News Update :
Powered by Blogger.

மகாத்மா காந்தி கொல்லப்பட்டது படமாகிறது: கோட்சே வேடத்தில் பிருதிவிராஜ்

Penulis : karthik on Monday, 23 July 2012 | 06:08

Monday, 23 July 2012





மகாத்மா காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றது சினிமா படமாகிறது. மலையாளத்தில் இப்படத்தை எடுக்கின்றனர். தமிழிலும் வெளியிட மு டிவு செய்துள்ளனர். இதில் கோட்சே வேடத்தில் பிருதிவிராஜ் நடிக்கிறார். ஷாஜி கைலாஜ் இயக்குகிறார்.

பிருதிவிராஜ் வைத்து ஷாஜி கைலாஸ் தற்போது சிம்ஹாசனம் படத்தை டைரக்டு செய்து வருகிறார். இப்படம் முடிந்ததும் கோட்சே படத்தை எடுக்கின்றனர்.

கோட்சேயின் வாழ்க்கை சம்பவங்கள் இதில் காட்சிபடுத்தப்படுகின்றன. அவனது குடும்ப சூழல்கள் காந்தியை கொல்ல வகுத்த திட்டங்கள் போன்றவை படமாக்கப்படுகிறது.

இதுகுறித்து ஷாஜி கைலாஸ் கூறும்போது, கோட்சே படம் உணர்வுபூர்வமான திரைக்கதையில் உருவாகிறது. காந்தியை கொல்வதற்கு முந்தைய நாள் கோட்சேயின் மனநிலையும் உணர்வு போராட்டங்கள� �ம் எப்படி இருந்தது என்பதை திரைக்கு கொண்டு வருகிறோம். நல்லதுக்கும், கெட்டதுக்கும் போராட்டத்தை கருவாக வைத்து இந்த படத்தை எடுக்கிறோம். குற்றச்செயலில் ஈடுபடுவதற்கு முன் கோட்சேயின் மனநிலை எப்படி இருந்தது என்பதையும் படத்தில் சொல்கிறோம் என்றார்.







comments | | Read More...

அஜீத் ரசிகர்கள் என்னை மிரட்டினர் -வில்லன் நடிகர் கே.கே.





அஜீத்தின் பில்லா-2 படத்தில் வில்லனாக நடித்தவர் கே.கே. ஏற்கனவே தெய்வத்திருமகள் படத்தில் நடித்துள்ளார்.

கே.கே. அளித்த பேட்டி வருமாறு:-

பில்லா-2 படம் எனக்கு பெரிய அங்கீகாரத்தை அளித்துள்ளது. எங்கு சென்றாலும் மக்கள் அடையாளம் கண்டு பாராட்டுகிறார்கள். அஜீத் ரசிகர்கள் என்னை சூழ்ந்து கொண்டு மிரட்டும் தொனியில் பேசினர். எங்கள் "தல"ய படத்தில் எப்படி அடிக்கலாம் என கேட்டனர்.

எனது வில்லன் கேரக்டர் வலுவாக பதிந்துள்ளதை அதன் மூலம் அறிந்து மகிழ்ந்தேன். பிறகு அஜீத் ரசிகர்கள் அமைதியாகி பாராட்டினர். "பில்லா-2" படப்பிடிப்பில் அஜீத்துக்கும் எனக்கும் சண்டை நடந்தபோது என் காலில் காயம் ஏற்பட்டது. அஜீத் பதறிபோய் காலில் வழிந்த ரத்ததை துடைத்து முதல்உதவி சிகிச்� �ை அளித்தார். பெரிய ஹீரோ இவ்வளவு எளிமையாக நடந்தது என்னை பரவசப்படுத்தியது. அவர் சிறந்த மனிதர்.

அஜீத்துடன் நடித்தது பெருமையாக உள்ளது. தற்போது மிங்கினின் மூகமுடி படத்தில் நடிக்கிறேன். அதிலும் எனக்கு பதிவான வேடம். நயன்தாரா, அசின் போன்றோரை தமிழ் திரையுலகம்தான் பெரிய நடிகைகள் ஆக்கியது. கோடம்பாக்கத்துக்கு பவர் இருக்கிறது. சினிமாவுக்கு இதுதான் கடவுள். நிறைய பட வாய்ப்புகள் வருகிறது. தொடர்ந்து தமிழ� �� படங்களில் நடிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.






comments | | Read More...

சங்மா குற்றச்சாட்டை ஒதுக்கி தள்ளியது காங்கிரஸ்





நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு எதிராக பாரதீய ஜனதா அதரவு வேட்பாளரான பி.ஏ.சங்மா போட்டியிட்டு தோல்வியுற்றார்.
 
இந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி செய்யாத மாநிலங்களில் தனக்கு ஆதரவாக  வாக்களிக்க வேண்டி தங்களது ஆட்சி அதிகார செல்வாக்கை பயன்படுத்தி மிரட்டி, வாக்குறுதியளித்து கையூட்டு வழங்கி வெற்றி பெற்றதாக பி.ஏ.சங்மா கூறியிருந்தார்.
 
இதற்கு பதிலளித்த காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் மனிஷ் திவாரி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நடத்தை அவர்களின் மேன்மையை குறிக்கணும். தேர்தலில் தோல்வியை சந்தித்த அவர் அதை ஏற்க முடியாமல் விரக்தியில் வார்த்தைகளை உதிர்க்கிறார் என்றும் நீங்கள� �� ஒன்றை அடைய முடியாதபோது அந்த பழங்கள் புழிக்கும் என்றுதான் கூறுவீர்கள் என்று அவர் குற்றம்சாட்டினார். 
 
பி.ஏ. சங்மாவின் முரண்பாடான இந்த கருத்தை ஒதுக்கி தள்ளிய மற்றொரு காங்கிரஸ் தலைவரான ஜனார்த்தனன் த்வேதி அப்ப� �ி ஒரு குறுகியப் பார்வையுடன் ஒருவர் பேசக்கூடாது என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார்.








comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger