News Update :
Powered by Blogger.

நடிகை பாவனாவின் காதல் விளையாட்டு!

Penulis : karthik on Monday, 13 February 2012 | 21:09

Monday, 13 February 2012

 
 
செலிபி‌ரிட்டி கி‌ரிக்கெட் லீக் என்ற பெய‌ரில் இந்தியாவின் நட்சத்திரங்கள் கி‌ரிக்கெட்டை பதம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
மைதானத்தில் நடக்கும் இந்த விளையாட்டைவிட கேல‌ரியில் நடக்கும் கோல்மால் ரொம்பவே சுவாரஸியம். கேரள நடிகர்களின் டீமை உற்சாகப்படுத்த பாவனாவை நியமித்திருக்கிறார்கள். மைதானத்துக்கு வந்தால் இவர் உற்சாகப்படுத்துகிறாரோ இல்லையோ, இவர் உற்சாகமாகிவிடுகிறார்.
 
காரணம் நடிகர் ரா‌‌ஜீவ் பிள்ளை. இந்த ஆறடி ஆணழகனைக் கண்டால் பாவனாவின் முகம் பல்ப் போட்டுவிடுகிறது என்று கேரள மீடியாக்கள் ச‌ரியாக கல்வீச, ஐயோ...
 
அது காதலேயில்லை, சும்மா பேசினாலே காதலா என்றெல்லாம் பாவனா பம்மிப் பார்க்கிறார். ஆனால் இது நிஜக்காதல்தான் என்று மீடியாக்கள் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறது. சில வேளை டைம்பாஸாகவும் இருக்கலாமில்லையா.
comments | | Read More...

மெரினாவுக்கு பசங்கள கூட்டிக்கிட்டு போங்க சார்!

 
 


பொங்கலுக்குப்பிறகு திரைப்படம் பார்க்கும் சூழ்நிலை.விருப்பமில்லாமல் அதுவும்இரவுக்காட்சி.பனிரெண்டு மணிக்கு முடியும்.படம் பார்த்து திரும்பும்போது சந்தோஷமாகஉணர்ந்தேன்.காரணம் மெரினாவின் நகைச்சுவை மட்டுமல்ல! சென்னையில் மாணவன் கொலை செய்தவிவகாரத்தில் பலரும் சினிமாவை குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.அதில் உண்மைஇருக்கிறது என்பது வேறு விஷயம்.தனிப்பதிவாக எழுத வேண்டிய விஷயமும் கூட! கொலைசெய்வதை பெருமையாக காட்டும் சினிமா,குடித்துக்கொண்டே நாட்டுக்கு நல்லது சொல்லும்நாயகர்கள் இன்னும் இன்னும்.....
 
மெரினாவில்சுண்டல் விற்கும் ஏழை எளிய மாணவர்களின் கல்யாண குணங்களை சொல்கிறதுமெரினா.கண்டெடுத்த நகையை உரியவர்களிடம் அடையாளம் கேட்டு ஒப்படைக்கும்சிறுவன்.இவனைத்தானே இன்றைய குழந்தைகள் பின்பற்ற வேண்டும்.அடுத்தவன் பணத்தை எப்போதுசுருட்டலாம் என்று குழந்தைகளின் முன்னால் திட்டமிடும் சூழலில் இதெல்லாம்கற்பிக்கப்படவேண்டிய விஷயம்.மருத்துவ உதவிக்கு பணம் பெற்று வழங்குவது,தாத்தாவின்உடலை வாங்க போராடுவது,நண்பனுக்காக ஏங்குவது என்று தமிழ் சினிமா சிறுவர்களுக்குகற்பிக்கும் நல்ல விஷயங்கள் அதிகம்.பிச்சை எடுக்க வேண்டாம் நான் காப்பாற்றுகிறேன்என்று பாண்டி சொல்கிறான்.
 
முதியவர்களைதெருவில் விடும் பிள்ளைகள் அதிகரிக்கும் சூழலில் தாத்தா,பாட்டி மீதுபேரக்குழந்தைகளுக்காவது பாசம் தோன்றும்.படம் முழுக்க அன்பும்,உதவும் குணமும்நெகிழ்ச்சியுமாக நகர்கிறது.நகைச்சுவையாகவும்தான்.பரிசு வழங்க தன்னை அழைக்கவேண்டுமென விரும்பும் தாத்தா.அந்த சூழலின் இயல்பான உளவியல்.சிறுவர்களுடன்தனக்குள்ள உறவில் நிச்சயம் அப்படியான எதிர்பார்ப்பு தோன்றவே செய்யும்.உயிருக்குயிரானதமிழ் சினிமா காதலை தாண்டி நிஜமான காதலை!? காட்டுகிறது படம்.நகைச்சுவைக்காகஎன்றாலும் பல காதல்கள் இப்படியும் ஆகிவிடுவதுண்டு.
 
பாடல்கள்அவ்வளவாக எடுபடாமல் போனது பலத்தை குறைத்து மதிப்பிடச் செய்கிறது.ஆனால் ஆக்காட்டிஆறுமுகம் பாடும் பழைய பாடல்கள் இந்தக்குறையை போக்குவதாக இருக்கிறது.பாண்டியைதுவக்கத்தில் உதைக்கும் காட்சியும்,கல்லால் அடிக்கப்பட்டு ரத்தம் சிந்தும்காட்சியும் நெருடலை ஏற்படுத்துகிறது.தமிழ்சினிமா என்றால் ஏதாவது சண்டைக்காட்சிஇருக்கவேண்டும் என்று நினைத்திருப்பார்கள் போல!ஆனால் விளைவுகள் வருந்தும் காட்சியைதோற்றுவிக்கிறது.வழக்கமான தமிழ்சினிமா போல இல்லாமல் நல்ல முயற்சி.இன்றையசமூகத்திற்கு எத்தகைய குணங்கள் தேவை என்பதில் இயக்குநர் தெளிவாகஇருக்கிறார்.இதற்காகவே பாண்டிராஜை தாராளமாக பாராட்டலாம்.
comments | | Read More...

நடிகரின் விரலை கடித்த ரசிகை

 
 
பிரபல இந்தி நடிகர் ஜான் ஆப்ரகாம், 12.02.2012 கர்நாடக மாநிலம் மங்களூரில் நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்தார். விழா முடிந்ததும், அந்த வளாகத்தை அவர் சுற்றிப் பார்த்தார். அப்போது, அவரை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.
 
ஒவ்வொரு ரசிகரும், அவரிடம் கைக்குலுக்கினார்கள். அப்போது ஒரு ரசிகை திடீரென அவர் கையைப் பிடித்து விரலை கடித்துவிட்டார். அலறி அடித்த ஜான் ஆப்ரகாம் ரசிகையை தள்ளிவிட்டார்.
 
 
உடனடியாக பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக காரில் ஏற்றி அந்த இடத்தில் இருந்து கொண்டு சென்றனர். நடிகரின் விரலை கடித்த ரசினை ஜான் ஆப்ரகாமை தொண்டு விட்டேன் என்று கூச்சலிட்டவாறு ஓடினார்.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger