News Update :
Powered by Blogger.

காதலன் திருமணம் செய்யாவிட்டால் உயிரை மாய்ப்பேன்: கல்லூரி மாணவி பேட்டி

Penulis : karthik on Monday, 9 July 2012 | 07:55

Monday, 9 July 2012


மார்த்தாண்டம் அருகே உள்ள மேல்புறத்தைச் சேர்ந்தவர் அனிதா (வயது 21). பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், அருமனை அருகே உள்ள முக்கூட்டுக்கல் என்ற இடத்தைச் சேர்ந்த ராணுவ வீரரான சாஜனும் (25) காதலித்து வந்தனர். 

திருமண ஆசை காட்டி உல்லாசமாக இருந்து விட்டு தற்போது அனிதா� ��ை சாஜன் திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அனிதா, சாஜன் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். 

சாஜன் தன்னை திருமணம் செய்து கொள்ளும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக அனிதா கூறி வருகிறார். ஆனால் சாஜன் வீட்டில் யாரும் இல்லை. அவரது வீடு பூட்டியே கிடக்கிறது. இன்று 3-வது நாளாக போராட ்டத்தை தொடர்ந்த அனிதாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- 

சாஜனுக்கும், எனக்கும் பள்ளி பருவத்திலேயே காதல் ஏற்பட்டது. அவர் தான் என் கணவர் என்று எண்ணிய நான் பலமுறை என்னையே அவருக்கு கொடுத்தேன். கன்னியாகுமரி, திருநெல்வேலி, வேளாங்கண்ணி ஆகிய இடங்களுக்குச் சென்று நாங்கள் ஜாலியாக இருந்தோம். 

இந்தநிலையில் தான� �� அவருக்கு ராணுவத்தில் வேலை கிடைத்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் விடுமுறையில் ஊருக்கு வந்தார். நாங்கள் 2 பேரும் கன்னியாகுமரியில் லாட்ஜ் அறை எடுத்து தங்கி இன்பமாக இருந்தோம். அங்கிருந்து மார்த்தாண்டத்துக்கு ஜோடியாக வந்தோம். அப்போது எனது தந்தை மற்றும் உறவினர்கள் எங்களை பிடித்து ஊர் பிரமுகர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது சாஜன் என்னை திருமணம் செய்து கொள்வதாகவும், 7-ந் தேதி எனது வீட்டுக்கு முறைப்படி பெண் கேட்க வருவதாகவும் கூறினார். ஆனால் அவர் சொன்னபடி 7-ந் தேதி வரவில்லை. இங்கு வந்து பார்த்தால் வீட்டில் யாரும் இல்லை. போனில் தொடர்பு கொண்டு கேட்டால் என்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்கிறார். 

நல்ல வேலையில் இருப்பதால் வரதட்சணைக்கு � ��சைப்பட்டு அவரை உறவினர் ஒருவர் இயக்கி வருகிறார். அவரும் அதற்கேற்ப நடந்து கொள்கிறார். நேற்று மாலை சாஜன் எனக்கு போன் செய்தார். நாளை போலீசார் பேச்சு வார்த்தைக்கு அழைப்பார்கள். அங்கு உன்னை கைகழுவி விடுவேன். நீ வரா விட்டால் நடப்பதே வேறு என்று கூறி மிரட்டினார். நான் இன்று பேச்சுவார்த்தைக்கு போக மாட்டேன். சாஜனின் மனைவியாக தான் இங்கிருந்து செல்வேன். இல்லாவிட்டால் இங்கேய� � பிணமாவேன். 

இவ்வாறு அவர் கூறினார். 

போராட்டத்தில் ஈடுபட்ட அனிதாவுக்கு அந்த பகுதியினர் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

comments | | Read More...

இன்று வைரஸ் தாக்குதல்... உங்க கம்ப்யூட்டர் நல்லாருக்கா, 'செக்கப்' பண்ணி பார்க்க


இன்று உலகம் முழுவதும் டிஎன்எஸ்சேஞ்சர் என்ற கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் உங்களது கம்ப்யூட்டர் சரியாக செயல்படுகிறதா அல்லது வைரஸ் பாய்ந்துள்ளதா என்பதை அற� �ய அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐ ஒரு இணையதளத்தை திறந்துள்ளது. அதில் போய் உங்களது கம்ப்யூட்டர் பாதிக்கப்பட்டுள்ளதா, இல்லையா என்பதை அறிந்து கொள்ளலாம்.

இன்று உலகம் முழுவதும் டிஎன்எஸ்சேஞ்சர் என்ற கம்ப்யூட்டர் மால்வேர் வைரஸ் தாக்குவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி, கம்ப்யூட்டர்களுக்கு மஞ்சக் கயிறும், தாயத்தும் போடாத குறையாக மக்கள் பீதியில் இருந்தார்கள். அந்த திங்கள்கிழமையும் இன்று வந்தாகி விட்டது.

இதுவரை எத்தனை கம்ப்யூட்டர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் உங்களது கம்ப்யூட்டர் பத்திரமாக இருக்கிறதா, இல்லை பஞ்ச� ��யத்தில் கிடக்கிறதா என்பதை அறிய அமெரிக்க எப்பிஐ ஒரு இணையதளத்தை திறந்துள்ளது.

அதற்கான இணைப்பில் போய் கிளிக் செய்தால், பச்சை நிறத்தில் பெரிய டப்பா வரும். அப்படி வந்தால் நீங்கள் படு பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று அர்ததம். மாறாக ரெட் போட்டு வந்த� �ல் உங்களது கம்ப்யூட்டர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அர்த்தம். உடனே அதை ஒரு 'சிஸ்டம் அட்மின் டாக்டரிடம்' காட்டி சரி செய்ய வேண்டும்.

இதோ இதுதான் அந்த இணைப்பு. இங்கு போய் சரி பார்த்துக் கொள்ளுங்கள்


http://dns-ok.us/





comments | | Read More...

பரீட்சையில் முட்டையே வாங்கினாலும் பிஇ படிக்கலாம்... !


நுழைவுத் தேர்வில் உங்களுக்கு ஒரு கேள்வியும் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, எதற்கும் பதிலளிக்காமல் முட்டையே வாங்கினாலும் கூட பரவாயில்லை, அட, கேள்வித்தாளை வாங்கி அதை அப்படியே பெயரை மட்டும் எழுதித் திருப்பிக� �� கொடுத்தாலும் கூட பரவாயில்லை, உங்களுக்கு கண்டிப்பாக பிஇ சீட் உண்டு. கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதா.. ஆனால் ஆந்திராவில் இது நிஜமான ஒன்று.

ஆந்திர மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் இப்படி முட்டை மார்க் வாங்குவோருக்கும் கூட சீட் கொடுக்கிறார்களாம்.

இந்த ஆண்டு நடந்த நுழைவுத் தேர்வில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த 78 பேர் கலந்து கொண்டு எழுதினர். இவர்களில் 22 பேர் ஒரு கேள்விக்குக் கூட பதிலளிக்கவில்லை. அனைத்துமே தவறான பதில்கள்தான். இதனால் அவர்களுக்கு ஒரு மார்க் கூட கிடைக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம், அடிப்படைத் தகுதியான பிளஸ்டூவில் குறைந்தது 40 சதவீத மதிப்பெண் களை இவர்கள் பெற்றுள்ளதே. அதில் இவர்கள் தேவையான மதிப்பெண்களை வைத்திருப்பதால் நுழைவுத் தேர்வில் ஒரு மார்க் கூட வாங்காவிட்டாலும் பரவாயில்லை, சீட் கிடைக்கும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த 22 பேரில் 9 பேருக்கு பொறியியல் படிப்புக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 13 பேருக்கு கால்நடை மருத்துவப் படிப்பு கிடைத்துள்ளது.

நுழைவுத் தேர்வில் முட்டை மார்க் வாங்கும் தலித், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்களால் எம்.பி.பி.எஸ் படிப்பில் மட்டுமே சேர முடியாது. மற்றபடி பொறியியல், விவசாயம், பல் மருத்துவம், கால்நடை, தோட்டக்கலைத்துறை ஆகிய படிப்புகளில் சேர வாய்ப்பளிக்கப்படும்.

ஹைதராபாத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு தொழில்நுட்பப் பல்கலைக்ழகம்தான் ஆண்டு தோறும், பொறியியல், மருத்துவ, விவசாயப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான ரிசல்ட் கடந்த வாரம் வெளியானது.
மொத்தம் தேர்வு எழுதிய 90,917 பேரில் 83,686 பேர் தேர்வாகியுள்ளனர்.

நாட்டிலேயே அதிக அளவிலான பொறியியல் கல்லூரிகள் உள்ளது ஆந்திராவில்தான். அங்கு 671கல்லூரிகள் குவிந்து கிடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அங்கு மாணவர் சீட� �களை விட கல்லூரிகள் குண்டக்க மண்டக்க இருப்பதால் ஆண்டுதோறும் பல்லாயிரம் சீட்கள் காலியாகவே கிடக்கின்றன. இந்த ஆண்டு 1 லட்சம் சீட்கள் வரை காலியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நுழைவுத் தேர்வில் மார்க்கே வாங்காமல் சீட் தருவது குறித்து மாநில ஆளுநர் நரசிம்மன் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நுழைவு த் தேர்வில் ஒரு மார்க் கூட பெறாதவருக்கு தொழில்கல்வியில் இடம் தருவது என்பது ஏற்க முடியாத ஒன்றாகும். இதை சரி செய்ய வேண்டும். குறைந்தபட்ச மதிப்பெண் என்று ஏதாவது இருக்க வேண்டும். நுழைவுத் தேர்விலேயே முட்டை மதிப்பெண் பெறும் ஒரு மாணவரால் எப்படி பொறியியல் படிப்பு போன்றவற்றை முடிக்க முடியும் என்று தெரியவில்லை. மேலும் அவர்களை அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் எப்படி நடத்� ��ுவார்கள். இது மதிப்பெண் பெறாத மாணவர்களுக்கு மன உளைச்சலையும், தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்த வழி வகுத்து விடும் என்றார்.

கடந்த ஆண்டும் இப்படித்தான் 26 பேர் மார்க் ஏதும் வாங்காமலேயே அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 17 பேருக்கு பொறியியல் படிப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger