News Update :
Powered by Blogger.

உ.பி. கோட்டையில் தங்க வேட்டை: மத்திய மந்திரி மீது ஐக்கிய ஜனதா தளம் போலீசில் புகார் JDU complaint against Union Min over gold hunt in UP

Penulis : Tamil on Wednesday, 23 October 2013 | 08:58

Wednesday, 23 October 2013

உ.பி. கோட்டையில் தங்க வேட்டை: மத்திய மந்திரி மீது ஐக்கிய ஜனதா தளம் போலீசில் புகார் JDU complaint against Union Min over gold hunt in UP

புதுடெல்லி, அக். 23-

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் 19-ம் நூற்றாண்டை சேர்ந்த ராஜா ராவ் ராம் பக்ஸ் சிங் கோட்டை உள்ளது. இந்த கோட்டையில் 1000 டன் தங்கம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி சாமியார் ஷோபம் சர்க்கார் கனவு கண்டார். இதையடுத்து சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் மற்றும் சோனியாவிற்கும் அவர் கடிதம் எழுதினார்.

இதையடுத்து மத்திய தொல்லியல் துறை அந்த கோட்டையின் சுற்றுப்புறப்பகுதியில் தோண்டி தங்க வேட்டை நடத்தி வருகிறது. இதை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தங்க வேட்டையை தொல்லியல் துறை நடத்த மத்திய விவசாய மற்றும் உணவுத்துறை இணை அமைச்சர் சரன் தாஸ் நடவடிக்கை எடுத்ததாக ஐக்கிய ஜனதா தளம் இன்று போலீசில் புகார் அளித்துள்ளது.
அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

தங்கக்குவியல் இருப்பதாக ஒரு சாமியார் கண்ட கனவின் மீது மத்திய அமைச்சர் மகந்தா, தனது அதிகாரத்தை பயன்படுத்தி தொல்லியல் துறையை தேடுதல் வேட்டை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளார். அடிப்படையற்ற ஒரு கோரிக்கையை மத்திய அமைச்சர் நிராகரித்து இருக்க வேண்டும். அதைவிட்டு பொதுமக்களின் பணத்தை வீணடித்து தொல்லியல் துறை தேட நடவடிக்கை எடுத்துள்ளார். இவரது இந்த நடவடிக்கை நாட்டில் மேலும் மூடநம்பிக்கையை பரப்புவதாக உள்ளது. எனவே அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய மகந்த் ஒரு குற்றவாளி.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மத்திய மந்திரி மகந்தா மற்றும் சாமியார் சர்க்கார் சார்பாக பேசி வரும் பாபா ஓம் ஆவாஸ்தி ஆகியோர் மீது குற்றவழக்கு பதியவேண்டும் என்றும் ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  

...

shared via

comments | | Read More...

அரசியல் கட்சி தொடங்க திட்டமா? நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கை Actor Vijay refutes floating political party

Penulis : Tamil on Tuesday, 22 October 2013 | 21:54

Tuesday, 22 October 2013

அரசியல் கட்சி தொடங்க திட்டமா? நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கை Actor Vijay refutes floating political party

சென்னை, அக்.23-

நடிகர் விஜய் புதுக்கட்சி தொடங்க திட்டமிட்டு வருவதாகவும், இதுதொடர்பாக தனக்கு நெருக்கமான சிலருடன் அவர் ரகசிய ஆலோசனை நடத்தி வருவதாகவும் பிரபல தமிழ் பத்திரிகை சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த செய்தி விஜய்யின் தீவிர ரசிகர்களிடையே ஆனந்தத்தையும் கட்சி சார்பற்ற நிலையில் அவரது நடிப்பை மட்டுமே கண்டு ரசிக்கும் நடுநிலையாளர்களிடையே அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தும் வகையில் அவர் ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், சமீபத்தில் நான் கேரளாவில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து, அரசியல் சம்பந்தமாக ஆலோசனையில் ஈடுபட்டதாக பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது. இதைப் படித்துவிட்டு ரசிகர்களும், பொது மக்களும், மீடியா நண்பர்களும் குழப்பம் அடைந்துள்ளார்கள்.

கடந்த 2 மாதங்களாக ஐதராபாத்தில் நடக்கும் ஜில்லா படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறேன். கேரளாவுக்கு நான் செல்லவில்லை. அப்படி இருக்கும்போது, இப்படியொரு தவறான செய்தியின் காரணமாக ரசிகர்கள் மட்டுமின்றி, நானும் குழப்பம் அடைந்துள்ளேன்.

இனி வருடத்துக்கு 2 படங்கள் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இரவு, பகலென்று பார்க்காமல் உழைத்து வருகிறேன். எனது வளர்ச்சிக்கு உறுதுணையாகவும், பக்க பலமாகவும் இருப்பது பத்திரிகை நண்பர்கள்தான்.

ஆகவே, பத்திரிகை நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து உண்மையில்லாத செய்திகளை வெளியிட்டு ரசிகர்களுக்கும், பொது மக்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று விஜய் கூறியுள்ளார்.

...

shared via

comments | | Read More...

நியூயார்க்கில் போலீசாக பணியாற்றும் இந்தியருக்கு இந்திய அமெரிக்க கூட்டமைப்பு நடத்திய பாராட்டு விழா Kerala born NYPD cop felicitated

Penulis : Tamil on Monday, 21 October 2013 | 18:34

Monday, 21 October 2013

நியூயார்க்கில் போலீசாக பணியாற்றும் இந்தியருக்கு இந்திய அமெரிக்க கூட்டமைப்பு நடத்திய பாராட்டு விழா Kerala born NYPD cop felicitated

நியூயார்க், அக்.22-

இந்தியாவின் கேரள மாநிலம், குமிளி நகரில் பிறந்து, படித்து, வளர்ந்தவர் ஸ்டான்லி ஜார்ஜ். பெற்றோருடன் 1983ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் குடியேறிய ஸ்டான்லி ஜார்ஜ் அங்குள்ள பருச் கல்லூரியில் படித்து, பட்டம் பெற்று நியூயார்க் போலீஸ் துறையில் கணக்காளராக பணியில் சேர்ந்தார்.

பின்னர், போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்துடன் அதற்கான பயிற்சி கல்லூரியில் 1992ம் ஆண்டு சேர்ந்து தேர்ச்சியும் பெற்றார்.

2000-ம் ஆண்டு சார்ஜண்ட் ஆக பதவி உயர்வு பெற்று பின்னர் 2007-ம் ஆண்டு போலீஸ் நிலையத்திலேயே பெரிய பதவியான கேப்டன் என்ற நிலையை அடைந்தார்.

இதற்கிடையில், தீவிரவாத தடுப்பு பிரிவிலும் தனது திறமையை பலமுறை நிரூபித்துள்ள இவர் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவழியினருக்கு பல வகைகளில் உதவியும் செய்து வந்துள்ளார்.

7 ஆண்டுகளாக நியூயார்க் நகர போலீஸ் துறையில் கேப்டனாக பணியாற்றிய ஸ்டான்லி ஜார்ஜுக்கு அமெரிக்காவில் வாழும் இந்தியர் கூட்டமைப்பு நியூயார்க் நகரில் பாராட்டு விழா நடத்தி கவுரவித்தது.

முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் இவருக்கு ஏற்கனவே நினைவு பரிசு வழங்கி கவுரவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

...

shared via

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger