News Update :
Powered by Blogger.

வெள்ளத்தில் சிக்கினார் நடிகை!

Penulis : karthik on Saturday, 12 November 2011 | 02:54

Saturday, 12 November 2011

 
 
 
எச்.எம்.டி பிக்சர்ஸ் சார்பில் வி.இராவணன் தயாரிக்கும் படம், 'செங்காடு'. பிரபு சாலமன் உதவியாளர் ரமேஷ் ராமசாமி இயக்குகிறார். அருண் பிரகாஷ்ரூபா, சுரேஷ்நகினா, உத்தம்விமலா, விக்கிபிரியா ஆகிய நான்கு ஜோடிகளுடன் முத்துக்கருப்பன், அன்பழகன், வேணுகோபால், ரகுநாத் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, மணி. இசை, ஜெரோம் புஷ்பராஜ். பாடல்கள், இளையகம்பன். படம் பற்றி நிருபர்களிடம் ரமேஷ் ராமசாமி கூறியதாவது: வழக்கமாக நான்கு நண்பர்கள், தோழிகள் கதை என்றாலே, இப்படித்தான் இருக்கும் என்ற சினிமா பார்முலா எல்லாருக்கும் தெரியும். இதில் அந்த பார்முலாவை உடைத்து, புதிய திரைக்கதை யுக்தியுடன் உருவாக்கியுள்ளேன். சினிமாத்தனம் இல்லாத சினிமா இது. யதார்த்தமாகவும், ஜனரஞ்சகமாகவும் இருக்கும். நான்கு முன்னணி ஹீரோக்களை வைத்து இயக்குவது சாத்தியம் இல்லை என்பதால், புதுமுகங்களை தேர்வு செய்து, படப்பிடிப்பு நடத்தினேன். கற்பனைக்கதை என்றாலும், வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளைப் பற்றி சொல்லியிருக்கிறேன். காதல் துரோகத்தைக் கூட தாங்கிக்கொள்ள முடியும். நண்பர்கள் செய்யும் துரோகத்தை தாங்கிக்கொள்ளவோ, மறக்கவோ முடியாது என்ற கருத்தை சொல்லும் கதை இது. சமீபத்தில் ஒரத்தநாடு பகுதியிலுள்ள ஆற்றில் அருண் பிரகாஷ், ரூபா நடித்த ஒரு பாடல் காட்சியைப் படமாக்கினேன். அருகிலிருந்த மதகு திறக்கப்பட்டதால், திடீரென்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ரூபா இழுத்துச் செல்லப்பட்டார். பயந்துபோன நாங்கள், அபயக்குரல் எழுப்பினோம். அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஓடிவந்து காப்பாற்றி கரை சேர்த்தனர்.



comments | | Read More...

பாரதிராஜா இயக்கத்தில் பார்த்தீபனுக்கு பதில் அமீர்

 
 
 
பாரதிராஜா இயக்கத்தில் அமீர் ஹீரோவாக நடிக்கும் படத்தின் போட்டோ ஷூட் தேனியில் நேற்று நடந்தது. பாராதி ராஜா தயாரித்து இயக்கும் படம், 'அன்னக்கொடியும் கொடிவீரனும்'. இதில் பாரதிராஜா, ¬ளையராஜா, வைரமுத்து மீண்டும் இணைவதாக இருந்தது. அது தள்ளிப் போயுள்ளதால், ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். 'கோ' கார்த்திகா, இனியா ஹீரோயின்கள். பார்த்திபன், கதையின் நாயகனாக இரண்டு வேடங்களில் நடிப்பதாக இருந்தது. அதற்காக தன்னை பார்த்திபன் தயார்படுத்தி வந்தார். இந்நிலையில் பார்த்திபனுக்குப் பதிலாக அமீர் நடிக்கிறார். அமீரை வைத்து தேனி அருகே நேற்று போட்டோ ஷூட் நடந்தது. படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.



comments | | Read More...

“குடி”மக்களுக்கு ஓர் நற்செய்தி

Penulis : karthik on Friday, 11 November 2011 | 18:25

Friday, 11 November 2011

 
 
 
வீதிகள் தோறும் நமது அரசு மதுபானகடைகளை திறந்து வைத்துள்ளது. இப்போது தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூலமாக கடந்த ஆண்டு 14,965 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும். இந்த வருமானத்தை அடுத்த அண்டில் 20 ஆயிரம் கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளது தமிழக அரசு.
 
இதையடுத்து வியாபாரத்தை அதிகப்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு மாவட்ட தலை நகரங்களிலும், நவீன வசதிகளுடன், குளிரூட்டப்பட்ட பிரமாண்டமான அளவில் இருக்கும் "எலைட் ஷாப்" என்ற பெயரில் மதுபான கடைகளை திறக்கவும், அது தவிர மாவட்டம் தோறும் ஐந்து இடங்களில் சாதாரண மதுபானகடைகளை திறக்கவும் கோட்ட முதுநிலை மேலாளருக்கு அதிகாரம் அளித்துள்ளது தமிழக அரசு.
 
 
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், ஐந்து சாதாரண டாஸ்மாக் கடைகளையும், இரண்டு "எலைட் ஷாப்" கடைகளையும் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்து வருகிறார்கள் மண்டல மேலாளர்கள்.
 
இந்த "பார்"களில் மற்ற "டாஸ்மாக்" பாரில் இருப்பதை காட்டிலும் கொஞ்சம் கூடுதல் "சேவை"க்கட்டணம் வசூலிக்கப்படும் என்று பெயர் சொல்ல விரும்பாத ஒரு அலுவலர் கூறினார்.
 
அரசு மக்களுக்கு செய்யும் "நல்ல சேவை"
 


comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger