News Update :
Powered by Blogger.

புதுக்கோட்டை இடைத்தேர்தல்: அ.தி.மு.க.வுக்கு எதிராக பொது வேட்பாளர்- தே.மு.தி.க.-கம்யூனிஸ்டு ஆலோசனை

Penulis : karthik on Monday, 7 May 2012 | 00:14

Monday, 7 May 2012




புதுக்கோட்டை தொகுதிக்க ு ஜூன் மாதம் 12-ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. புதுக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக கார்த்திக் தொண்டைமானை முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 
அந்த கட்சி தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கடந்த தேர்தலில் அ.தி. மு.க. கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற இந்திய கம் யூனிஸ்டு இந்த முறை போட்டியிடவில்லை. சட்டசபை தேர்தலில் 3 ஆயிரத்து 101 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த தி.மு.க.வும் போட்டியிடாது என்று அந்த கட்சி தலைவர் கருணாநிதி அறிவித்து விட்டார்
 
 பா.ம.க., விடுதலை சிறுத்தை கட்சிகளும் போட்டியிடவில்லை. ம.தி. மு.க., தே.மு.தி.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் தங்கள் நிலைப்பாடு என்ன என்பத� � இதுவரை அறிவிக்கவில்லை. இந்த நிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் புதுக்கோட்டை தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
 
புதுக்கோட்டை தொகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு போட்டியிட வேண்டும்Ó என்று பெரும்பாலான நிர்வாக� �கள் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. தங்கள் கட்சி வேட்பாளருக்கு மற்ற கட்சிகளின் ஆதரவை கேட்கலாம் என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளருக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆதரவு அளித்தது. எனவே புதுக்கோட்டை தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வேட்பாளருக்கு தே.மு.தி.க. ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
< div style="border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; font-family: Latha; font-size: 0.9em !important; line-height: 23px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; vertical-align: baseline;"> 
தே.மு.தி.க. போட்டியிடுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஒருவேளை போட்டியிட விரும்பினால் மார்க்சிஸ்டு விட்டுக் கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது. யார் போட்டியிட்டாலும் அது பொது வேட்பாளராகத்தான் இருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயற்குழுவில் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. தே.மு.தி.க. போட்டியிட்டால் தி.மு.க., பா.ம.க. ஆதரவை பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். ஆனால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வேட்பாளர் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டால் தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் பெற முடியும்.
 
எனவே மார்க்சிஸ்டு வேட்பாளர் பொது வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. அ.தி.மு.க.வுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவதில ் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உறுதியாக உள்ளது. எனவே அந்த கட்சி வேட்பாளரே பொது வேட்பாளராக நிற்க அதிக வாய்ப்பு உள்ளது என்று அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது. புதுக்கோட்டையில் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கும் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
ஆளும் கட்சிக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று இணைந்து புதுக்கோட்டை இடைத்தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொள்கிறது. அப்படி பொது வேட்பாளரை நிறுத்தினால் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவளிக்கும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.



comments | | Read More...

மேலும் தாமதமாகும் கமல், அஜீத், சூர்யாவின் படங்கள்!




தமிழ் சினிமாவில் கோடை காலம் மிக முக்கிய சீஸன். நாட்டில் மழை பெய்கிறதோ இல்லையோ... திரையரங்கில் வசூல் மழை இருக்க� ��ம்.

எனவே இந்த கோடையைக் குறிவைத்து முன்னணி நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்கள் தயாராவது வழக்கம்.

இந்த ஆண்டு கோடை ரிலீஸில் முக்கியப் படமாக எதிர்ப்பார்க்கப்பட்டது கமல் ஹாஸனின் விஸ்வரூபம். ரூ 100 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன.

பாடல்கள் சேர்க்கப்படாத, படத்தின் ஒரு பிரதியை கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அனுப்பிவிட்டார் கமல்ஹாஸன் என்று தெரிகிறது. ஆனால் தியேட்டர் ரிலீஸ் இன்னும் தள்ளிப் போகிறது.

படத்தின் விளம்பரம், வர்த்தகம் தொடர்பான வேலைகளை இனிமேல்தான் கமல் துவங்கவிருப்பதால், படம் வெளியாவது தாமதமாகிறது.

இந்த கோடையில் இன்னொரு முக்கிய வெளியீடு அஜீத்தின் பில்லா 2. பெப்சி தொழிலாளர் பிரச்சினை காரணமாக, மே மாதம் வெளியாகவிருந்த இந்தப் படம், ஜூன் அல்லது ஜூலைக்கு தள்ளிப் போயுள்ளது.

சூர்யாவின் மாற்றான் திரைப்படம் மே மாதம் வெளியாகவிருந்தது. ஆனால் இதையும் தாமதப்படுத்தியுள்ளது பெப்சி தொழிலாளர் பிரச்சினை. ரஷ்யா, சீனா என வித்தியாசமான லொகேஷன்களில் பா ர்த்துப் பார்த்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் நல்ல எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

கார்த்தி நடிக்கும் சகுனி ஏப்ரலில் வரவிருந்தது. இந்த மாதம் வெளியாகிவிடும் எனத் தெரிகிறது.

பெரிய படங்கள் வராதது, வழக்கு எண் 18/9 போன்ற சிறிய, ஆனால் நல்ல படங்கள் பக்கம் ரசிக� �்களை அதிகம் போக வைத்துள்ளது. அந்த வகையில் இந்த தாமதத்திலும் ஒரு நல்லது நடந்துள்ளது!



comments | | Read More...

நித்தியானந்தா மீதுள்ள 'கேஸ்' குறித்து யாரும் பேசக் கூடாது- மதுரை ஆதீனம்

Penulis : karthik on Sunday, 6 May 2012 | 21:17

Sunday, 6 May 2012




ஆதீனமாக உள்ள நித்தியானந்தா இனிமேல் கோர்ட், போலீஸ் நிலையங்களுக்கு செல்லக்கூடாது. செல்லவும் மாட்டார். அவர்மீது உள்ள பாலியல் புகார் பற்றி யாரும் பேசக்கூடாது என்று பேசியுள்ளார் மதுரை ஆதீனம்.

திருவண்ணாமலையில் நேற்று ராத்திரி நித்தியானந்தாவுக்கு பட்டாபிஷேகம் நடத்தினார் மதுரை ஆதீனம். அதன் பின்னர் அவர் பேசுகையில், வாழ்நாளில் இந்த நாள் புதிய நாள். மன மகிழ்ச்� �ி, மன நிம்மதி தரும் நாள்.

சிவன்-பார்வதி நிறைந்த திருவண்ணாமலையில் ஆதீன தலைவராக நித்தியானந்தாவை அறிவித்து பட்டாபிஷேகம் செய்வது சிறப்பான ஒன்று. திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட தலம், அருணகிரிநாத� �் அருளிய தலம், ரமணர் சேஷாத்திரி, விசிறி சாமியார் வாழ்ந்த தலம் திருவண்ணாமலை.

ஆதீனமாக பதவி வகிக்க மேதை, ஞானி, பக்குவம், போர்க்குணம் ஆகியவை இருக்க வேண்டும். அது திருவண்ணாமலையில் பிறந்த நித்தியானந்தாவுக்கு இருக்கிறது.

சிவன்-பார்வதி எனது மனதில் தோன்றி மதுரை ஆதீனத்தின் அடுத்த வாரிசாக நித்யானந்தாவை அறிவிக்க வேண்டும் என்று கூறினர். அதன்படி நித்தியானந்தா அறிவிக்கப்பட்டு உள்ளார். நாங்கள் செய்த புண்ணியத்தால் நித்தியானந்தா கிடைத்துள்ளார்.

முதலில் அவர் ஆதீனமாக பதவி ஏற்க மறுத்தார். பல பிரச்சனைகள் வரும் என்று கூறினார். ஆனால் நான்தான் அவரை வற்புறுத்தி ஆதீனமாக பதவியேற்க வைத்துள்ளேன்.

இளைய ஆதீனமாக யாரை அறிவிக்க வேண்டும் என்ற அதிகாரம் எனக்கு மட்டும்தான் உள்ளது. நித்தியானந்தா பரம்பரை தென்மண்டல சைவ வேளாளர் பிரிவில் இருந்து வந்தவர். அவர் ஆதீனமாவதற்கு முழு தகுதியும் உள்ளது.

ஆதீனங்கள் கோர்ட், போலீஸ் நிலையத்துக்கு செல்லக்கூடாது. ஆதீனமாக உள்ள நித்தியானந்தா இனிமேல் கோர்ட், போலீஸ் நிலையங்களுக்கு செல்லக்கூடாது. செல்லவும் மாட்டார். அவர்மீது உள்ள பாலியல் புகார் பற்றி யாரும் பேசக்கூடாது.

மதுரை ஆதீனத்துக்கு சிறந்த நிர்வாகியை உருவாக்கி செல்வதால் என் உயிர் மூச்சு மகிழ்ச்சியுடன் பிரியும் என்று பேசினார் மதுரை ஆதீனம். அவரது பேச்சை நித்தியானந்தா ஆதரவாளர்கள், சீடர்கள் கைகள் தட்டி வரவேற்றனர்.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger