News Update :
Powered by Blogger.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பழங்குடி இனத்தவரை நிறுத்த தீவிரம்

Penulis : karthik on Friday, 4 May 2012 | 06:28

Friday, 4 May 2012




குடியரசுத் தலைவர் தேர்தலில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்துவதற்கான லாபிகள் தீவிரமாக மே ற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் முன்னாள் சபாநாயகருமான பி.ஏ.சங்மா கூறியதாவது:

குடியரசுத் தலைவர் தேர்தலில் பழங்குடி இனத்தவர் ஒருவரை வேட்பாளராக நிறுத்துவதற்காக அனைத்து அரசியல் கட்சிகளின் பழங்குடி பிரிவினரின் ஆலோசனைக் கூட்டம் வரும் 9-ந் தேதி நடைபெற உள்ளது.

குடியரசுத் தலைவர் வேட்பாளராக நான் போட்டியிடவில்லை. அனைத்து அரசியல் கட்சிகளையும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்த கொள்கை அளவில் ஒப்புக் கொள்ள வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அதன் பிறகே வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படும்.

இந்த கருத்து நாட்டின் ஒட்டுமொத்த பழங்குடி மக்களின் விருப்பம். இது எந்த ஒரு அரசியல் கட்சியினுடைய கருத்தும் அல்ல. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. பாஜக தலைவர் கட்காரி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோருக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

நாடு விடுதலை பெற்று 60 ஆண்டுகளாகிவிட்ட நிலையில் தாழ்த்தப்பட்ட மற்றும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குடியரசுத் தலைவர்களாகிவிட்டனர். நாட்டின் பல கோடி பழங்குடி இன மக்கள் உள்ளனர். ஆனால் எந்த ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரும் இதுவரை குடியரசுத் தலைவரானத ு இல்லை.

இந்த விஷயத்தை தற்போது விவாதிக்கத் தொடங்கியிருக்கிறோம். மே 9-ந் தேதியன்று நடைபெறக் கூடிய கூட்டத்துக்கு முன்பாகவோ அல்லது அதன் பின்போ அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் நாங்கள் சந்திக்க உள்ளோம் என்றார் அவர்.

குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் யார் என்ற விவாதம் தொடங்கியபோது பி.ஏ.சங்மாவின் பெயரும் அடிபட்டது. வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. பின்னர் பிரணாப் பெயரே அதிகளவில் முன் வைக்கப்பட்ட� � வருகிறது. இந்நிலையில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த சங்மா தமக்கு ஆதரவாக ஒரு லாபியை உருவாக்கத் தொடங்கி உள்ளார். வெல்லுவாரா சங்மா?



comments | | Read More...

பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்: 20 பேர் பலி




பாகிஸ்தானின், பஜாவுர் நகரில் � ��க்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் பொருள்கள் வாங்குவதற்காக ஒரு கடையில் பாதுகாப்பு அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன், தன் உடலில் கட்டப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான்.

இந்த திடீர் தாக்குதலில் பொதுமக்கள் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் காயமடைந்த 60 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தோரில் பெரும்பாலானோரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதியின் உடல் பாகங்கள் சிதறிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன. அவனுக்கு 14 முதல் 17 வயது வரை இருக்கலாம் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

பாதுகாப்பு படை அதிகாரிகளை குறிவைத்து, இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப� �பேற்கவில்லை.

இதே பஜாவுர் நகரில் நேற்று நடந்த இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்களில், பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உள்பட 5 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.



comments | | Read More...

கோச்சடையானுக்காக தீபிகாவுடன் பரத நாட்டியம் ஆடிய ரஜினி!




கோச்சடையான் படத்துக்காக சூப்பர் ஸ்டார் ரஜினியும் தீபிகாவும் பரத நாட்டியம் ஆடியுள்ளனர். இந்தக் காட்சி கேரளா� ��ில் படமாக்கப்பட்டுள்ளது.

கோச்சடையான் படம், சரித்திரக் கதை. இதில் ஒரு பரதநாட்டியப் பாடல் இடம்பெற்றுள்ளது. சிவபெருமானின் ருத்ர தாண்டவத்துக்கு நிகரான ஒரு பாடல் இந்தப் படத்தில் இடம் பெறுகிறது.

இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உருவாக்கியுள்ள இந்த பாடலுக்கான படப்பிடிப்பு கேரளாவில் நடந்தது. இதில் ரஜினி, தீபிகா படுகோனே இருவரும் பரத நாட்டியம் ஆடினர்.

இந்தி நடன இயக்குனர் சரோஜ்கான் இதற்கான நடனத்தை அமைத்துள்ளார். ரஜினி, தீபிகா இருவருமே சில தினங்கள் ஒத்திகை செய்து பார்த்த பிறகே இந்த நடனக் காட்சியில் நடித்துள்ளனர்.

இது குறித்து டான்ஸ் மாஸ்டர் சரோஜ்கான் கூறுகையில், "தமிழில் நீண்ட நாட்களுக்கு பிறகு நான் பணி புரிகிறேன். அதுவும் ரஜினி படத்தில் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. ரஜினி, தீபிகா படுகோனே இருவரும் இந்த நடனத்துக்காக கடுமையாக உழைத்தனர். குறிப்பாக ரஜினி இதற்கா தீவிரமாக ரிகர்சல் செய்து ஆடினார்," என்றார்.

கோச்சடையான் படம் செப்டம்பர் அல்லது தீபாவளிக்கு ரிலீசாகிறது.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger