News Update :
Powered by Blogger.

பிரபுதேவாவை அழிக்கும் முயற்சியில் நயன்தாரா!

Penulis : karthik on Saturday, 18 February 2012 | 03:03

Saturday, 18 February 2012

 

பிரபுதேவா-நயன்தாரா இருவரும் பிரிந்த செய்தியை பேசாத வாயும் இல்லை, தேடாத கண்களும் இல்லை. நயன்தாரா எவ்வளுக்கு எவ்வளவு பிரபுதேவாவுடன் நெருக்கமாக இருந்தாரோ அதே அளவுக்கு வெறுத்தும் விட்டார். பிரபுதேவாவை விட்டு பிரிந்த நயன்தாரா, அவரை விட்டு விலகிச் செல்லும் நடவடிக்கைகளிலும் தீவிரமாக இறங்கி வருகிறார்.

பிரபுதேவாவுடன் சம்பத்தப்பட்ட அனைத்து பொருள்களையும் தன் பார்வையிலிருந்து கூட மறைக்க சொல்லிவிட்டாரம். மனதை திசை திருப்ப நடிப்பில் இறங்கியாயிற்று இனி நிம்மதி தான் என்று தனது கையை பார்த்த நயன்தாரா சோர்ந்தே போய்விட்டாராம்.
"ஈருடல் ஓருயிர்" என்பது போல்(ஒரு காலத்தில்) இருவரும் இருந்ததால் நயன்தாரா தனது இடது கையில் "Pரபு" என பச்சைக் குத்திக் கொண்டது அனைவரும் அறிந்ததே. இப்பொழுது பிரச்சனையே நயன்தாரா கையில் உள்ள பெயர் தான்.கையில் உள்ள பிரபுதேவாவின் பெயர், பிரபுதேவா தன்னுடனே இருப்பது போல் நினைக்க வைக்கிறதாம்.
பெயரையும் அழித்துவிட்டால் அதன் பின் பிரபு சம்பந்தப்பட்ட பொருள் எதுவும் தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்து சில தோல் நிபுணர்களிடம் கருத்து கேட்ட போது தோல் நிபுணர்களோ அதன் மேல் வேறு எதாவது டிசைன் டேட்டூ போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்கள்.
ஆனால் நயன்தாராவோ அந்த பெயர் என் உடலிலேயே இருக்கக்கூடாது என பிளாஸ்டிக் சர்ஜரி செய்வது பற்றி ஆலோசனை கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.
comments | | Read More...

கோவை ரசிகர்களால் இடுப்பில் காயம்பட்ட ஹன்ஸிகா!

 
 
கோவையில் ஆயிரக்கணக்கான ரசிகர்களிடம் சிக்கிக் கொண்டார் நடிகை ஹன்ஸிகா. அவரை தொட்டுப்பார்க்க ரசிகர்கள் பலர் முண்டியடித்ததால் கைகளிலும், இடுப்பிலும் லேசான சிராய்ப்பு ஏற்பட்டு அவதிக்குள்ளானார்.

நேற்று கோவை நகருக்கு வந்திருந்தார் ஹன்ஸிகா. அப்போது அவரைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடிவிட்டனர். அவரை மிக அருகில் பார்க்கவும், தொட்டுப் பார்க்கவும் முண்டியடித்தனர்.

இதனால் திணறிப் போனார் ஹன்ஸிகா. பலர் அவரைக் கிள்ளினர். வேகமாக அவரைப் பிடித்து இழுத்ததால் அவர் உடலில் பல இடங்களில் சிராய்ப்பு ஏற்பட்டது.

இதனால் அலறித் துடித்த ஹன்ஸிகாவை பக்கத்திலிருந்த போலீசார் வந்து மீட்டனர்.



இதுகுறித்து ஹன்ஸிகா கூறுகையில், "ரசிகர்கள் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டனர். நல்ல வேளை போலீசார் வந்து மீட்டனர். நிச்சயம் இனி செக்யூரிட்டியை பலப்படுத்தினால்தான் வெளியில் செல்ல முடியும்," என்றார்.

ஏற்கெனவே சென்னையில் இதே அனுபவத்துக்குள்ளானார் ஹன்ஸிகா என்பது குறிப்பிடத்தக்கது.
comments | | Read More...

”எங்கட ஊரைப் பார்க்க வேண்டும் போல உள்ளது“ - விஜய் தொலைக்காட்சியில் கலங்கிய கண்களுடன் கனடா தமிழ்ப்பெண் சாரிகா

 


தென்னிந்திய தொலைக்காட்சியான விஜய் டீவியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஏடெல் சூப்பர் சிங்கர் - 3 நிகழ்ச்சியில் கனடா தமிழ்ப் பெண்ணும் பங்குபற்றி எல்லோர் மனதையும் கொள்ளைகொண்டுள்ளார்.
பல மாதங்களாக விஜய் டீவியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் பாட்டுப்போட்டியில் ஈழப்பெண் கனடாவில் இருந்து குடும்பமாக சென்று கலந்துகொண்டுள்ளார்.
அவர் தனது பாட்டு திறமையால் மட்டுமல்ல, ஊரையும் நினைவுகூர்ந்து, தமிழர்களின் இன்னல்களை கூறி, எல்லோர் மனதிலும் இடம்பிடித்துள்ளதோடு, ஈழப்பாடல்களையும் பாடி அசத்தியுள்ளார்.
சாரிகா தனது திறமையால் சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.


2010 இல் இதே பாடலை கனடிய தமிழ் தொலைக்காட்சியான டிவிஐ இலும் பாடியுள்ளார் சாரிகா
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger