News Update :
Powered by Blogger.

ஆதரவு கொடுத்திட்டாரு கார்த்திக்... இனி அதிமுகவுக்கு அமோக வெற்றிதான்!!

Penulis : karthik on Saturday, 21 January 2012 | 12:25

Saturday, 21 January 2012

தேர்தல் என்ற சீரியஸான நாடகத்தில் அவ்வப்போது சில சிரிப்பு கேரக்டர்கள்
எட்டிப் பார்த்து காணாமல் போகும்.
அந்தக் கேரக்டர்களில் ஒருவராகிவிட்டார் நடிகர் கார்த்திக். சும்மா
நடிகர்னா கோவிச்சுக்குவார்... நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர்!
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு முதலில் ஆதரவு தெரிவித்து,
அவர்கள்சீட் எதுவும் தராததால், 'கூட்டணியை' முறித்துக் கொண்டு வெளியில்
வந்தவர் கார்த்திக்.
பின்னர் சில தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். அவர்கள் என்ன
ஆனார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. கார்த்திக்குக்காவது தெரியுமா
தெரியவில்லை.
இந்த நிலையில் வரும்சங்கரன் கோயில் நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுகவுக்கு
ஆதரவு அளிக்கப் போவதாக கார்த்திக் கட்சி அறிவித்துள்ளது. இந்தத்
தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து கார்த்திக் பிரச்சாரம் செய்யப்
போகிறாராம்.
இதுகுறித்து கார்த்திக் கட்சியின் மாநிலத் தலைவர் பாலமுருகன்
கூறுகையில்,"சங்கரன்கோவில் தொகுதியில் நாடாளும் மக்கள் கட்சிக்கு கணிசமான
வாக்குகள் உள்ளன. இந்த தொகுதியில் தனித்து போட்டியிட்டபோதே நாங்கள்
10ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றோம். கடந்த உள்ளாட்சி
தேர்தலின்போது அ.தி.மு.க.வை ஆதரித்தோம். அதேபோல்சங்கரன் கோவில்
இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் முத்துச்செல்வியை வெற்றிபெற
செய்யவேண்டும் என்று எங்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் கார்த்திக்
தெரிவித்துள்ளார்.
அதன்படி அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றிக்காக நாங்கள் பாடுபடுவோம்.
அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக கார்த்திக் பிரசாரம் செய்வார். அவரது
பிரசாரதேதி தேர்தல்தேதி அறிவித்தபிறகு தெரிவிக்கப்படும். அடுத்த
பொதுத்தேர்தலின்போது சங்கரன்கோவில் தொகுதியை பொதுத்தொகுதியாக
மாற்றவேண்டும் என்று வலியுறுத்துவோம்," என்றார்.
Tags: sankaran koil , அதிமுக , கார்த்திக் , சங்கரன் கோயில்
comments | | Read More...

திருமணம் ஆன பிறகும் செக்ஸ் கொடுமை: காதலன் தலையை துண்டித்து ஊர்வலம் சென்ற பெண்

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே உள்ள அமோகா கிராமத்தைச் சேர்ந்தவர்
ஷியாம்லால் யாதவ். இவர் அதே ஊரைச் சேர்ந்த பெண்ணை காதலித்தார். இருவரும்
பல வருடங்கள் ஜாலியாக இருந்தனர். அதன் பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர்.
இந்த நிலையில் காதலிக்கு வேறு இடத்தில் திருமணம் நடந்தது. 2 குழந்தைகள்
உள்ளனர். கணவர் குழந்தைகளுடன் அமர்கார் கிராமத்தில் வசித்து வந்தாள்.
இதற்கிடையே அவளது கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால்
அவள் 2 குழந்தைகளுடன் அமோகா கிராமத்தில் உள்ள தாய் வீட்டுக்கு
திரும்பினாள்.
காதலி மீண்டும் ஊருக்கு வந்ததும் ஷியாம்லால் யாதவ் அவளை சந்தித்து பழைய
உறவை புதுப்பித்துக்கொள்ள முயன்றார். அதற்கு அவள் உடன்படவில்லை.
திருமணமாகி குழந்தைகளுடன் இருக்கிறேன். என்னை தொந்தரவு செய்யாதே என்றாள்.
ஆனால் யாதவ் அதை பொருட்படுத்தாமல் செக்ஸ் கொடுமையில் ஈடுபட்டார்.
சம்பவத்தன்று ஷியாம்லால் யாதவ்வயல் வெளியில் தனியாக இருந்த காதலியிடம்
மீண்டும் செக்ஸ் கொடுமையில் ஈடுபட்டார்.
ஆத்திரம் அடைந்த அவள் அரிவாளால் ஷியாம்லால் யாதவ் தலையை வெட்டி
துண்டித்தாள். பின்னர் ரத்தம் சொட்டச்சொட்ட துண்டித்த தலையுடன்
வயல்வெளியில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து ஊருக்குள் சென்றாள்.
தலைமுடியை பிடித்தவாறு தலையுடன் வருவதைப்பார்த்த ஊர் மக்கள்
திகைத்துப்போய் நின்றார்கள். அவர்களை பொருட்படுத்தாமல் அவள்ஊர் மத்தியில்
உள்ள சிவன் கோவிலுக்கு சென்றாள்.
தலையுடன் கோவிலுக்குள் நுழைய முயன்றபோது பொது மக்கள் அவளை தடுத்து
நிறுத்தினர். பின்னர் போலீசை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் அவளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
comments | | Read More...

100 கோடியை நோக்கி !:நண்பன்

ஷங்கர் இயக்கத்தில் விஜய் , ஜீவா , ஸ்ரீகாந்த் , சத்யராஜ் , இலியானா ,
சத்யன் உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகி இருக்கும் படம் ' நண்பன் '.
இந்தியில் வரவேற்பை பெற்ற 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் என்பதால்
படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது. அதனை பூர்த்தி
செய்யும் வகையில் 12ம் தேதியே படத்தினை வெளியிட்டார்கள்.
தமிழகத்தில் மட்டும் 625 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது நண்பன்.
முதல் வாரத்தில் சுமார் 40 கோடியை கல்லா கட்டியிருக்கிறதுநண்பன். படம்
வெளியான முதல் நான்கு நாட்களுக்கு அனைத்து திரையரங்குகளிலும் 95%
நிரம்பியதால் எதிர்ப்பார்த்தை விட நல்ல வசூலாம்.
' எந்திரன் ' படத்தினை அடுத்து அதிக திரையரங்குகள் , மக்களிடம்
கிடைத்திருக்கும் வரவேற்பு , கேரளா , வெளிநாட்டு உரிமை , தெலுங்கு
டப்பிங் உரிமை , இசை உரிமை , டிவி உரிமை என அனைத்தையும் கணக்கிட்டால் 100
கோடியை தாண்டுவது உறுதி என்கிறார்கள் தமிழ் திரையுலகில்.
இதுவரை எந்த ஒரு விஜய் படத்திற்கும் கொடுக்காத விலையைகொடுத்து ' நண்பன் '
படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கி இருக்கிறது விஜய் டிவி என்பது
குறிப்பிடத்தக்கது.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger