News Update :
Powered by Blogger.

பிரதமர் அனுப்பிய 'அக்னாலட்ஜ்மென்டை' வைத்து அனைவரையும் திசை திருப்பிய ராசா!

Penulis : karthik on Wednesday, 28 September 2011 | 07:16

Wednesday, 28 September 2011

 
 
 
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்த அனைத்தும் பிரதமருக்கும், ப.சிதம்பரத்திற்கும் தெரியும் என கோர்ட்டில் ஒவ்வொரு முறையும் கூறி வரும் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, பிரதமர் தனக்கு அனுப்பிய ஒரு ஒப்புகைக் கடிதத்தை வைத்து அனைவரையும் திசை திருப்பியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
 
கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார் ராசா. அதில், பிரணாப் முகர்ஜியை தான் சந்தித்து மொபைல் லைசென்ஸ் குறித்த கொள்கை வகுப்பு குறித்து விவாதித்ததாக தெரிவித்துள்ளார். அப்போது பிரணாப் முகர்ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான முடிவுகளைக் கையாளும் உயர் மட்ட அமைச்சர்கள் குழுவின் தலைவராக இருந்தார்.
 
பதிலுக்கு 2008ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் பதில் கடிதம் அனுப்பினார். அதில், உங்களது கடிதம் பெற்றேன் என்று கூறியுள்ளார் சிங்.
 
இதைத் தொடர்ந்து 2008ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி தொலைத் தொடர்புத்துறைக்கு ஒரு கடிதம் எழுதுகிறார் ராசா. அதில், பிரதமரின் 'அக்னாலட்ஜ்மென்ட்' கடிதத்தை மேற்கோள் காட்டி, லைசென்ஸ் தொடர்பான கொள்கை முடிவு எடுக்க பிரதமர் அனுமதித்துவிட்டதைப் போல சொல்லி, முடிவுகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதாவது பிரதமருக்குத் தான் எழுதிய கடிதத்திற்கு பிரதமர் அனுப்பிய 'அக்னாலட்ஜ்மென்ட்' கடிதத்தை பதிலை, பிரதமரின் அனுமதி போல திரித்து தொலைத் தொடர்புத்துறையைத் திசை திருப்பியுள்ளார் ராசா.
 
மேலும் 122 லைசென்ஸ்களை வினியோகிப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் தொலைத் தொடர்புக் கொள்கையையும் திருத்தியுள்ளனர். தொலைத் தொடர்பு ஆணையத்தின் ஒப்புதல் பெறாமலேயே இது நடந்துள்ளது.
 
இதுகுறித்து விசாரித்த, நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையிலான ஒரு நபர் கமிஷன், எந்தவித ஒப்புதலும் பெறாமல் தொலைத் தொடர்புக் கொள்கை திருத்தப்பட்டதாக தெளிவாகக் கூறியுள்ளது.
 
முதலில் வருவோருக்கு முதலில் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை வினியோகிப்பது என்றுதான் இருந்தது. ஆனால் இதை மாற்றிவிட்டார் ராசா. முதலில் வருவோருக்கு அல்லது முதலில் விண்ணப்பிப்போருக்கு என்று இல்லாமல், அனைத்து நிபந்தனைகளையும் யார் ஏற்கிறார்களோ அவர்களுக்கு என்று மாற்றி விட்டார் ராசா.
 
2008ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி, ஸ்பெக்ட்ரம் உரிமம் கோரிய நிறுவனங்களுக்கு சில மணி நேர அவகாசம் மட்டுமே தரப்பட்டு காசோலைகள், விருப்பம் ஆவணம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. ராசாவின் திட்டத்தை முன்கூட்டியே 'அறிந்த' சில நிறுவனங்கள் காசோலைகள் உள்ளிட்டவற்றுடன் தயாராக இருந்துள்ளன. அவற்றுக்கு உடனடியாக லைசென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களைச் சேர்ந்த சிலர்தான் தற்போது ராசாவுடன் சேர்ந்து திஹார் சிறையில் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
உங்களது கடிதம் வந்தது என்ற ஒரு வரி பிரதமரின் பதிலை வைத்து மிகப் பெரிய திசை திருப்புதலை செய்துள்ளார் ராசா என்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



comments | | Read More...

சன் குழுமத்திலிருந்து விலகினார் சக்சேனா!!

 
 
 
சன் பிக்சர்ஸ் மற்றும் சன் குழுமத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகிவிட்டதாக தனது வழக்கறிஞர் மூலம் ஹன்ஸ்ராஜ் சக்சேனா அறிவித்துள்ளார்.
 
சன் குழுமத்தில் மிகவும் பலம் வாய்ந்த மனிதராக உலா வந்தவர் ஹன்ஸ்ராஜ் சக்சேனா. சன் குழுமம், தனியாக சன் பிக்சர்ஸ் என்ற திரைப்பட வர்த்தகப் பிரிவை தொடங்கியபோது, அதன் தலைமைப் பொறுப்பேற்றார். சன் பிக்சர்ஸ் தயாரித்த எந்திரன் படத்ன் நிர்வாகத் தயாரிப்பாளராக இருந்தார் சக்சேனா.
 
ஆனால் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, பல்வேறு மோசடி, மிரட்டல் வழக்குகளில் சக்சேனாவைக் கைது செய்தது அதிமுக அரசு.
 
கடந்த மூன்று மாத காலமாக ஏராளமான வழக்குகளில் அடுத்தடுத்து கைதாகி, நீதிமன்ற காவல், போலீஸ் காவல் என தொடர் சிறைவாசம் அனுபவித்து வந்தார் சக்சேனா.
 
இந்த நிலையில், அனைத்து வழக்குகளிலும் நிபந்தனை ஜாமீன் பெற்று இப்போது வெளியில் வந்துள்ளார். இனி அவர் சன் குழுமத்தில் தொடர்வாரா என்ற கேள்வி எழுந்தது. மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில் நீடித்திருக்குமா என்றும் கேள்வி எழுப்பினர்.
 
சன் பிக்சர்ஸ் ஏற்கெனவே சக்சேனாவின் இடத்தில் தற்காலிகமாக செம்பியன் என்பவரை சிஇஓவாக நியமித்தது. அதன் பிறகுதான் மங்காத்தா படத்தை வெளியிட்டு வசூலை அள்ளியது. தொடர்ந்து வெடி, நண்பன், ஏழாம் அறிவு என மெகா பட்ஜெட் படங்களை கைவசம் வைத்துள்ளது.
 
ஆனால் சக்ஸேனாவின் நிலை என்ன என்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் சன் குழும தலைவர் கலாநிதி மாறனைத் தொடர்பு கொண்ட சக்சேனா, தன் மீதுள்ள வழக்குகளால் நிறுவனத்துக்கு தேவையற்ற கெட்ட பெயர் வரக்கூடாது என்பதால், சன் குழுமத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகிக் கொள்வதாக தெரிவித்தார்.
 
இதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தையும் அவர் கலாநிதி மாறனுக்கு அனுப்பி வைத்தார். அக்கடிதத்தை கலாநிதியும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
 
இத்தகவல்களை சக்சேனாவின் வழக்கறிஞர் இன்று தெரிவித்தார்.



comments | | Read More...

சிதம்பரம் தான் காரணம்-பாஜக: சிதம்பரம் தான் காரணம்- ராம்தேவ்

 
 
 
தெலுங்கானா பிரச்சனைக்கு மத்திய உள்துறை அமைச்சர் . சிதம்பரம் தான் காரணம் என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
 
இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது,
 
ஆந்திர மாநிலத்தில் பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 10 மாவட்டத்தில் நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. அங்கு உள்ள சூழ்நிலை முற்றிலுமாக மாறிவிட்டது. தெலுங்கானா தனி மாநிலம் கேட்டு போராட்டங்கள் நடந்து வருகிறது. இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் . சிதம்பரம் தான்.
 
கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி தெலுங்கானாவை தனி மாநிலமாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் தானே அறிவித்தார். அந்த அறிவிப்பால் தான் இவ்வளவு பிரச்சனை.
 
காலத்தை தாழ்த்த தான் தெலுங்கானா தனி மாநிலமாக்கும் சாத்தியத்தை பற்றி அறிய நீதிபதி பி. ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. தெலுங்கானாபிரச்சனைக்கு காங்கிரஸ் பொறுப்பேற்குமா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
2ஜி: சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரும் பாஜக
 
2ஜி விவகாரம் தொடர்பாக . சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமரை பாஜக வலியுறுத்தியுள்ளது.
 
இது குறித்து பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியதாவது,
 
கடந்த மே மாதம் 22-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும் ஊழலை எதிர்த்து போராடப்போவதாக அறிவித்தனர். ஆனால் ஊழல் அமைச்சர்களை காப்பாற்றிக் கொண்டு எப்படி ஊழலை எதிர்த்து போராட முடியும்?
 
நிதியமைச்சகம் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பிய கடித்தத்தில் .சிதம்பரத்திற்கு 2ஜி ஊழலில் தொடர்பு இருக்கிறது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிபிஐ கூட அரசுடன் சேர்ந்து கொண்டு சிதம்பரத்திடம் விசாரணை நடத்தத் தேவையில்லை என்று கூறுகிறது.
 
பிரதமர் ஊழல் செய்த அமைச்சரை எல்லாம் காப்பாற்றக்கூடாது என்றார்.
 
எனது ஆதரவாளர் மரணத்திற்கு சிதம்பரம் தான் காரணம்: ராம்தேவ்
 
டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கச் சென்ற யோகா குரு பாபா ராம்தேவ் ஆதரவாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் படுகாயமடைந்த ஹரியானாவைச் சேர்ந்த ராஜ் பாலா(51) கடந்த 3 மாதங்களாக கோமாவில் இருந்தார். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
 
அவர் இறந்ததற்கு . சிதம்பரம் தான் காரணம் என்றும், அதற்காக அவருக்கு மரண தண்டனை கொடுக்கலாம் என்றும் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
 
கடந்த 20-ம் தேதி வீரமங்கை ராணி லக்ஷ்மிபாய் பிறந்த ஊரான ஜான்சியில் இருந்து ராம்தேவ் சுயமரியாதை யாத்திரையை துவங்கினார். இதற்கிடையே ராஜ்பாலா மரணச் செய்திகேட்டு அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அவர் ஹரியானா சென்றார்.
 
2ஜி பற்றி ராம்தேவிடம் கேட்டபோது, நான் வேறு சொல்லவேண்டுமா. அதுதான் 2ஜி ஊழலுக்கு யார் காரணம் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உலகிற்கு காட்டிவிட்டாரே என்றார்.
 
 


comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger