News Update :
Powered by Blogger.

தில்லானா மோகனாம்பாள் ஷூட்டிங் ஸ்போட் காணக் கிடைக்காத வீடியோ

Penulis : karthik on Sunday, 27 November 2011 | 23:10

Sunday, 27 November 2011

 
 

1968-ல் சென்னைக்கு வந்த வெளிநாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் தமிழ்சினிமாவை பற்றிய ஒரு டாகுமென்ட்டரி எடுத்திருக்கிறார். அதைதான் நமக்கு அனுப்பியிருந்தார் செல்வன். தில்லானா மோகனாம்பாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த விஷுவல் எவ்வளவு பெரிய கலைஞர்களையெல்லாம் நாம் இழந்திருக்கிறோம் என்ற ஏக்கத்தைதான் ஏற்படுத்தியது.


இன்று உருப்படியாக படம் எடுக்கிறார்களோ இல்லையோ? 'மேக்கிங் ஆஃப் ஸோ அண் ஸோ' என்று தனியாக ஒரு படத்தை எடுத்து தமது ஹோம் தியேட்டரிலேயே 100 நாட்கள் ஓடவிட்டு சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்கள். ஆனால் அந்த காலத்தில் மானிட்டரும் இல்லை. மண்ணாங்கட்டியும் இல்லை. எவ்வளவு அழகாக அந்த கலைஞர்களுக்கு சொல்லித் தருகிறார் பாருங்கள் தயாரிப்பாளரும் டைரக்டருமான ஏ.பி.நாகராஜன்.

இந்த டாகுமென்ட்டரியை எடுத்தவர் மிகவும் குசும்பான ஆள் போலிருக்கிறது. சிவாஜி பத்மினி உள்ளிட்ட நமது கலைஞர்களின் மேக்கப் சென்சை பற்றியெல்லாம் செமத்தியாக கிண்டலடித்திருக்கிறார். யூ ட்யூப்பில் படம் ஓடும் இடத்திற்கு கீழ் புறத்திலேயே cc என்றொரு இடம் இருக்கிறது. அதை க்ளிக் செய்தால் ஆங்கிலத்தில் சப் டைட்டில் வருகிறது. படித்து இன்புறுங்கள் வாசகர்களே...
thillana mokanaampal video , old tamil movie shooting spot video , movies shooting spot videos , youtube video

comments | | Read More...

மயக்கம் என்ன திரை விமர்சனம்

 
 
படம் : மயக்கம் என்ன

நடிப்பு : பதனுஷ் , ரிச்சா கங்கோபதி, மற்றும்
பலர்

இசை : ஜி .வி பிரகாஸ்

இயக்கம் : செல்வராகவன்

தயாரிப்பு : ஜெமினி பிலிம் சர்கிட்


"காதல் கொண்டேன்", "புதுப்பேட்டை" ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து தனுஷ்வை வைத்து செல்வராகவன் இயக்கும் 3வது படம் "மயக்கம் என்ன". தனுஷ்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ரிச்சா தமிழில் அறிமுகமாகிறார். அடுத்த தலைமுறையினர் பற்றியும், அவர்களின் பிரச்சனையை மையமாக வைத்து உருவாகும் "மயக்கம் என்ன", முழுக்க முழுக்க இளைய தலைமுறையினரை மையப்படுத்தி இருக்கும். படத்தின் கதை மொத்தம், தனுஷ், ரிச்சா இருவரை மையம் கொண்டே எடுக்கப்பட்டுள்ளது.

ஏ.யூ.எம். புரொடக்சன்ஸ் தயாரிக்க, கதை, திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் செல்வராகவன். கூடவே படத்தில் 2பாடல்களையும் எழுதியுள்ளார். செல்வராகவனுடன், தனுஷூம் 2 பாடல்கள் எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோலாபாஸ்கர் படத்தொகுப்பு வேலையை ‌கவனித்துள்ளார்.

மேற்கத்திய இசையையும், கிராமிய இசையையும் கலந்துகட்டி ஒரு காக்டெயிலாக படைத்திருக்கிறார் ஜிவி. நரேஷின் உற்சாகமான குரலுடன் பயணிக்கும் பாடலின் இடையே ஒரே ஒரு வரிக்காக வழி மரிக்கிறது ஒரு பெண்குரல், அந்த இடம் அருமை. பாடியவர் யாரென்று தெரியவில்லை. (சைந்தவி...?) ஆயிரத்தில் ஒருவன் மாலை நேரம் பாடலைப் போல ஆகிவிடக்கூடாது.
mayakkam enna movie review

தனுஷ் நல்ல நடிப்பு தான்..அண்ணன் படம் என்பதால் அடக்கியே வாசிச்சிருக்காரு..

ஹீரோயின் ரிச்சா முதல்ல பார்க்கும்போது சாதாரணமா தெரிஞ்சது..போகப்போக 'நல்ல ஃபிகரா' தெரிய ஆரம்பிச்சுடுச்சு..நல்லா முகத்துல எக்ஸ்பிரசன்ஸ் காட்டுது..அழகான கண்கள்..அகலமான முதுகுன்னு நல்லவொரு அறிமுகம்.


ஜி.வி.பிரகாஷ் அருமையா டியூன் போட்டிருக்கார்..பிண்ணனி இசையும் நல்லா இருந்துச்சு..குறிப்பா 'வெண்ணிலவே' பாட்டுக்கு குடிச்சுட்டு மாக்கான் - ரிச்சா - தனுஷ் ஆடி முடிக்கவும் வந்த பிண்ணனி இசை.

அடுத்து ராம்ஜியின் ஒளிப்பதிவு..படமே ஃபோட்டோகிராஃப்ர் பத்தின படம் என்பதால் கேரளா-கர்நாடகான்னு அழகான லொகேசனா தேடி எடுத்திருக்காங்க.

'இது அடுத்த தலைமுறைக்கான படம்'னு செல்வராகவன் சொன்னாரு..அப்பவே உஷார் ஆகியிருக்கணும்..அம்பது வருசம் கழிச்சு பார்க்கவேண்டிய படத்தை அவசரப்பட்டு, இப்பவே பார்த்துட்டேன்..

கதை - அட அத தாம்பா என்னனு நானும் யோசிச்சிட்டு இருக்கேன்

மயக்கம் என்ன - (மப்பு ஏத்தாமலே )
comments | | Read More...

பிரபாகரன் பிறந்தநாள்... உலகெங்கும் கொண்டாட்டம்!

 
 
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 57வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

நசுக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்க, இலங்கையில் 30 ஆண்டு காலம் தனி ஈழம் கேட்டுப் போராடியது பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு.


கடந்த 2009ம் ஆண்டு உலக நாடுகளின் துணையுடன் பிரபாகரனின் படைகளை வென்றது இலங்கை ராணுவம். தங்கள் ஆயுதப் போராட்டத்துக்கு உலகம் எதிர்ப்பு காட்டுவதைப் புரிந்துகொண்ட புலிகள் அமைப்பு, ஆயுதங்களை மவுனிப்பதாகக் கூறிவிட்டு, அரசியல் ரீதியான போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.

புலிகளின் வலையமைப்பு இன்னும் உயிர்ப்புடன் இருப்பதாக இலங்கை புலம்பிக் கொண்டுள்ளது. அதே நேரம் 'போர்க்குற்றவாளி' மகிந்த ராஜபக்சேவும் அவரது தம்பிகளும் எந்த நாட்டுக்குள்ளும் கால் வைக்க முடியாத அளவுக்கு தமிழர் எதிர்ப்பு தீவிரமடைந்துள்ளது.

முள்ளி வாய்க்கால் போரில் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக ராணுவம் அறிவித்தாலும், அவர் இன்னும் இருப்பதாக இன்னொரு தரப்பு கூறுகிறது. விடுதலைப் புலிகள் இயக்கமும் இதுவரை அவரது இறப்பை உறுதிப்படுத்தவில்லை. ஆண்டுதோறும் வெளியாகும் மாவீரர் தின அறிக்கையில், தேசியத் தலைவர் வழிகாட்டுதலில் போராட்டம் தொடரும் என்றே கூறி வருகின்றனர்.

இந்த சூழலில் பிரபாகரனின் 57வது பிறந்த தினம் இன்று வந்துள்ளது. பொதுவாக பிரபாகரன் தனது பிறந்த நாளுக்கு அதிக முக்கியத்துவம் தராமல், தன்னுடன் நின்று இலங்கை ராணுவத்தை எதிர்த்துப் போரிட்டு மடிந்த போராளிகளின் நினைவு நாளான மாவீரர் தினத்துக்குதான் (நவம்பர் 27) அதிக முக்கியத்துவம் தருவார்.

நாளை நடக்கும் மாவீரர் தினத்துக்கான ஏற்பாடுகளும் நடந்து கொண்டுள்ளன. இன்று பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு உலகமெங்கும் வாழும் தமிழின உணர்வாளர்கள், அவர்களது இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

தமிழ் அமைப்புகள் அனைத்தும் அவர்களது அலுவலகங்களில் பிரபாகரனின் பிறந்த நாளுக்கு புலிக்கொடி ஏற்றியும் கேக் வெட்டியும் கொண்டாடி வருகின்றன.

நாளை நடக்கும் மாவீரர் தினத்தையொட்டி சேலத்தில் கொளத்தூர் மணி தலைமையில் பல்வேறு கட்சியினர் மாவீரர் தின எழுச்சியில் பங்கேற்கிறார்கள்.

நாமக்கல்லில் சீமான் தலைமையில் மாவீரர் எழுச்சி தினக் கூட்டம் நடக்கிறது. இந்த எழுச்சி கூட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. ஆனால், தடையை மீறி இக்கூட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger