News Update :
Powered by Blogger.

ஜனாதிபதி தேர்தல் இன்று வாக்குப்பதிவு

Penulis : karthik on Thursday, 19 July 2012 | 06:58

Thursday, 19 July 2012




தற்போது ஜனாதிபதியாக இருக்கும் பிரதீபா பட்டீலின் பதவி காலம் முடிவடைய இருப்பதால், அவருக்கு பதிலாக புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுக்க இன்று (வியாழக்கிழமை) தேர் தல் நடைபெறுகிறது. இது 14-வது ஜனாதிபதி தேர்தல் ஆகும். 

இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில், முன்னாள் மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். முலாயம் சிங்கின் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் பா� �தீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா, ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட பல கட்சிகள் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன. 

அவரை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில், பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா போட்டியிடுகிறார். அவருக்கு அ.தி.� �ு.க., பிஜு ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளிக்கின்றன. இந்த தேர்தலில் பாராளுமன்ற இரு சபைகளின் உறுப்பினர்களான எம்.பி.க்கள் 776 பேர் மற்றும் மாநில சட்டசபைகளின் உறுப்பினர்களான 4,120 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 4,896 பேர் வாக்களிக்க இருக்கிறார்கள். இவர்கள் போடும் ஓட்டுகளின் மொத்த மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரம் ஆகும். 

பாராளுமன்ற இரு சபைகளின் உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் உள்ள 63-வது அறையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்கு அளிப்பார்கள். எம்.எல்.ஏ.க்கள் அந்தந்த மாநில சட்டசபைகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்போடுவார்கள். எம்.பி.க்கள் விரும்பினால், தேர்தல் ஆணையத்தின் முன்அனுமதி பெற்று சொந்த மாநிலத்திலேயே ஓட்டுப்போடலாம்.&nb sp;

டெல்லி மேல்-சபை பொதுச் செயலாளரும், ஜனாதிபதி தேர்தல் அதிகாரியுமான வி.கே.அக்னிஹோத்ரி நேற்று டெல்லியில் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்: 

ஜனாதிபத� �� தேர்தலில் வாக்களிக்க இருக்கும் அனைவருக்கும் கடிதம் அனுப்பப்பட்டு இருப்பதாகவும், ஓட்டுப்போட வரும்போது அவர்கள் அந்த கடிதத்தை கொண்டு வரவேண்டும் என்றும், ஒட்டுப்போடுவதற்கு முன்பு அவர்கள் தங்கள் அடையாள அட்டையையோ அல்லது அந்த கடிதத்தையோ காட்ட வேண்டும் என்றும் கூறினார். 

பல்வ� ��று மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட 77 எம்.பி.க்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாகவும், இதேபோல் 7 மாநிலங்களைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்களுக்கு பாராளுமன்றத்தில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு சென்னை கோட்டையில் நடைபெறுகிறது.  ;

இதற்காக சட்டசபை குழு கூட்ட அரங்கில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருக்கிறது. 234 எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஓட்டுப்பெட்டி டெல்லியில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தது. வாக்குச்சீட்டுகளும் தயார் நிலையி ல் உள்ளன. அவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோட்டையில் பத்திரமாக வைக்கப்பட்டு இருக்கின்றன. ஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது என்பது குறித்த விளக்க குறிப்புகள் கடந்த சனிக்கிழமை மாலை அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அனுப்பப்பட்டன. 

ஜனாதிபதி தேர்தலை நடத்த செய்யப்பட்டுள்ள ஏற்� ��ாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் பொதுத்துறை செயலாளர் குமார் ஜெயந்த், பொதுப்பணித்துறை செயலாளர் எம்.சாய்குமார் ஆகியோருடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக மத்திய தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அந்த வகையில் தமிழகத்திற்கு மத்திய அரசின் ஜவுளித்துறை இண ைச்செயலாளர் சுஜித் குலாட்டி தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். 

நேற்று மாலை சென்னை வந்த அவர் கோட்டையில், ஜனாதிபதி தேர்தலுக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சட்டசபை குழு கூட்ட அரங� �கில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியின் முன்பும், வாக்குச்சீட்டுகள் வைக்கப்பட்டு உள்ள அறையின் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இன்று காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை உணவு இடைவேளை இன்றி வாக்குப்பதிவு நடைபெறும். முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அமைச்சர்கள் உள்பட 234 எம்.எல்.ஏ.க்களும் ஓட்டுப்போடுகிறார்கள். 

இவர்கள் தவிர, சென்னையில் ஓட்டுப்போட தேர்தல் ஆணையத்திடம் முன்அனுமதி பெற்றுள்ள 10 பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்களும், 5 டெல்லி மேல்-சபை உறுப்பினர்களும் ஆக மொத்தம் 15 எம்.பி.க்களும் கோட்டை வாக்குச்சாவடியிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்கிறார்கள். வாக்குப்பதிவு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. வ� �க்குச்சாவடியின் உள்ளே செல்போன், கார்டுலெஸ் போன், வயர்லெஸ் கொண்டு செல்ல அனுமதி இல்லை. தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்ற பத்திரிகை போட்டோகிராபர்கள் மற்றும் டி.வி. கேமராமேன்கள் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு வாக்குச்சாவடி பகுதியை படம் பிடிக்க பகுதி பகுதியாக அனுமதிக்கப்படுவார்கள். 

வாக்குப்பதிவு தொடங்கிய பின்னர் அவர்கள் யாரும் வாக்குச்சாவடியின் உள்ளே செல்ல அனுமதி கிடையாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். மாலையில் வாக்குப்பதிவு முடிவடைந்ததும், வாக்குச்சீட்டுகள் அடங்கிய ஓட்டுப்பெட்டி கோட்டையிலேயே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்படும். நாளை (வெள்ளிக்கிழமை) ஓட்டுப்பெட்டியை தம� �ழக சட்டசபை செயலாளரும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ஏ.எம்.பி.ஜமாலுதீன், மற்றொரு உதவி தேர்தல் அதிகாரி கே.பாலசுப்பிரமணியன் ஆகியோர் விமானத்தில் பாதுகாப்புடன் எடுத்துச்சென்று டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைப்பார்கள். 

ஓட்டு எண்ணிக்கை 22-ந் தேதி நடைபெறுக ிறது. இதேபோல், மற்ற மாநிலங்களில் பதிவாகும் வாக்குகளும் டெல்லிக்கு எடுத்துச் செல்லப்படும். ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற ஞாயிற்றுக்கிழமை எண்ணப்படும். அன்று மாலைக்குள் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது புதிய ஜனாதிபதி யார் என்பது தெரிந்துவிடும். இந்த தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு அதிக ஆத� �வு இருப்பதால், அவருக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது.









comments | | Read More...

பிரதமர் பொறுப்பை ஏற்க தயார்: ராகுல்காந்தி அறிவிப்பு




விலைவாசி உயர்வு, ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு மீது மக்களிடம் அதிருப்தி நிலவுகிறது. இந்த ந� ��லையில் உலகின் பல நாட்டு பத்திரிகைகள் பிரதமர் மன்மோகன்சிங்கை கேலி செய்து கட்டுரைகள் வெளியிட்டப்படி உள்ளன. 

இதனால் கட்சியிலும், ஆட்சியிலும் பெரிய அளவில் சீரமைப்பு செய்ய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திக் வ ிஜய்சிங், சல்மான் குர்ஷித் இருவரும் ராகுல் காந்தி விரைவில் முக்கிய பதவி ஏற்பார் என்று கடந்த சில தினங்களாக கூறி வருகிறார்கள். 

அடுத்த பிரதமர் மன்மோகன் சிங் இல்லை. ராகுல்தான் என்றும் அவர்கள் சூசகமாக தெரிவித்தனர். ராகுல் தீவிரமாக கட்சிப்பணியில் ஈடுபட வேண்டும் என்று பல்வேறு தர� ��்பிலும் வலியுறுத்தப்பட்டது. எனவே ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

இதுபற்றி சோனியா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ராகுல்காந்தி பெரிய பொறுப்புக்கு வருவது பற்றி அவர் தான் முடிவு செய்ய வேண்டும். அவர் சார்பில் வேறு யாரும் அதை தீர்மானிக்க முடியாது என்றார். 

இந்த நிலையில் இன்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ராகுல்காந்தி கட்சியிலும் ஆட்சியிலும் பெரிய பொறுப்பை ஏற்க தயார் என்று சூசகமாக தெரிவித்தார். இது தொடர்பாக மவுனத்தை கலைத்த அவர் கூறுகையில், பெரிய பொறுப்பை ஏற்பது பற்றி முடிவு எடுத்து வி ட்டேன். ஆனால் அந்த பொறுப்பில் எப்போது இருந்து செயல்பட தொடங்க வேண்டும் என்ற நேரத்தை மேலிட தலைவர்கள்தான் தீர்மானித்து சொல்ல வேண்டும் என்றார். 

இதன் மூலம் காங்கிரஸ் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கு ராகுல்காந்தி வரப்போவது இன்று உறுதியாகி விட்டது. இன்னும் ஓரிரு மாதங்களில் ராகுல் காந்தி பெரிய பொறுப்புக்கு வருவார் என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

ராகுலுக்காக செய்யப்படும் மாற்றங்கள் காங்கிரஸ் கட்சியில் மட்டுமின்றி இந்திய அரசியல் களத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.









comments | | Read More...

அஜித் பாராட்டிய ஈ !






இப்போதெல்லாம்  'நான் ஈ' படத்தின் இயக்குனர் ராஜமெளலியை போனில் யாராவது அழைத்தால், பல நேரங்களில் அவரது எண் பிஸியாக இருக்கிறது.

காரணம் ஒட்டுமொத்த தென்னந்திய திரையுலகமும் படத்தினை பார்த்து விட்டு அவரது எண்ணை தொடர்பு கொண்டு அழைத்து புகழ்ந்து தள்ளுகிறார்களாம்.

பிரபாஸ், மகேஷ், ரவிதேஜா, வெங்கடேஷ், நாகார்ஜுனா, சித்தார்த், ராணா, விக்ரம், சூர்யா, கார்த்தி, தனுஷ், ரஜினி, இயக்குனர்கள் ராம் கோபால் வர்மா, விநாயக், பூரி ஜெகந்நாத், ஹரிஸ் சங்கர், க்ரிஷ், பிரகாஷ் ராஜ், நந்தினி, லிங்குசாமிஷங்கர் � ��ார் என அனைவருமே படம் பார்த்துவிட்டு ராஜமெளலியை தொடர்பு கொண்டு பாராட்டி இருக்கிறார்கள்.

தற்போது அந்த வரிசையில் இன்னொரு ஸ்டாரும் சேர்ந்திருக்கிறார். அவர் அஜீத். தமிழ்நாட்டில் ' நான் ஈ ' படம் பட்டிதொட்டியும் எங்கும் ஹிட்டடித்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில், அஜீத்தின் பாராட்டு ராஜமௌலிக்கு மேலும் தெம்பூட்டியிருக்கிறதாம்.

'நான் ஈ' படத்தினை பார்த்த அஜீத், இயக்குனர் ராஜமெளலியை தொடர்பு கொண்டு புகழ்ந்து தள்ளி விட்டாராம்.

தமிழில் இந்த கிராஃபிக்ஸ் ஈ வரவேற்பைப் பெற்றிருப்பதால், அடுத்த படம், அநேகமாக நேரடித் தமிழ் படமாக இருக்கலாம் என்கிறது கோலிவுட் தகவல். படத்தின் நாயகன்? 'நான் ஈஇசையை வெளியிட்டாரே அவர் தானாம்.!







comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger