News Update :
Powered by Blogger.

ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?

Penulis : karthik on Monday, 24 October 2011 | 02:03

Monday, 24 October 2011

 
 
ஒரே பெண்ணுடன் என்னையும் என் மகனையும் இணைத்து எழுதுவது அறுவறுப்பான ஜர்னலிசம் என்று நாகார்ஜுனா கூறினார். நாகார்ஜுனா மகன் நாக சைதன்யா. இவரும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நாக சைதன்யாவுக்கும் அனுஷ்காவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்று ஆந்திராவில் செய்திகள் வெளியாயின. அதற்கு முன் அனுஷ்காவை நாகர்ஜுனா காதலித்து வருவதாகக் கூறப்பட்டது. இதையடுத்து அந்த செய்தியை வெளியிட்ட ஆங்கில பத்திரிகையின் நிருபரை, நாகார்ஜுனா அவதூறாகப் பேசினார் என்று கூறப்பட்டது. இதுபற்றி நாகார்ஜுனா கூறியிருப்பதாவது:
 
சினிமா துறையில் வெள்ளிவிழாவை நெருங்கிக்கொண்டிருக்கிறேன். பல்வேறு நடிகைகளுடன் இணைத்து கிசு கிசு வருகிறது. முதலில் தபு, அனுஷ்கா, சார்மி, இப்போது பூனம் கவுர். பத்திரிகைகளில் இந்த செய்திகளைப் படித்துவிட்டு சிரிப்பதை தவிர வேறும் எதுவும் எனக்கு தெரியாது. ஆனால், இவர்கள் எல்லாருமே எனக்கு நண்பர்கள். அனுஷ்கா நடிகை என்பதை தாண்டி என் குடும்பத்தில் ஒருவர். என்னை விட என் மனைவி அமலாவிடம்தான் அதிகம் பேசுவார். சார்மியுடன் 'மாஸ்' படத்தில் நடித்தேன். அவர் சிறந்த நடிகை. ஏதாவது விஷயங்களில் என்னிடம் கருத்துக் கேட்பார். இந்த இடத்தில் அபார்ட்மென்ட் வாங்க போகிறேன். என்ன நினைக்கிறீர்கள் என்றால், வாங்கு என்பேன். உடனே, நாகார்ஜுனா அபார்ட்மென்ட் வாங்கி கொடுத்தார் என்று எழுதிவிடுகிறார்கள்.
 
இதே போல பூனர் கவுருடன் 'பயணம்' படத்தில் நடித்தேன். படத்தில் இருவரும் சேர்ந்து வருவது போல ஒரு ஷாட் கூட கிடையாது. ஆனால் எப்படித்தான் அவருடன் இணைத்து பேசுகிறார்களோ தெரியவில்லை. இப்படி எழுதுவதற்காக, நான் என் நட்பை நிறுத்திக்கொள்ள வேண்டியதில்லையே. நான் இப்போதும் அவர்களுடன் நட்பாகத்தான் இருக்கிறேன். இதையெல்லாம் கூட என்னால் விளையாட்டாக எடுத்துக்கொள்ள முடிந்தது. ஆனால், அனுஷ்காவுடன் என்னையும் என் மகனையும் இணைத்து எழுதுவதை எப்படி ஏற்க முடியும்? இது அறுவறுப்பான ஜர்னலிஷம். இதுதான் என்னை ரொம்ப அப்செட் பண்ணியது. அப்படியென்றால் இதுவரை நீங்கள் இதுபற்றி கருத்து சொல்லவில்லையே என்கிறார்கள். இதற்கெல்லாம் நான் ஏன் கருத்துச் சொல்லவேண்டும். அது என் தகுதிக்கு குறைவானது. இவ்வாறு நாகார்ஜுனா கூறினார்.



comments | | Read More...

ஐஸ்வர்யா ராயாக ஆசை: அசின்

 
 
 
நடிகை ஐஸ்வர்யா ராய் இத்தனை ஆண்டுகளாகியும் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் போல் ஆக ஆசையாக இருக்கிறது என்று நடிகை அசின் தெரிவித்துள்ளார்.
 
தமிழில் நம்பர் 1 இடத்தில் இருந்த அசினுக்கு பாலிவுட் மோகம் ஏற்பட்டதால் மும்பைக்கு போனார். அவரும் திக்கி, முக்கி முன்னேறத் தான் பார்க்கிறார் முடியவில்லை. இந்நிலையில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் இத்தனை ஆண்டுகளாகியும், வயதாகியும் இன்னும் முன்னணி நடிகையாக உள்ளார். அவர் மாதிரி ஆக ஆசையாக உள்ளது. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அசின் கேட்டுள்ளார்.
 
அதேசமயம், பாலிவுட்டில் என்ன தான் முட்டி, மோதினாலும் ஒன்றும் நடக்கவில்லை என்பதால் மீண்டும் கோலிவுட் பக்கம் செல்லவும் அசின் முடிவு செய்துள்ளாராம். இதையடுத்து பெரிய நிறுவனம், பெரிய நடிகர் நடிக்கும் படங்கள் வந்தால் நடிக்கத் தயார் என்று சென்னைக்கு ஓலை அனுப்பியுள்ளாராம்.
 
ஆனால், அசின் மெசேஜ் அனுப்பியும் அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க யாரும் பேரார்வம் காட்டியதாக தெரியவில்லை. ஒரு பக்கம் அசினின் கெரியர் மந்தமாக இருக்க மறுபக்கம் அவரைப் பற்றி சகட்டுமேனிக்கு வதந்திகள் வேறு வருவதால் அவர் அப்செட்டாகியுள்ளாராம்.
 
ஆனால் சேச்சிதான் இதில் பாதி வதந்திகளை கிளப்பி விடுவதாக இன்னொரு வதந்தியும் பின்னாலேயே வருகிறது.



comments | | Read More...

முதல்வரை நகைச்சுவையில் ஆழ்த்தியவர் கருப்பசாமி

 
 
 
அமைச்சர் கருப்பசாமி தமது வெள்ளந்தியான பேச்சினால் முதல்வர் ஜெயலலிதாவின் மனதில் இடம்பிடித்தவர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் அமைச்சர் கருப்பசாமி.
அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மைக் கிடைத்துவிட்டால் "எம்.ஜி.ஆர்.,சினிமாக்களில் இருந்து ஏதாவது பாடலை பாடாமல் விடமாட்டார்". கச்சேரிகளில் இசையமைப்பாளர்களின் தாளத்திற்கு ஏற்ப பாடுவதில் வல்லவர். சில நேரங்களில் இரண்டு, மூன்று பாடல்கள் கூட தொடரும்.
சென்னையில் அமைச்சராக பொறுப்பேற்றபோது உறுதிமொழி வாசகங்களை கவர்னர் வாசிப்பதற்கு முன்பாகவே விறுவிறுவென வாசித்து மேடையில் இருந்த முதல்வர் ஜெ., தோழி சசிகலா, பத்திரிகையாளர் சோ என அனைவரது மத்தியிலும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியவர்.
மதுரையில் கடந்த ஆட்சியின் போது பிரமாண்டமான ஆர்ப்பாட்டம் முதல்வர் ஜெ.,தலைமையில் நடந்தது. அதில் பங்கேற்ற கருப்பசாமி, மத்திய அமைச்சர் அழகிரிக்கு எதிராக சவால் விட்டு பேசிய பேச்சு, முதல்வர் <உள்ளிட்ட அனைவரையும் கவர்ந்தது. நெல்லையிலும் முதல்வர் ஜெ.,பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய கருப்பசாமி, மத்திய அமைச்சர் அழகிரியை குறிப்பிட்டு பேசுகையில், "நீ பெரிய மந்திரியாக இருக்கலாம்... ஆனால், என்னோட ஓட்டப்போட்டியில் பங்கேற்க முடியுமா..' என வடிவேலு பாணியில் நகைச்சுவையாக விட்ட சவால், முதல்வர் உள்ளிட்ட அனைவரையும் நகைப்பில் ஆழ்த்தியது.
நிகழ்ச்சிகளில் அலங்கார சொற்கள் இன்றி, திருநெல்வேலி நடையில் வெள்ளந்தியாக பேசும் அவரது பேச்சு, மக்களையும் கவரும்.
*கருப்பசாமிக்கு முத்துமாரி என்ற மனைவியும் மகள் முத்துலட்சுமி,29, மகன் மாரிச்சாமி, 26, ஆகியோர் உள்ளனர். முத்துலட்சுமிக்கு திருமணமாகிவிட்டது. மகன் மாரிச்சாமி, ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார்.
*தென்மாவட்டங்களில் அமைச்சர் அந்தஸ்தில் இருந்தாலும், மிக குறைவான சொத்துப்பட்டியலை காண்பித்தவர் அமைச்சர் கருப்பசாமி தான்.
 



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger