News Update :
Powered by Blogger.

கல்லூரி மாணவியின் காதலால் விபரீதம் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை

Penulis : karthik on Tuesday, 21 February 2012 | 22:45

Tuesday, 21 February 2012

 

கல்லூரி மாணவியின் காதலால் ஏற்பட்ட விபரீதத்தால் ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து அம்மா, மகன், மகள் என 4 பேர் தற்கொலை செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ளது கூடல்நகர். கடற்கரையையொட்டி உள்ளது. இந்த ஊரைச்சேர்ந்தவர் ராமச்சந்திரன்(55). இவரது மனைவி இந்திராகாந்தி(50). இவர்களது மகன்கள் குணசேகர்(27), முத்துகிருஷ்ணன்(24), ராமகிருஷ்ணன்(22). மகள்கள் விஜி என்ற லதா(20), ரேணுகா(18). யாருக்கும் திருமணம் ஆகவில்லை. கடந்த 4 ஆண்டுக்கு முன் கோவை மாவட்டம் உடுமலை சென்று அங்கு மளிகைகடை ஆரம்பித்தனர். ஒட்டுமொத்த குடும்பமே ஊடுமலையில் இருந்தபோதிலும் ராமச்சந்திரன் மட்டும் அடிக்கடி ஊருக்கு வந்து செல்வார். இதற்கிடையில் கல்லூரியில் படித்து வந்த விஜிக்கு தந்தையின் உறவினர் மகனுடன் காதல் ஏற்பட்டது. இது வீட்டுக்கு தெரியவரவே, அவர்கள் உறவு பையன்தானே பேசி முடித்து விடலாம் என்று முடிவு செய்தனர். ஆனால் காதலனின் பெற்றோருக்கு இது பிடிக்கவில்லை. அவர்கள் தட்டிக் கழித்து வந்தனர். இதனால் ராமச்சந்திரனின் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது. தங்கையின் காதல் விவகாரத்தால் மனமுடைந்த குணசேகர் 8 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருவண்ணாமலை அருகே காட்டுப்பகுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதைத்தொடர்ந்து மகள் விஜியை அழைத்துக்கொண்டு இந்திராகாந்தி ஊருக்கு வந்துவிட்டார். உடன்குடியில் உள்ள ஒரு பேன்சி ஸ்டோர்ஸ்சில் விஜி வேலைக்கு சேர்ந்தார். இந்நிலையில் அவரது தாய் 'உன் காதல் விவகாரத்தால்தான் அண்ணனும் தற்கொலை செய்தான். உன்னால் தான் எல்லா பிரச்னையும் வருகிறது' என்று அடிக்கடி திட்டியுள்ளார். இதனால் விஜி மனமுடைந்தார். தாயிடம் எதும் பேசாமல் கடைக்கு சென்றுவிட்டார். அங்கு யாரும் இல்லாதநேரம் பார்த்து விஷம் குடித்து இறந்தார். தகவல் அறிந்து உடுமலையில் உள்ள மகன்கள், மகள் மற்றும் தந்தை ஆகியோர் நேற்று முன்தினம் ஊருக்கு வந்தனர். விஜியின் இறுதிச்சடங்கில் பங்கேற்றனர். இந்நிலையில் அன்று நள்ளிரவு, இந்திராகாந்தி, ரேணுகாதேவியை அழைத்துக் கொண்டு இயற்கை உபாதையை கழிக்க கடற்கரைக்கு சென்றுள்ளார். அதன்பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை. நேற்று காலை வீட்டில் உள்ளவர்கள் கண்விழித்து பார்த்தபோது தாய், மகளை காணாது திடுக்கிட்டனர். இதைத்தொடர்ந்து மகன் முத்துக்கிருஷ்ணன் மற்றும் உறவினர்கள் கடற்கரை பகுதிக்கு சென்றனர். அங்கு ரேணுகா மற்றும் இந்திராகாந்தியின் உடல்கள் ஒதுங்கிக் கிடந்தன. தகவலறிந்த போலீசார் சம்பவ இடம் சென்று உடலை கைப்பற்றினர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது. காதல் விவகாரத்தால் ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 4 பேர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

comments | | Read More...

நான் இன்னும் வயசுக்கு வரவே இல்ல .... ! எப்போதும் சின்ன பொண்ணுதான்!

 
 
நான் இன்னும் எவ்வளவோ சாதிக்க வேண்டியிருக்கு. இந்த நேரத்தில் தேவையில்லாமல் எனக்கு திருமணம் என்றெல்லாம் எழுதலாமா, உண்மைய சொன்னா இன்னும் வயசுக்கு கூட வரேல நான்! என்று சூடாகக் கேட்டுள்ளார் தமன்னா.
 
தமன்னாவுக்கும் இன்னொரு நடிகருக்கும் காதல் என்றும், தமன்னா திருமணத்துக்குத் தயாராவதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.
 
அவர் தற்போது தெலுங்கில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் வந்த தமிழ்ப்பட வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
 
இந்த நிலையில், அஜய் தேவ்கனுடன் நடிக்க வந்த வாய்ப்பையும் உதறியிருக்கிறார் தமன்னா. எனவே திருமண செய்தியில் எதுவும் உண்மை இருக்குமோ என்ற கேள்வியை அவரிடமே கேட்டனர் நிருபர்கள்.
 
இதற்கு பதிலளித்த தமன்னா, "தெலுங்கில் மூன்று படங்களை நான் முடிக்க வேண்டி உள்ளது. மூன்றுமே பெரிய படங்கள். அதனால்தான் வேறு வாய்ப்புகளில் கவனம் செலுத்தவில்லை. அடுத்து நான் தமிழில் ஒரு படம் ஒப்புக்கொள்ளவிருக்கிறேன். அதனால்தான் இந்திப் பட வாய்ப்பையே வேண்டாம் என்று கூறிவிட்டேன்.
 
அடிக்கடி என் திருமணம் எப்போது என மீடியா கேட்டு வருகிறது. என் திருமணத்தில் இவ்வளவு அக்கறை காட்டுவதற்கு நன்றி. ஆனால் நான் சின்னப் பொண்ணு. இன்னும் எவ்வளவோ சாதிக்க வேண்டியுள்ளது. இந்த நேரத்தில் திருமணம் பற்றி எழுத ஒன்றுமே இல்லையே," என்றார்.
comments | | Read More...

தமிழ் யுவதியை கூட்டாக கற்பழித்துக் கொன்ற கருணாவின் சகாக்கள்! விக்கிலீக்ஸ்


மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழர் புனர்வாழ்வுக் கழக ஊழியரான தமிழ் யுவதி ஒருவரை கருணா குழுவினர் கடத்திச் சென்று கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின் படுகொலை செய்து உள்ளார்கள் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அறிவித்து இருக்கின்றனர்.

தூதரகத்தில் இருந்து 2007 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து இவ்விபரங்கள் விக்கிலீக்ஸ் மூலம் கிடைத்து உள்ளன.

தூதுவர் ரொபேட் ஓ பிளேக்கால் இந்த அறிக்கை எழுதப்பட்டு இருக்கின்றது.

இதில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு தொடர்புபட்ட மனிதாபிமான அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான ஊழியர்களை கருணா குழுவினர் கடத்தி உள்ளனர் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

இவர்களில் பெண் ஊழியர் ஒருவரை கூட்டாக கற்பழித்து விட்டு கொலை செய்து உள்ளனர். ஆண் ஊழியர்களில் ஒரு தொகையினரை கொன்று புதைகுழி தோன்றி விட்டு சுட்டுக் கொன்று அப்புதைகுழிகளுக்குள் சடலங்களை போட்டு உள்ளனர் என்று உள்ளது.

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger