆக்கிரமிப்பு செய்து இருந்தார்.
 
இதுகுறித்து கேட்டபோது தன்னை அச்சுறுத்தி மிரட்டினார் என்று கூறியிருந்தார். அதன்பேரில் தஞ்சை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை போலீசாரால் எம்.நடராஜன் சென்னையில் இருந்தபோது சென்னை மாநகர காவல்துறையினர் உதவியுடன் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



comments | | Read More...

சென்னையில் கல்லூரி மாணவி கொலை!! ஒருதலைக்காதல் விபரீதம்!

 

சென்னையில் ஒருதலைக்காதல் விவகாரத்தால் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனாம்பேட்டை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் வசித்து வந்தவர் சங்கீதா (19). இவர் காயிதே மில்லத் கல்லூரியில் படித்து வந்தார். அதே பகுதியில் வசித்து வந்த மணிகண்டன் என்பவர் சங்கீதாவை ஒருதலையாக காதலித்து வந்தார்.

ஆனால் மணிகண்டனின் காதலை சங்கீதா ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டு அருகே சங்கீதா சென்று கொண்டிருந்த போது மணிகண்டன் அவரை வழிமறித்து பேசினார். என்னை தவிர வேறு யாரும் உன்னை திருமணம் செய்தால் நான் சும்மாவிட மாட்டேன் என மிரட்டினார். ஆனால் சங்கீதா இதனை காதில் வாங்கிக் கொள்ளாமல் நடந்து சென்று கொண்டே இருந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தினார். இதில் உடலின் பல்வேறு இடங்களில் கத்திக் குத்து விழுந்தது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் சங்கீதாவின் உயிர் பிரிந்தது.

கூட்டத்தை பார்த்ததும் மணிகண்டன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அங்கிருந்தவர்கள் அவரை விரட்டிச் சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் தேனாம்பேட்டை போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
போலீசாரிடம் மணி அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:
சங்கீதாவை பார்த்ததுமே எனக்கு பிடித்துவிட்டது. அவரது முதல் பார்வையிலேயே காதல் வயப்பட்டேன். சங்கீதா எல்லோரிடமும் கலகலப்பாக பேசுவார். அவரது இந்த சுபாவம், அவர் மீதான காதலை மேலும் அதிகரித்தது.
2 ஆண்டுகளுக்கு முன்பு அவரிடம் காதலை வெளிப்படுத்தினேன். முதலில் தயங்கிய சங்கீதா, பின்னர் காதலை ஏற்றுக் கொண்டார். நேரிலும் போனிலும் அடிக்கடி பேசுவோம்.
கல்லூரியில் சேர்ந்த பிறகு என்னுடன் பேசுவதை படிப்படியாக குறைத்துவிட்டார். கடந்த 14-ம் தேதி காதலர் தினத்தன்று அவருடன் பேச முயன்றும் முடியவில்லை.
பள்ளி மாணவியாக இருந்தபோது காதலித்தவள், கல்லூரிக்கு சென்றதும் காதலிக்க மறுக்கிறாளே என்று ஆத்திரம் வந்தது. என்னை காதலிக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று நினைத்தேன்.
அதனால் கத்தியுடன் அவரது வீட்டுக்கு சென்றேன். காதலை ஏற்றுக் கொண்டால் விட்டு விடுவது, மறுத்தால் கொன்று விடுவது என்ற முடிவுடன் காத்திருந்தேன். வேலையில் இருந்து வந்த சங்கீதாவிடம் பேச முயன்றேன். என்னை மறந்துவிடு என அவர் கூறியதால் கத்தியால் குத்திக் கொலை செய்தேன். இவ்வாறு மணி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
comments | | Read More...

தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டை குறைக்க நடவடிக்கை: சென்னையில் மேலும் ஒரு மணி நேரம் மின்வெட்டு

 

தமிழ்நாட்டில் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஒரு நாளுக்கு சுமார் 12 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது ஒரு நாளுக்கு 7 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரமே கிடைக்கிறது. இதனால் தினமும் 4500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை நிலவுகிறது. மின் பற்றாக்குறை காரணமாக தமிழ்நாடு முழுவதும் மின் வெட்டு அமல் படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் தினமும் ஒரு மணி நேரம் மின்வெட்டு உள்ளது. மற்ற மாவட்டங்களில் அதிகபட்சமாக 8 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. தொழிற்சாலைகளில் 20 சதவீதம் மின் வெட்டு கடைபிடிக்கப்படுகிறது. புதிய மின் திட்டங்களை உரிய காலத்தில் தொடங்காததும், ஏற்கனவே உள்ள மின் உற்பத்தி நிலையங்களை சீராக முறைப்படி பராமரிக்காததும், நிதி நெருக்கடியில் தவித்துக் கொண்டிருக்கும் மின் வாரியம், பணம் செலவழித்து மற்ற மாநிலங்களில் இருந்து அதிக அளவு மின்சாரத்தை வாங்க இயலாமல் இருப்பதும் தான் மின் தட்டுப்பாட்டுக்கு முக்கியகாரணமாகும்.

இந்த குறைகளை தீர்த்து 2013-ம் ஆண்டுக்குள் தமிழ் நாட்டை மின்உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்ற முதல்- அமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் சென்னையை தவிர்த்த மற்ற மாவட்டங்களில் உள்ள 8 மணி நேர மின்வெட்டு மக்களிடம் கடும் அவதியை ஏற்படுத்தி உள்ளது.

தொழிற் சாலைகளிலும் திட்ட மிட்டப்படி உற்பத்தியை நடத்த முடியாத நிலை உள்ளது. இதனால் மக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து உயர்அதிகாரிகளை நேற்று அழைத்து ஆலோசனை நடத்திய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மின்தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்த வழி முறைகளை அறிக்கையாக தயாரித்து அளிக்குமாறு அறிவுறுத்தினார். அதன்படி பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை மின்வாரிய அதிகாரிகள் தயாரித்தனர்.

இந்த அறிக்கையை தமிழக அரசிடம் இன்று மின் வாரிய அதிகாரிகள் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையில், சென்னை மற்றும் பெரிய தொழிற்சாலைகளுக்கு மின்வெட்டு அளவை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் மிச்சமாகும் கணிசமான மெகாவாட் மின்சாரத்தை மற்ற மாவட்டங்களுக்கு வழங்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரையை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் என்று தெரியவந்துள்ளது. இதன் காரணமாக தமிழ் நாட்டில் அமலில் உள்ள மின்வெட்டில் மாற்றங்கள் வர உள்ளது. சென்னையில் தற்போது ஒவ்வொரு பகுதி வாரியாக தினமும் ஒரு மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. இனி இந்த மின்வெட்டு 2 மணி நேரமாக அதிகரிக்கப்படுகிறது.

சென்னை நகருக்கு தினமும் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. கூடுதலாக ஒரு மணி நேரம் மின் வெட்டை சென்னையில் அமல்படுத்தும் பட்சத்தில் தினமும் 300 மெகாவாட் மின்சாரம் மிச்சமாக வாரியத்துக்கு கிடைக்கும்.

சென்னையில் மின்சாரத்தை மிச்சப்படுத்துவது போன்று தொழிற்சாலைகளுக்கும் விடுமுறை தினம் அறிவித்து, மின்சாரத்தை மிச்சப்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது தொழிற்சாலைகளுக்கு 20 சதவீத மின்வெட்டு உள்ளது.

இந்த மின்வெட்டு 40 சதவீதமாக அதிகரிக்கப்பட உள்ளது. மேலும் பெரிய தொழிற்சாலைகளுக்கு 2 நாட்கள் மின்சார விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் 700 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும்.

சென்னையில் மிச்சமாக கிடைக்கும் 300 மெகாவாட், தொழிற்சாலை விடுமுறையால் மிச்சமாக கிடைக்கும் 700 மெகா வாட்மூலம் மின்சார வாரியத்துக்கு தினமும் சுமார் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இந்த மின்சாரத்தை சென்னை தவிர்த்த மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்து கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை காரணமாக மாவட்டங்களில் உள்ள மின்வெட்டு நேரம் கணிசமாக குறையும். தற்போது சென்னை தவிர தமிழ்நாடு முழுவதும் 8 மணி நேர மின்வெட்டு உள்ளது. இந்த மின்வெட்டு 5 மணி நேரமாக குறையும். இது தமிழக மக்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும்.

இதற்கிடையே வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்குவது பற்றியும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது மின்வாரியம் சுமார் 7 ஆயிரம் கோடி கடனில் உள்ளது. இந்த நிலையில் வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்கினால், நிதிநிலைமை மேலும் மோசம் அடையலாம் என்று கருதப்படுகிறது.

வெளிச்சதையில் ஒரு யூனிட் மின்சாரம் நேரத்துக்கு தகுந்தபடி ரூ.6 முதல் ரூ.16 வரை பணம் கொடுத்து வாங்கப்படுகிறது. இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் மின்சாரம் மக்கள் நலன் கருதி, யூனிட் ஒன்றுக்கு 80 பைசாவுக்கு தான் கொடுக்கப்படுகிறது. எனவே மின் கட்டணத்தை உயர்த்தினால் மட்டுமே இந்த சிக்கலுக்கு தீர்வு காணமுடியும் என்று சொல்கிறார்கள்.

இந்த சிக்கலையும் மீறி வெளிச்சந்தைகளில் மின்சாரம் வாங்குவது பற்றி தமிழக அரசு இன்று முடிவு எடுக்க உள்ளது. வெளிச்சந் தைகளில் கூடுதல் மின்சாரம் வாங்கும் பட்சத்தில் தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு கால அளவை மேலும் குறைக்க முடியும். மற்ற மாவட்டங்களில் உள்ள தனியார் மின் உற்பத்தியாளர்களிடமும் மின்சாரம் வாங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அப்படி மின்சாரம் வாங்கினால் 400 மெகாவாட் மின்சாரம் தினமும் கூடுதலாக கிடைக்கும். அதுபோல மத்திய தொகுப்பில் இருந்து கூடுதலாக தினமும் 100 மெகாவாட் மின்சாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. இவற்றை வைத்து சமாளித்து விட்டால், வரும் மே மாதம் முதல் காற்றாலை மூலம் ஓரளவு மின்சாரம் கிடைக்க தொடங்கி விடும்.

மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை தினமும் 2500 மெகாவாட் வரை மின்சாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதை வைத்து கோடையில் ஏற்படும் மின்தட்டுப்பாட்டை சமாளிக்கலாம் என்று மின் வாரிய அதிகாரிகள் கருதுகிறார்கள்.

இதற்கிடையே மின் வெட்டை அமல்படுத்துவதில் பயங்கர குளறுபடிகள் நடப்பதாக மக்கள் குற்றச்சாட்டுகிறார்கள். எந்தெந்த நேரங்களில் மின்சாரம் வராது என்பதை தெள்ளத் தெளிவாக கூறி விட்டால், அதற்கு ஏற்ப, தங்கள் அன்றாட பணிகளை செய்து கொள்ள வசதியாக இருக்கும் என்று மக்கள் கூறுகிறார்கள். எனவே மாவட்டங்களுக்கு மின்வெட்டு நேரம் குறைப்பு அறிவிப்பு வெளியிடப்படும் போது, எந்தெந்த நேரத்தில் மின்சாரம் இருக்காது என்ற விவரம் தெளிவாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் அனைத்து தரப்பினருக்கும் வேறுபாடியின்றி மின்வெட்டை அமல்படுத்தவும் தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் மின் வெட்டு குறைப்பு நாளை மறுநாள் (20-ந் தேதி திங்கட்கிழமை) முதல் நடை முறைக்கு வரும் என்று மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger