News Update :
Powered by Blogger.

இதை விட தமிழக காங்கிரஸுக்கு கேவலம் வேண்டுமா?

Penulis : karthik on Monday, 21 November 2011 | 06:34

Monday, 21 November 2011

 
 
மறைந்த பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத முக்கியத் தலைவர்களில் ஒருவரும், இரும்புப் பெண்மணி என்று உலகத் தலைவர்களால் புகழப்பட்டுவருமான இந்திரா காந்தியின் பிறந்த நாள் கூட சரியாக தெரியாமல் மக்கள் மத்தியில் கேவலப்பட்டுள்ளது தமிழக காங்கிரஸ் கட்சி.
 
இந்திரா காந்தியின் 94வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சியினரோ 105வது பிறந்தநாள் என்று செய்திக்குறிப்பில் குறிப்பிட்டு கேவலப்பட்டுள்ளனர்.
 
காங்கிரஸ் பேரியக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் இந்திரா காந்தி. அமெரிக்காவுக்கு பெரும் மிரட்டலாக விளங்கியவர். பாகிஸ்தான் கண்ணில் விரலை விட்டு ஆட்டியவர். வங்கதேசம் என்ற ஒரு புது நாடு பிறக்க காரணமாக அமைந்தவர். சீனாவைக் கண்டு அஞ்சாமல் செயல்பட்டவர். தனது துணிச்சல் மற்றும் தைரியமான, அதிரடி போக்கால் உலகத் தலைவர்களால் பாராட்டப்பட்டவர். அனைவரின் மதிப்பையும் பெற்றவர்.
 
ஆனால் அப்படிப்பட்ட தலைவரின் பிறந்த நாளைக் கூட சரிவரத் தெரிந்து வைத்துக் கொள்ளாமல் தங்கள் இஷ்டத்திற்கு 105வது பிறந்த நாள் என்று செய்திக்குறிப்பு வெளியிட்டு கேவலப்பட்டுள்ளது தமிழக காங்கிரஸ்.
 
காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரை இப்படியா அவமதிப்பது என்று மூத்த காங்கிரஸார் மனம் ஒடிந்து போய் நிற்கின்றனர்.
 
இந்த லட்சணத்தில் காமராஜ் ஆட்சியை அமைப்போம் என்று வாய் கூசாமல் பேசிக் கொள்கின்றனர் காங்கிரஸார். புதிய தலைவராக ஞானதேசிகன் பதவிக்கு வந்தவுடனேயே நடந்துள்ள இந்த குழப்பம் தமிழக காங்கிரஸாருக்கு கசப்பான அனுபவமாக அமைந்து விட்டது.




comments | | Read More...

ஆவின் பால் அட்டைதாரர்களுக்கு உயர்த்தப்பட்ட விலை விவரம்

 
 
 
ஆவின் பால் அட்டைதாரர்களுக்கு உயர்த்தப்பட்ட விலை விவரம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பால் விலையை உயர்த்தி விற்றால், புகார் கூறலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 
 
ஆவின் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதால், ஆவின் பால் விலையை சமீபத்தில் அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
 
ஆவின் நிறுவனம் தற்போது அதிக கொழுப்பு சத்து மிகுந்த பால், கொழுப்பு சத்து குறைந்த பால் என நீலம், பச்சை, ஆரஞ்சு, மெஜந்தா என 4 வகையான நிறம் கொண்ட பாக்கெட்டுகளில் பாலை தரம் பிரித்து விற்பனை செய்து வருகிறது.
 
 
 
 
அதன்படி 3 சதவீதம் கொழுப்பு நிறைந்த சமன்படுத்திய பால் (நீலநிறம்) அட்டைதாரர்களுக்கு ஒரு லிட்டர் ரூ.17.75-ல் இருந்து ரூ.24 ஆக உயர்த்தப்பட்டது. மற்ற பிரிவு பால்களின் விலை என்ன? பால் சார்ந்த விலைகளின் விலை என்ன என்பது குறித்து சரிவர ஆவின் நிறுவனம் வெளியிடாததால் அதிகாரிகள், பொது மக்கள், சில்லறை வியாபாரிகள் மத்தியில் நேற்று பெரும் குழப்பம் நிலவியது.
 
 
ஆவின் நிறுவனத்தின் குழப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பல சில்லறை கடைகள், சகட்டுமேனிக்கு பால் விலையை ஏற்றி, பொது மக்களுக்கு நேற்று கடும் அதிர்ச்சியை கொடுத்தனர். பொது மக்களுக்கும் சரி வர விலை உயர்வு தெரிய வராததால், கூடுதல் பணத்தை கொடுத்து பாலை வாங்கிச்சென்றனர்.
 
 
உண்மையான விலை என்ன? என்பது குறித்து ஆவின் நிறுவன முக்கிய அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
 
 
3 சதவீதம் கொழுப்பு நிறைந்த சமன்படுத்திய பால் (நீல நிற பாக்கெட்) அட்டைத்தாரர்களுக்கு ஒரு லிட்டர் ரூ.17.75-லிருந்து ரூ.24 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பால் கடைகளில் ரூ.20.50-லிருந்து ரூ.27-க்கு விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 1/2 லிட்டர் அட்டைத்தாரர்களுக்கு ரூ.8.90-லிருந்து 12 ஆகவும், சில்லறை கடைகளுக்கு ரூ.10.25-லிருந்து 13.50-க்கும் விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
 
 
4.5 சதவீத கொழுப்பு சத்து நிறைந்த பச்சை நிற பாக்கெட் 1/2 லிட்டர் அட்டைத்தாரர்களுக்கு ரூ.11-லிருந்து ரூ.14.50-க்கும், சில்லறை கடைகளில் ரூ.13-லிருந்து ரூ.15.50-க்கும் விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிக கொழுப்பு சத்து (6 சதவீதம்) நிறைந்த ஆரஞ்சு நிற பாக்கெட் 1/2 லிட்டர் அட்டைத்தாரர்களுக்கு ரூ.12-லிருந்து ரூ.16.50-க்கு வழங்கப்படுகிறது. சில்லறை கடைகளில் ரூ.14-லிருந்து ரூ. 17.50-க்கும் விற்க அனுமதி வழங்கப்படுகிறது.
 
 
 
இரு முறை சமன்படுத்திய 1.5 கொழுப்பு சத்து நிறைந்த மெஜந்தா நிற பாக்கெட் 1/2 லிட்டர் அட்டைத்தாரர்களுக்கு ரூ.9.25-லிருந்து ரூ.11.50-க்கும், சில்லறை கடைகளில் ரூ.11-லிருந்து 12-க்கும் விற்க அனுமதிக்கப்படுகிறது. நறுமண பால் ரூ.12-லிருந்து ரூ.15 ஆக உயர்ந்துள்ளது என்று கூறினார்.
 
 
 
இந்த பட்டியல் ஆவின் அட்டைதாரர்களுக்கும், கடைகளின் பிரதிநிதிகளுக்கும் தெரிவிக்கப்பட்டு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. அட்டைதாரர்களுக்கு அதிகப்படியான விலை உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
 
 
அதன்படி பழைய விலையில் இருந்து, ஆரஞ்சு கலர் பாக்கெட் ஒரு லிட்டருக்கு ரூ.9 அதிகரித்து உள்ளது. பச்சை நிற பாக்கெட் ரூ.7-மும், புளு கலர் பாக்கெட் ரூ.6.25-மும், மெஜந்தா கலர் பாக்கெட் ரூ. 4.50-மும் அதிகரித்து உள்ளது.
 
 
 
சில்லறை கடைகளை பொறுத்தவரையில் அரசு குறிப்பிட்டுள்ள விலைக்கே விற்க வேண்டும் என்று கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி அதிகப்படியான விலைக்கு விற்பனை செய்தால் பொது மக்கள் அந்த கடைகள் குறித்து ஆவின் நிர்வாகத்திடம், 044-23464500, 044-23464504 என்ற எண்ணிற்கு புகார் செய்யலாம்.
 
 
இதன் மூலம் சகட்டு மேனிக்கு விலையை தாறுமாறாக உயர்த்தி விற்கும் சில்லறை விற்பனை கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 
பால் விலையுடன் அதனை சார்ந்த பொருட்களின் விலையும் உயர்ந்து உள்ளது. வெண்ணெய் ஒரு கிலோ ரூ.100-லிருந்து ரூ.130 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ நெய் 230-லிருந்து ரூ.290 ஆக உயர்ந்து உள்ளது. மைசூர்பாகு, குலோப்ஜமூன் இனிப்பு வகைகள் ரூ.125-லிருந்து ரூ.150 ஆக உயர்ந்தது. பால்கோவா அரை கிலோ ரூ.125-லிருந்து ரூ.140 ஆக உயர்ந்துள்ளது. இது போல் ஐஸ்கிரீம், நறுமண பால் வகைகள் போன்றவற்றின் விலையும் உயர்ந்து உள்ளது.



comments | | Read More...

பிச்சை எடுத்து தமிழக அரசு கஜானாவுக்கு அனுப்புவோம்: கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு

 
 

பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் பாஜகவினர் பிச்சை ஏந்தும் போராட்டத்தை துவங்கியுள்ளனர்.
 
கோவை பீலமேட்டில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கடைகள், பேருந்து பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் பிச்சை ஏந்தியபடி தமிழக அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்தனர்.
 
பிச்சை ஏந்தும் போராட்டத்தை ஒரு வாரம் தொடர்ந்து நடத்தி, அதில் கிடைக்கும் பணத்தை தமிழக அரசின் கஜானாவுக்கு அனுப்ப உள்ளதாக பாஜகவினர் கூறியுள்ளனர்.
 
 
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை பாஜக மாவட்ட தலைவர் நந்தக்குமார்,
 
பொதுமக்களிடம் பிச்சை எடுத்து, அந்தப் பணத்தை தமிழக அரசாங்கத்திற்கு அனுப்ப இப்போது நாங்கள் முயற்சி மேற்கொண்டிருக்கிறோம். எனவே ஒரு வார காலத்திற்கு கோவை மாநகரத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களிடம் மடிப்பிச்சை ஏந்தி, அந்தப் பணத்தை அரசுக்கு அனுப்ப தயாராகி வருகின்றோம். பேருந்து கட்டண உயர்வால் அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றார்.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger