News Update :
Powered by Blogger.

2ஜி கடித விவகாரம்: பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் சமரசம்!

Penulis : karthik on Friday, 30 September 2011 | 01:12

Friday, 30 September 2011

 
 
2ஜி விவகாரம் தொடர்பான நிதியமைச்சக கடிதத்தில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் என்னுடைய கருத்தல்ல. அது பல்வேறு அமைச்சகங்களிலிருந்து தொகுக்கப்பட்ட கருத்தாகும் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். இதை ஏற்பதாகவும், பிரச்சினை முடிந்ததாகவும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
 
2ஜி விவகாரத்தில் ப.சிதம்பரத்தைக் குற்றம் சாட்டுவது போல ஒரு கடிதம் மத்திய நிதியமைச்சகத்திலிருந்து பிரதமர் அலுவலகத்திற்குச் சென்றது. இதையடுத்து மத்திய அமைச்சர்களுக்குள் மோதல் மூண்டது. நான் ராஜினாமா செய்ய விரும்புகிறேன் என்று சோனியாவிடம் போனார் ப.சிதம்பரம். கடிதத்துடன் தனக்குச் சம்பந்தம் இல்லை என்றார் பிரணாப் முகர்ஜி. இறுதியில் சோனியா காந்தி, இருவரையும் அழைத்துப் பேசினார். நேற்றும் சுமார் 2 மணி நேரம் பிரணாப் முகர்ஜியுடன் பேசினார்.
 
இதையடுத்து நேற்று மாலை ப.சிதம்பரத்துடன் செய்தியாளர்களைச் சந்தித்தார் பிரணாப். அவர்களுடன் மத்திய அமைச்சர்கள் கபில் சிபல், சல்மான் குர்ஷித் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.அப்போது பிரணாப் முகர்ஜி ஒரு அறிக்கையை வாசித்தார்.
 
அதில், 2011, ஜனவரி மாதத்தில் மீடியாக்களில் 2ஜி விவகாரம் தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன. நிதியமைச்சகம் தயாரித்த அறிக்கை என்பது பல்வேறு அமைச்சகங்கள் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பாகும் என்று விளக்க விரும்புகிறேன். அதில் உள்ள கருத்துக்கள் என்னுடைய கருத்துக்களைப் பிரதிபலிக்கவில்லை என்றார் பிரணாப்.
 
இதையடுத்து அருகில் இருந்த ப.சிதம்பரம் பேசுகையில், அமைச்சரவையில் மதிப்பு வாய்ந்த, மூத்த அமைச்சரான பிரணாப் முகர்ஜியின் அறிக்கையை நான் ஏற்கிறேன். அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விவகாரம் இத்துடன் முடிந்தது என்றார்.
 
நேற்று பிற்பகல் பிரணாபை அழைத்துப் பேசிய சோனியா காந்தி, இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். உங்களது தரப்பிலிருந்து பகிரங்க விளக்கம் வெளியானால்தான் ப.சிதம்பரம் சமாதானமாவார். இந்த விவகாரத்தை விட முக்கியமானதாக, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அதற்கு நாம் முக்கியத்துவம் தர வேண்டியுள்ளது. எனவே இந்தக் கடித விவகாரத்தை இன்றைக்குள் மூடி விடுங்கள் என்று கேட்டுக் கொண்டாராம். இதையடுத்தே ப.சிதம்பரத்தை சந்தித்துப் பேசிய பிரணாப் பின்னர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.



comments | | Read More...

அத்வானி யாத்திரை குறித்து பாஜக ஆலோசனை- மோடி வர மாட்டார் பாஜகவி

 
 
 
பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று டெல்லியில் தொடங்குகிறது. இதில் அத்வானி மேற்கொள்ளவுள்ள ஊழலுக்கு எதிரான யாத்திரை குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ளது. இக்கூட்டத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார்.
 
இன்று தொடங்கி 2 நாட்களுக்கு நடைபெறும் இக்கூ்டடத்தில், அத்வானியின் ரத யாத்திரைதான் முக்கியப் பொருளாக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. ஊழலுக்கு எதிராக தான் தேசிய யாத்திரை மேற்கொள்ளப் போவதாக அத்வானி அறிவித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
 
மேலும் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் வங்கதேசத்துடன் இந்தியா செய்து கொண்ட எல்லைப் பிரச்சினை தொடர்பான ஒப்பந்தமும் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.
 
இந்த முக்கியமான கூட்டத்தில் அத்வானியின் கடும் போட்டியாளராக பார்க்கப்படும் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார். நவராத்திரி விழாவையொட்டி அவர் 9 நாட்களுக்கு விரதம் இருப்பதால் அவர் குஜராத்தை விட்டு வெளியேற மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனால் பாஜக வட்டாரத்தில் குழப்பம் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பாஜக தலைவர் நிதின் கத்காரி கூறுகையில், நாங்கள் அவருடன் பேசிக் கொண்டிருக்கிறோம். இருப்பினும் நவராத்திரி உள்ளிட்டவை தொடர்பாக அவரால் வர முடியாத நிலை காணப்படுகிறது என்றார்.
 
உண்மையில் அத்வானி ரத யாத்திரை தொடர்பான விவாதத்தில் பங்கேற்க மோடி விரும்பவில்லை என்று கூறப்பபடுகிறது. அத்வானி ரத யாத்திரை அறிவித்த அடுத்த சில நாட்களிலேயே 3 நாள் அதிரடி உண்ணாவிரதத்தை அறிவித்து நாட்டின் மொத்தக் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து விட்டார் மோடி என்பது நினைவிருக்கலாம். அத்வானியின் யாத்திரை அறிவிபப்பை மோடியின் உண்ணாவிரதம் தூக்கிச் சாப்பிட்டு விட்டது. இதனால் அத்வானிக்கே கூட அதிருப்திதான் என்று பாஜக வட்டாரத்திலேயே பேசப்படுகிறது.
 
இந்த உண்ணாவிரத வெற்றியால் கவரப்பட்ட மோடி, குஜராத் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டு வருகிறார்.
 
குஜராத்தில் நவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படும். 9 நாள் நவராத்திரி விழாவை அகமதாபாத்தில் 17 நாடுகளின் துணைத் தூதர்கள் முன்னிலையில் மோடி தொடங்கி வைத்தார். இந்த விழா, குஜராத்தை உலக சுற்றுலா வரைபடத்தில் இடம் பெறச் செய்யும் முக்கிய விழா என்றும் அப்போது அவர் கூறினார். எனவே பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் நிச்சயம் அவர் பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.
 
 


comments | | Read More...

பதிவுலகமும் ஆபாசமும்

Penulis : karthik on Thursday, 29 September 2011 | 20:09

Thursday, 29 September 2011

 
 
யாரோ புதியபதிவராம்.ஐடியா மணி என்று பெயர்.அவர் நல்லவராகத்தான் இருக்க வேண்டும்.இல்லாவிட்டால்என்னை ''நீங்க நல்லா இருக்கணும் சண்முகவேல் சார்" என்று சொல்வாரா? நிரூபன் என்னை தன் பதிவில்அறிமுகப்படுத்திய பதிவில் அவர் சொன்னது.ஆண்டாள் பாசுரங்களையெல்லாம் விமர்சித்துஒரு பதிவு எழுதி விட்டார்.வழக்கமாக பதிவுகளில் இம்மாதிரி பார்க்கும்போது நான்விமர்சிப்பதில்லை.இவர் நல்ல ஆளாச்சே! ஏதோ சகவாசதோஷம் என்று எதிர்பதிவு எழுதுவதாகசொல்லிவிட்டேன்.
 
கவர்ச்சி,ஆபாசம் என்று பதிவுலகில் காரசாரமாக தனக்குத் தெரிந்த்தைஎழுதி வருகிறார்கள்.ஆபாசம் என்றால் என்ன என்பது பற்றி முன்பே பதிவில் குறிப்பிட்டுவிட்டேன். வார்த்தைகளோ,படைப்போ,புகைப்படமோ அல்லது படக்காட்சியோ மனதில் பாலுணர்வைஏற்படுத்தினால் அது ஆபாசம்.
 
சினிமாக்களில் கற்பழிப்புகாட்சி இடம்பெறுவதுண்டு.பல திரைப்படங்களிலும் அதன் நோக்கம் ஆபாசம்தான்.சினிமாவைசிறந்த கலையாக கையாளும் இயக்குனர்கள் படங்களில் கற்பழிப்பு காட்சி இருக்கும்.ஆனால்அக்காட்சி பரிதாபத்தையும்,பாதிக்கப்படும் பெண்ணின் மீது பரிவையும் தூண்டுமே தவிரகிளர்ச்சியைத்தருவதில்லை.
 
ஆண்டாளின் பாசுரங்களும் அப்படித்தான்.படிப்பவர்களுக்கு கிளர்ச்சியைதூண்டாது,ஆண்டாள் பாசுரம் பக்தி இலக்கியம்.இலக்கியங்களில் வார்த்தைகளின் நோக்கம்வேறு.முன்பேகுறிப்பிட்ட்து போல இலக்கியம் என்ன உணர்வுகளை ஏற்படுத்துகிறது என்பதை வைத்து அதன்தகுதி தீர்மானிக்கப்படுகிறது.உலகின் சில திரைப்படங்களும்,நாவல்களும் ஆபாசம் என்று தடை செய்யப்பட்டு கலை,இலக்கியத்தகுதி காரணமாக தடை நீக்கப்பட்ட்துண்டு.
 
மணி எதற்காக ஆண்டாளைப் பற்றி விமர்சிக்கிறார்? ஏன் கில்மா பதிவுகளைபெண்களிடம் எதிர்பார்க்கிறார்? இந்த பதிவின் நோக்கமென்ன? இன்று கலாச்சார காவலர்களைவிமர்சிப்பவர்கள் யார்? அவர்களின் நோக்கமென்ன? பெண்களுக்கு சப்போர்ட் செய்து ஹீரோஆகலாம் என்று பார்க்கிறீர்களா என்பது ஏன்?
 
பெண்களுக்கு சப்போர்ட் செய்து எழுதி விட்டால் ஹீரோ ஆகிவிடலாம் என்பதுஉண்மையா? அப்படி யாராவது மணிரத்னம் பட்த்துக்கோ,தங்கர் பச்சான் பட்த்துக்கோ ஹீரோஆகி இருக்கிறார்களா? நான் பல பதிவுகளை அப்படி எழுதியதுண்டு.அடுத்த சிலபதிவுகளுக்கு ஹிட்ஸ் குறையுமே தவிர ஹீரோ மட்டும் ஆகவில்லை.ஆனாலும் எழுதுவதைதவிர்க்க முடியாது.அது பாரதியிடமிருந்து பெற்ற மதிப்பீடு!
 
கில்மா என்பது கவர்ச்சிப்பட்த்தை குறிக்கிறதா? அரைநிர்வாண பட்த்தைகுறிக்கிறதா? எனக்கு தெரியாது.கவர்ச்சி உணர்வுகளைத் தூண்டும் என்று பிரபல பதிவர் நிரூபன்சொல்கிறார்.அப்படியானால் ஆபாசம்தானே! ஆபாச பதிவுகள் என்ன நோக்கத்திற்காகபதிவுலகில் எழுதப்படுகிறது.ஆபாசத்தை எதிர்ப்பவர்கள் கலாச்சார காவலர்கள் என்றால்அதை தூக்கிப்பிடிப்பவர்கள் கலாச்சாரம் இல்லாத ஆட்களா?
 
ஆபாச சொற்களை எழுதுவதில்,வரைவதில்ஆர்வம் உள்ளவர்களை கோப்ரோலாலியா(Corprolalia) என்று சொல்வார்கள்.சில முற்றியமனநோய்களிலும்,முதிர்ச்சி அடையாதவர்களிடமும் இந்நிலை இருக்கும்.இவர்கள்ஆலோசனையும்,சிகிச்சையும் பெறவேண்டியவர்கள்.
 
பெண்கள் சிக்ஸ்பேக்கைவிரும்புகிறார்கள் என்று யார் சொன்னது? விரும்பினால்தானே அதைப்பற்றி எழுதமுடியும்?ஆண்களைப்போல பெண்கள் உடலைப்பார்ப்பதில்லை என்று பல்வேறு ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.தாமரைபட்த்தின் காட்சிக்குத் தகுந்தவாறு பாடல் எழுதலாம்.பதிவர்கள் அதை செய்யுங்கள்,இதை எழுதுங்கள் என்ற ஐடியாவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்களா? அவரவர்களுக்கு தெரிந்ததை எழுதுகிறார்கள்.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger