News Update :
Powered by Blogger.

எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் அரசு பேரு‌ந்துக‌ளி‌ல் கொள்ளை.!

Penulis : karthik on Thursday, 19 January 2012 | 19:24

Thursday, 19 January 2012

தமிழகம் முழுவதும் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் அரசு பஸ்களில் கூடுதல்
கட்டணம் பெற்று மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
தமிழகத்தில் தற்போது பஸ் கட்டணம் உயர்த்தியுள்ளது பொதுமக்களை கடுமையாக
பாதித்துள்ளது. கடந்த ஆண்டு பஸ் கட்டணத்தைவிட 50 சதவீதத்திற்குமேல்
கட்டணம் அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் அ‌தி‌ர்‌ப்தியை
ஏற்படுத்‌தியுள்ளது. ஒருபுறம் இப்படி இருக்க தமிழகத்தில்
அரசுபோக்குவரத்து கழகம் மறைமுகமாக மக்களை ஏமாற்றி வருவது
வேதனையானவிஷயமாகும்.
ஆம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் விரைவு பேருந்து, சொகுசு
பேருந்து இப்படி பல வகையாக பிரித்துள்ளனர். இதெல்லாம் நீண்ட தூரம்
செல்லும் பஸ்களுக்கு பொருந்தும். மற்றபடிஅனைத்து பஸ்களும் ஒன்றுதான். ஒரே
கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். ஆனால் தமிழகம் முழுவதிலும் தமிழ்நாடு
அரசு போக்குவரத்து கழகம் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் மக்களிடம்
கொள்ளையடித்து வருவது வருத்தம் அளிக்கும் விஷயமாகும்.
பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ் இயக்க‌ப்பட்ட பிறகு அனைவரும் இந்த பஸ்ஸில்
சென்றால் நேரம் ‌குறைவதா‌ல் பயணிகள் இந்த பஸ்ஸில் செல்லவே
முக்கிய‌த்துவம் கொடுக்கின்றனர். ஆனால் பாயிண்ட்டூ பாயிண்ட் பஸ்ஸிற்காக
தனி கட்டணம் வசூலிப்பதில்லை. இந்த நிலையில் பாயிண்ட் டூ பாயிண்ட்
பெயரிலேயே எக்ஸ்பிரஸ் என்று பெயரிட்டு பயணிகளிடம் 50 சதவீதத்திற்கு மேல்
கட்டணம் வசூல் செய்வது எந்த விததத்தில் சரி என தெரிவில்லை.
உதாரணமாக ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலத்திற்கு அனைத்து பஸ்களும் ரூ.26
கட்டணம் உள்ளது. ஆனால் எக்ஸ்பிரஸ் என்று போர்டு மட்டும் போட்டுவிட்டு
மிகவும் மோசமாக பஸ்ஸில் பயணம் செய்தால் இதே இடத்திற்கு செல்ல ரூ.35
வசூலிக்கப்படுகிறது.
இதேபோல் சத்தியமங்கலத்தில் இருந்து கோயமுத்தூர் செல்ல சாதாரண பஸ்களில்
பாயிண்ட் டூ பாயிண்ட் உட்பட ரூ.29 வசூலிக்கப்படுகிறது. ஆனால் எக்ஸ்பிரஸ்
என்ற பெயரில் இதே இடத்திற்கு செல்ல ரூ.39 வசூலிக்கப்படுகிறது. (மீதம்
ஒருரூபாய் கண்டக்டர் கொடுப்பதில்லை என்பது வேறுவிஷயம்).
இந்த கட்டணம் குறித்து எக்ஸ்பிரஸ் பஸ் கண்ணாடியில் எழுதியிருந்தால் கூட
பயணிகள் கட்டணம் அதிகம் என அடுத்த பஸ்ஸில் செல்வார்கள். ஆனால் மக்களை
ஏமாற்ற அதையும் செய்வதில்லை. பஸ்ஸில் பயணிகள் ஏறி பஸ்
சென்றுகொண்டிருக்கும்போது கண்டக்டரிடம் டிக்கட் வாங்கும்போதுதான்
இந்தகூடுதல் கட்டணம் பற்றிய தகவல் தெரியவரும்.
ஆகவே அரசு பஸ்களில் பயணிகளை இப்படி ஏமாற்றுவது எந்த விதத்தில் நியாயம்
என்பதை ஆட்சியாளர்கள்தான் கூறவேண்டும்.
நன்றி: வெப் துனியா
comments | | Read More...

வியாழக்கிழமை கோச்சடையான் பட பூஜை

Penulis : karthik on Monday, 16 January 2012 | 04:56

Monday, 16 January 2012

ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் " ராணா " படம் நிறுத்தப்பட்டது.
அது வரலாற்று படம் என்பதால் குதிரை சவாரி , வாள் சண்டை போன்றவற்றில்
ரஜினி நடிக்கவேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. டாக்டர்கள் அதுபோன்ற
காட்சிகளில் நடிக்கக்கூடாது எனஅறிவுறுத்தியதால் படம் கைவிடப்பட்டது.
அதற்கு பதில் " கோச்சடையான் " என்ற படத்தில் ரஜினி நடிக்கப் போவதாக
அறிவிக்கப்பட்டது.
இப்படத்தை ரஜினி மகள் சவுந்தர்யா இயக்குகிறார். கே.எஸ். ரவிக்குமார்
டைரக்ஷன் மேற்பார்வை செய்கிறார். ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கிறார். இதில்
, கதாநாயகியாக நடிக்க வித்யாபாலன் , தீபிகா படுகோனே , அனுஷ்கா , கத்ரினா
கயூப் போன்றோர் பரிசீலிக்கப்பட்டனர்.
இறுதியில் கத்ரினா தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினியின்
தங்கை வேடத்தில் சினேகா நடிக்கிறார். " மிருகம் " ஆதியும் முக்கிய
கேரக்டரில் வருகிறார். கோச்சடையான படப்பிடிப்பு வருகிற
19- ந்தேதி வியாழக்கிழமை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் உள்ள பிள்ளையார்
கோவிலில் துவங்குகிறது.
முன்னதாக கோவிலில் சிறப்பு பூஜை நடக்கிறது. இதில் திரையுலகமுக்கிய
பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள். பின்னர் ரஜினி , சினேகா நடிக்கும்
காட்சிகள் படமாக்கப்படுகிறது. அடுத்த வாரம் கிழக்கு கடற்கரை சாலையில்
உள்ள பங்களா ஒன்றில் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கிறது.
comments | | Read More...

அஜீத் மகள் மனதைக் கவரும் அழகி: ராதிகா சரத்குமார்

அஜீத் , ஷாலினியின் மகள் அனோஷ்காஒரு அழகி என்று நடிகை ராதிகா சரத்குமார்
தெரிவித்துள்ளார்.
தல அஜீத் , அவரது மனைவி ஷாலினி , மகள் அனோஷ்கா மற்றும் சரத்குமார் ,
அவரது மனைவி ராதிகா , மகன் ராகுல் ஆகியோர் அண்மையில் சந்தித்தனர்.
அப்போது அஜீத்தின் செல்ல மகள் தனது மனதைக் கொள்ளை கொண்டதாக ராதிகா
தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது ,
அஜீத் மகள் அனோஷ்கா ஒரு அழகி. அவள் எங்கள் மனங்களை எல்லாம் கொள்ளை
கொண்டுவிட்டாள் என்று எழுதி புகைப்படமும் வெளியிட்டுள்ளார்.
அஜீத் படப்பிடிப்புகளில் பிசியாக இருப்பதால் நேரம் கிடைக்கும் போதெல்லாம்
தனது செல்ல மகளுடன் விளையாடி மகிழ்கிறார். ஷூட்டிங் , ஷூட்டிங் என்று
ஓடிவிடுவதால் மகளுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை என்பதால் அஜீத்
புத்தாண்டை மனைவி , மகளுடன் சிங்கப்பூரில் கொண்டாடினார் என்பது
குறிப்பிடத்தக்கது.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger