News Update :
Powered by Blogger.

இன்று காதலர் தினமாம்

Penulis : karthik on Monday, 13 February 2012 | 20:59

Monday, 13 February 2012

 
 

வாழ்த்துக்கள். {கணவன் - மனைவி உட்பட}


இன்று மட்டும்தானா காதலர்களுக்கு அர்ப்பணம்.எல்லா நாட்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டதுதானே.
இது போன்ற நாட்கள் ஒதுக்கலும் ,குறிப்பிட்ட நாளை கொண்டாட வைப்பதும் கார்ப்ரேட் நிறுவனங்களின் கண்டு பிடிப்புதான்.
அன்னையர் தினம்,நண்பர்கள் தினம் என புதிது புதிதாகக் கண்டு பிடித்தது தங்களின் அலங்கார,பரிசுப் பொருட்கள் விற்பனையை பெருக்கத்தான்.
அதற்கென பரிசுப்பொருட்கள்,வாழ்த்துக்கள் என தாயரித்து தள்ளிவிடும் தன்மைதானே அவர்களின் நோக்கம்.
காதலர்களுக்கு என ஒருதினம் ஒதுக்கலும் அவர்களின் சிறந்த வணிகப்புத்திதான்.
அன்று ஒருநாள் மட்டும் தான் காதலா?
அன்பு செலுத்த நாள் பார்ப்பது முறையா?
தோல்வியுற்ற லைலா-மஜ்னு,அம்பிகாவதி-அமராவதி,ரோமியோ-ஜூலியட் போன்ற இணிகளை மட்டும் காதல் சின்னமாக்குவது முறையா?
காதலில் வென்று வாழ்வை நடத்தியவர்களைத்தானே காடலின் சின்னமாக,உதாரணமாகக் காட்ட வேண்டும்.


அம்பிகாவதி- அமராவதி காதல் வெற்றியடந்தால் அதன் பின் நாட்டை விட்டு வாழ்வை வேறு நாடு சென்று துவக்கினால் என்ன துன்பங்களை அவர்கள் அடைந்திருப்பார்கள்.அத்துயரங்கலுக்குப்பின்னரும் அவர்கள் மனதில் காதலுக்கு இடம் இருந்திருக்குமா?
மையலும் குடி கொண்டிருக்குமா?
எதார்த்த உலகை அவர்களின் காவியக்காதல் எதிர் கொண்டு பிழைத்திருக்குமா? அல்லது அமராவதி விலக்கு கேட்டு தனது மன்னராகிய தந்தையை அடைந்திருப்பாளா?
இங்கு தோற்றுப்போன காதல்கள் தான்சோகக் காவியங்களாகி இருக்கின்றன.
வெற்றியடைந்து இணைந்த காதல்கள் சோகவாழ்வாகியே மடிந்துள்ளன.


ஒன்றிரண்டு தப்பிமகிழ்ந்திருக்கலாம்.
அன்னையை நேசி,தந்தையை நேசி.
மகனை நேசி,மகளை நேசி.
முதலில் மனைவியை நேசி.
நேசிப்பதின் மறு வாழ்வுதானே காதலாகிப்போகிறது.
காதல் என்பது மனிதன் பாசத்தின் வெளிப்பாடு.
அதற்குத்தான் காதல் என்ற பெயர்.
ஆதலினால் காதல் செய்வீர் .
இன்று ஒரு நாள் மட்டுமா காதலர் தினம்.



comments | | Read More...

தலைமைச் செயலகமே சங்கரன்கோவிலுக்கு வந்தது போல உள்ளது: வைகோ பிரச்சாரம்

 
 
 
இடைத்தேர்தலை முன்னிட்டு தலைமைச் செயலகமே சங்கரன்கோவிலுக்கு வந்துவிட்டது போன்று உள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
 
சட்டசபை தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியிருந்த மதிமுக தற்போது சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறது. இதையடுத்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ சங்கரன்கோவிலுக்கு வந்தார். கோவில்பட்டி வழியே வந்த அவர் களப்பாகுளம் உள்ளிட்ட இடங்களில் மக்களிடம் ஆதரவு கேட்டார்.
 
சங்கரன்கோவிலில் அவர் பேசியதாவது,
 
தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகியவற்றிற்கு மாற்றாக மதிமுக சட்டசபையில் செயல்படும். கடந்த திமுக ஆட்சியில் ஊழல், குடும்பத்திற்கு முக்கியத்துவம், மத்தியில் பதவியில் இருந்து கொண்டு தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டதால் அக்கட்சியை மக்கள் தூக்கி எறிந்தார்கள். தற்போது அதிமுக பால் விலை, பஸ் கட்டணம் ஆகியவற்றை உயர்த்திய பிறகும் இடைத்தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்கின்றனர்.
 
பெரும்பான்மையான அதிமுக அமைச்சர்கள் சங்கரன்கோவிலில் குவிக்கப்பட்டுள்ளனர். தலைமை செயலகமே ஜார்ஜ் கோட்டையில் இருந்து சங்கரன்கோவிலுக்கு வந்துவிட்டதை போல் உள்ளது. அவர்கள் லாரி, லாரியாக இலவசப் பொருட்களை அள்ளிக் கொடுக்கிறார்கள்.
 
எனவே, அதிமுக அரசுக்கு சட்டசபையில் கடிவாளமாகவும், காருக்கு பிரேக் போலவும், மாட்டுக்கு மூக்கணாங்கயிறு போலவும் மதிமுக செயல்படும். நான் 1977ம் ஆண்டில் இருந்தே அடிமட்ட தொண்டனாக இந்த தொகுதியில் வலம் வந்துள்ளேன். எனவே, மதிமுகவிற்கு ஒரு பிரதிநிதித்துவம் தரும் வகையில், சங்கரன்கோவிலில் வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.



comments | | Read More...

ஸ்டாலினுக்கு எதிராக கிளம்பும் வீரபாண்டியார் மகன்

 
 
 
சேலத்தில் தன்னிச்சையாக இளைஞர் அணி நிர்வாகிகளைத் தேர்வு செய்ய ஏற்பாடு செய்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜாவுக்கு திமுக மேலிடம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
திமுக இளைஞர் அணியைப் பலப்படுத்த அக்கட்சியின் பொருளாளரும், இளைஞர் அணி செயலாளருமான மு.க.ஸ்டாலின் 30 வயதுக்குட்பட்டவர்களிடம் மனு வாங்கி தானே நேரில் சென்று நிர்வாகிகளைத் தேர்வு செய்து வருகிறார். இந்த புதிய நிர்வாகிகள் தேர்வு மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.
 
இந்நிலையில் சேலம் மாவட்டத்திற்கான இளைஞர் அணி நிர்வாகிகளைத் தன்னிச்சையாகத் தேர்வு செய்யும் பொருட்டு முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜா இன்று சேலத்தில் அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள கலைஞர் மாளிகையில் இந்த கூட்டம் நடத்தப்படும் என்று அவர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
 
இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்த திமுக தலைமைக்கழகம் இந்த கூட்டத்தை நடத்தக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இது தொடர்பாக அது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
 
திராவிட முன்னேற்றக் கழக தலைமை கழகத்தின் சார்பில் கழக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்கள் அளவில் பல இடங்களில் இளைஞர் அணிக்கு உறுப்பினர்களை சேர்த்து நிர்வாகிகளை தேர்வு செய்து அறிவித்து கொண்டிருக்கும் நிலையில் இளைஞர் அணி உளபட பல்வேறு அணிகளுக்கு நேரடியாக மாவட்ட கழகமே தேர்வு செய்வதாக சேலம் மாவட்டத்தில் தனியாக அறிவிக்கப்பட்டு இருப்பது தலைமை கழகத்தின் அனுமதி பெறாதது மட்டுமல்லாமல் கழக கட்டுப்பாட்டை மீறியதாகவும் ஆகிவிடும் என்பதால் அந்த முயற்சியை கைவிட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து இன்று காலை 10 மணி வரை நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடக்கவில்லை. இது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கேட்டதற்கு எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்றனர். இருப்பினும் ஒரு சிலர் வீரபாண்டி ஆறுமுகம் வீடு உள்ள பூலாவாரியிலும், கட்சி அலுவலகமான கலைஞர் மாளிகையிலும் கூடியிருந்தனர்.
 
இந்நிலையில் வீரபாண்டி ஆறுமுகம் திமுக தலைமைக்கழகத்தை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் இன்று அறிவித்தபடி நேர்காணல் நடக்குமா என்று தெரியவில்லை.
 
ஏற்கனவே திமுக நிர்வாகக்குழு மற்றும் பொதுக்குழுவில் மு.க. ஸ்டாலின் பெயரைச் சொல்ல வீரபாண்டி ஆறுமுகம் மறந்ததால் அவரை சிலர் பேச விடாமல் தடுத்தது கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரது மகன் வீரபாண்டி ராஜா தன்னிச்சையாக நிர்வாகிகளைத் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டது பிரச்சனையை பெரிதாக்கியுள்ளது.
 
வீரபாண்டி ஆறுமுகம் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger