News Update :
Powered by Blogger.

பி.எஸ்.என்.எல்.க்கு மாறணுமா? அட போங்கப்பா!

Penulis : karthik on Thursday, 29 September 2011 | 20:07

Thursday, 29 September 2011

 
அதே நம்பரில் கம்பெனி மாற்றிக்கொள்ளலாம்என்ற புரட்சி திட்டம் வந்தது.மாற்ற விரும்பியவர்கள் மாற்றி விட்டார்கள்.இதில்அதிகம் வாடிக்கையாளர்களை பி.எஸ்.என்.எல் நிறுவனம் இழந்ததாக கூறப்பட்டது.இப்போதுகொஞ்சம் லேட்டாக விழித்துக் கொண்டு சலுகைகளை அறிவித்துத் தள்ள,கொஞ்சம்வாடிக்கையாளர்கள் கூடியிருப்பதாக கேள்வி.
 
மற்ற கம்பெனிகளுக்கும்பி.எஸ்.என்.எல்.க்கும் வித்தியாசம் இருக்கிறது.இது அரசு நிறுவனம்.அதனால் அதிகம்சம்பாதிக்க வேண்டும் என்று கில்லாடி வேலைகளை ஊழியர்கள் செய்ய மாட்டார்கள்.டேட்டாகார்டு வாங்க வேண்டும் என்று பார்த்தபோது பி.எஸ்.என்.எல்.பரவாயில்லைஎன்றார்கள்.வாங்கி விட்டேன்.

ஆரம்பத்தில் நல்லாத்தான்இருந்துச்சி.இரவில் திடீரென்று நெட் கனெக்ட் ஆகாது.சிம்மை எடுத்து போனில் போட்டிதொகையை பார்த்தால் மைனசில் காட்டும்.அடுத்த நாள் ரீசார்ஜ் செய்தால் தான் மறுபடிகனெக்சன் .இப்போது 53733 க்கு மெசேஜ் அனுப்பி தெரிந்து கொள்ளலாம்.ஒரு நாள் பிளாக்கை ஓபன்செய்தால் ஏதோ மெசேஜ் வந்தது.(The connection was reset while the page was loading). சுத்தமாக எந்த தளமும் ஓபன் ஆகவில்லை.டேட்டா கார்டு வைத்திருப்பவர்கள்யாரும் தெரியவில்லை.அன்று ஞாயிற்றுக்கிழமை வேறு.


நமக்கு தெரிந்த விஷயம் வரும் மெசேஜைகூகுள் சர்ச்சில் கொடுத்து தேடிப் பார்ப்பது.மொசில்லாவில் நிறைய தகவல்கள் வழிகாட்டின .அதில் சொள்ளப்படுல்லத்தை செய்து பார்த்தேன்.பிரயோஜனமில்லை.இன்னொரு நல்லஐடியா தோன்றியது.
 
 
கொமோடோ ஆண்டி வைரஸில்உள்ள டெக்நிசியனுடன் சாட் செய்ய முடியும்.சாட்டில் நான் ஒர்க் செய்யட்டுமா ? என்றார். சரி என்றுசொல்ல,சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக ஆன்லைனில் ஏதேதோ செய்துபார்த்தார்.வெற்றி கிடைக்கவில்லை.இன்டர்நெட் சர்வீஸ் புரோவைடரிடம் சொல்லுங்கள்என்று முடித்துக் கொண்டார்.


பி.எஸ்.என்.எல்.இல் கேட்டால் ஒன்றும்பிரச்சினை இல்லையே என்றார்கள்.பிறகு அடிக்கடி பிரச்சினை செய்வதும்,பின்பு சரியாவதுமாகஇருந்தது.பிரச்சினை வரும்போது நெட்வொர்க்கில் மாற்றம் ஏற்படுவதை கவனித்தேன்.GSM/EDGE வரும்போது தளம் ஓபன் ஆகாமல் ஏதாவது மெசேஜ்வருவதும் UMTS/HSDPA நெட் வொர்க்குக்கு மாறும்போது பிரச்சினை இல்லாமல் இருப்பதுமாகஇருக்கிறது.இன்னும் அப்படித்தான்.
 
கமென்ட் போட்டு பப்ளிஷ் செய்துவிட்டுசாப்பிட்டுவிட்டு வந்தால் அப்போதுதான் பப்ளிஷ் ஆகியிருக்கும்.இந்த மாதிரிபிரச்சினைகளை சந்திக்கும்போது வெளிநாட்டில் இருப்பவர்களை நினைத்து கொஞ்சம்பொறாமையாக இருக்கிறது.
 
கீழ்கண்ட தகவல் பெங்களூர் ISKCON லிருந்து அனுப்பியிருக்கிறார்கள்.சர்வதேச அளவில் வல்லுனர்கள் கலந்துகொள்ளும் இம்மாநாட்டில் கலந்து கொள்ள விருப்பம் இருந்தால் தெரிவிக்கவும்.(social media வில் ஆர்வம் உள்ளவர்கள்)
 
weare happy to announce Social India Conference in Bangalore which is tobe held on 12th & 13th of November 2011in Royal Orchid Hotel Bangalore.
 
 
This is an invite-only Conference. Over 1000executive-level professionals from top Social Media related companies will beattending this conference. Executive-level invitees include CEOs, ManagingDirectors, Presidents, VPs, and Directors. Many of these executives are bigleaders running companies today or are going to lead companies in the future.
 
This is an opportunity for you to meet your peersin the Social Media industry and exchange notes. At this conference, you'llfind people from social media companies, who excel at innovation, are engagedin business transformation, and are building workforces that are efficient,engaged, and effective.
 
The conference will kick off an active dialogueamongst leaders in the Indian social media industry. At this conference, Topmost leaders like you, get a true insider's look at what's new today, andwhat's coming over the next 12-18 months. It's an exclusive preview of howcompanies, such as yours, will change the way other companies do business.What's more, we want to hear your professional views on how we can make thenext wave of social media even better.



comments | | Read More...

பெண் பார்க்கப்போய் காலில் விழுந்த பதிவர்-காமெடிபீஸ்

 
 
சில வலைப்பதிவுகளைப் படிப்பது வாழ்க்கையில் எந்தமாதிரியெல்லாம் கஷ்டம்தரும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.கல்யாணமாகாத இளம்பெண்ணென்றால்சொல்லத்தேவையில்லை.பல்லைக்கடித்துக்கொண்டு படித்தால் கொஞ்சம் கொஞ்சமாக புரியும்.விவரமாகச்சொல்கிறேன்.
 
தனக்குக் கல்யாணமாகவில்லை என்று மனம் நொந்து எழுதிய பதிவை படித்தார் அந்தஇளம்பெண்.என்ன நேரத்தில் படித்த்தோ தெரியவில்லை.அவ்வளவு நாளும் கல்யாணத்தின் மீதுஇருந்த வெறுப்பு மாயமாய் மறைந்து விட்ட்து.கல்லும் கரையும் என்பார்களே? இங்கேகரைந்து கடலில் கலந்து விட்ட்து.பெண்ணுக்கு காதலும்,கல்யாண ஆசையும் துளிர்த்துவிட்ட்து.
 
ஆசைஆசையாய் வலைப்பதிவருக்கு தனது காதலை இல்லை,உயிரையே கொட்டி எழுதினார்காதல் கடிதம்.கல்யாணத்திற்கு அழைப்பாகவும் கருதலாம்.அந்தக் கடிதம் கீழே!
 
அன்பே,
 
உங்களைப் பார்ப்பதற்காக தூங்காமல் காத்திருப்பேன்.குளிக்காமல்உட்கார்ந்திருப்பேன்.நீங்கள் பெண் பார்க்க வரும் வரை வாசலை விட்டு எழுந்து உள்ளேபோக மாட்டேன்.நீங்கள் எதற்காக பதிவு எழுத வேண்டும்? நான் ஏன் அதை விடிகாலையில்படிக்கவேண்டும்? இப்போது புரிந்துவிட்ட்தா? இருவருக்கும் கல்யாணமாகவில்லை.இனிநீங்களில்லாமல் என்னால் நடக்க முடியாது,ஓட முடியாது,கோலம் போட முடியாது! கீழ்கண்டமுகவரிக்கு உடனே வரவும்.
 
இளம்பெண் பழசை மறக்காதவர்.தான் வளர்க்கும் புறா காலில் கட்டி பதிவரிடம்தனது கடித்த்தை சேர்க்குமாறு அனுப்பினார்.கடித்த்தை படித்த பதிவருக்கு தலைசுற்றாமலா இருக்கும்.ஆஹா! நம்முடைய எழுத்தையும் படித்து நம்முடைய அறிவில் மயங்கிஒரு பெண்ணுக்கு வந்த காதல்!
 
கடிதம் கிடைத்த்வுடன்புறப்ப்ட்டு முகவரி கண்டு பிடித்து ஊர் போய் சேர்ந்து விட்டார்.உண்மையில் அந்தபெண்ணும் வாசலில்தான் இருந்த்து.பதிவருக்கு அதைப் பார்க்க எப்படி இருந்திருக்கும்என்று கற்பனை செய்து பாருங்கள்!ஆமாம்,உலகத்தில் இருக்கும் அத்தனை காதலும் அவருக்குவந்து விட்ட்து.அவர்களது காதலையும்,உணர்ச்சிவேகத்தயும் கண்ட காக்கைகள் அலறிஅடித்து ஓடின.
 
வீட்டுக்குள்ளே அழைத்துச்சென்றவுடன் உங்களிடம் நான் நிறைய பேச வேண்டும்என்றார் பெண்.''தாராளமாக! அதற்குத்தானே வந்திருக்கிறேன்!"
 
''உங்களுக்கு வடிவேல் பிடிக்குமா? விவேக்கா?''
 
இதுஎதற்கு என்று பதிவருக்கு தோன்றினாலும்சொல்லி வைத்தார்,''வடிவேல்"
 
"ச்சீநீங்கள் ரொம்ப மோசம்,எனக்கும்தான்! பாவம் போக்கிரியில் அசினை உயிருக்குஉயிராக காதலிப்பார்,நடுவில் விஜய் வந்து கெடுத்து விட்டார்.அவர் மனசு எப்படிஇருந்திருக்கும்?''நகைச்சுவை உணர்வு நிரம்பியவர் என்று பதிவருக்கு தோன்றியது.
 
''உங்களுக்குசமைக்கத்தெரியுமா?''ஆண்கள் சமைத்தால் ருசியாக இருக்கும் என்று என் தோழி சொன்னாள்.''
 
இந்தஅதிரடியை நம்ம ஆள் எதிர்பார்க்கவில்லை! " தெரியாது" என்றார்
 
"நீங்கள் கவலைப்படவேண்டாம்,எள்ளுருண்டை செய்ய உங்களுக்குத்தெரியும்தானே? அது போதும்.நான் தினம் இரண்டு எள்ளுருண்டை மட்டும் சாப்பிட்டு உயிர்வாழ்வேன்"
 
பதிவருக்குகுழப்பம் வந்தாலும் விடவில்லை."உயிர்வாழ்வது எங்கே! என் உயிரை எடுப்பாய்! அதில் இரண்டு வைட்டமின் தான்இருக்கிறது,வைட்டமின் சி இல்லை.அது நல்லதுதான்.ஆனால் மற்ற உணவும் வேண்டும்.நிரூபன்பதிவை படித்தீர்களா? சலிப்புடன் கேட்டார்.
 
"உங்களுக்குநகைச்சுவை உணர்வு அதிகம் என்று எனக்குத் தெரியும். நீங்கள் நிரூபன் இல்லாமல் வேறுயாராம்?"
 
"என்னது?நான் நிரூபன் இல்லை! நீ நிரூபனை காதலிக்கிறாயா?"
 
"ஆமாம்,நான்அவருக்குத்தான் கடிதம் எழுதினேன்," என்றார் அதிர்ச்சியுடன்.
 
பதிவர் மயக்கம்போட்டு பெண்ணின் காலடியில் விழுந்துவிட்டார்."நீங்கள் காலில் விழுந்தாலும் நான் நிரூபனைத்தான் காதலிப்பேன்" இவ்வார்த்தை பதிவரின் காதில் விழவில்லை.மயங்கிக் கிடந்தார்.புறாஓரமாக நின்று சிரித்துக்கொண்ட்து.காமெடி செய்யலாம் என்று திட்டமிட்டு வேறுபதிவரிடம் கடித்த்தை கொடுத்துவிட்ட்து..
 
டிஸ்கி: பதிவர்கள்,அதிலும் கல்யாணமாகாதவர்கள் பிளாக்கில் போட்டோ போடவேண்டும்.
 
 
 
 
 
 
comments | | Read More...

Anandha Vikatan 05 10 2011 (Download Tamil Magazine)

 

Anandha Vikatan 05 10 2011 (Download Tamil Magazine)

http://www.megaupload.com/?d=WGXAY3IT

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger