News Update :
Powered by Blogger.
Showing posts with label கற்பழிப்பு. Show all posts
Showing posts with label கற்பழிப்பு. Show all posts

ஓடும் ரெயிலில் 7 வயது சிறுமி கற்பழிப்பு : குற்றவாளியை பற்றிய தகவல் அளித்தால் ரூ.25 ஆயிரம் சன்மானம் 7 year girl molested in moving train

Penulis : Tamil on Sunday, 11 August 2013 | 18:08

Sunday, 11 August 2013

7 வயது சிறுமியை ஓடும் ரெயிலில்
கற்பழித்த காமுகனை பற்றிய தகவல்
அளிப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் சன்மானம்
வழங்குவதாக ரெயில்வே நிர்வாகம்
அறிவித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம், பக்த கன்வாராம் மார்க்கெட்
பகுதியில் 7 வயது சிறுமி ரத்தம் வடிந்த
நிலையில் மயங்கி கிடப்பதாக
கொத்வாலி போலீசாருக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து, சம்பவ
இடத்திற்கு விரைந்துசென்ற போலீசார்
சிறுமியை மீட்டு சத்தீஸ்கர் மருத்துவ
அறிவியல் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
மருத்துவர்கள் பரிசோதனையில் அந்த
சிறுமி கற்பழிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
மயக்கம் தெளிந்த சிறுமி போலீசாரிடம் அளித்த
வாக்குமூலத்தில் ஹவுரா -
குர்லா எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த நான்
கழிவறைக்கு சென்றபோது ஒருவன்
என்னை பின்தொடர்ந்து வந்து கழிவறைக்குள்
வைத்து கற்பழித்தான். பிலாஸ்பூர் ரெயில்
நிலையத்தில் எனக்கு 10
ரூபாயை தந்து இறக்கி விட்டான்
என்று கூறினாள்.
இதுதொடர்பான வழக்கு தற்போது பிலாஸ்பூர்
ரெயில்வே நிலைய
போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.
சிறுமியின் பெற்றோரை கண்டுபிடிக்கும்
முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள
ரெயில்வே போலீசார், 7
வயது சிறுமியை இந்த கதிக்குள்ளாக்கிய
காமுகனை பற்றிய தகவல்
அளிப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் சன்மானம்
வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும்
சிறுமியின் நிலைமை அபாய கட்டத்தில்
உள்ளதாகவும் தெரிவித்த ரெயில்வே போலீசார்
ஹவுரா - குர்லா எக்ஸ்பிரஸ் ரெயிலின்
சி.சி.டி.வி. பதிவுகளையும்
ஆய்வு செய்து வருகின்றனர்.

comments | | Read More...

காதலி மறுத்ததால் காரிலேயே வலுக்கட்டாயமாக இருமுறை கற்பழித்தார்

Penulis : Tamil on Saturday, 13 July 2013 | 23:43

Saturday, 13 July 2013

ஒடிசா மாநிலம் கஜ்சம் மாவட்டம் பேஜிபுட்
என்ற இடத்தைச் சேர்ந்தவர் சுசாந்த்குமார்
ஸ்வைன். இவர் ஒரு பெண்ணை காதலித்தார்.
போன் மற்றும் எஸ்.எம்.எஸ்.கள் மூலம்
காதலை வளர்த்துக் கொண்டனர்.
இந்த நிலையில் சுசாந்த் குமார்
காதலியை அடைய திட்டமிட்டார்.
இதையடுத்து காதலிக்கு எஸ்.எம்.எஸ்.
அனுப்பி புவனேஸ்வர் வருமாறு அழைத்தார்.
அவரை நம்பி சென்ற காதலியை சுசாந்த்குமார்
காரில் அழைத்துச் சென்றார்.
வழியில் திருமணம் செய்வதாக
ஆசை வார்த்தை கூறி ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினார்.
ஆனால் காதலி மறுத்ததால்
காரிலேயே வலுக்கட்டாயமாக
இருமுறை கற்பழித்தார்.
பின்னர் காரில்
இருந்து வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
பாதிக்கப்பட்ட பெண்ணை சிலர்
மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர்
சம்பவம் பற்றி போலீசில் புகார் செய்தனர்.
போலீசார்
வழக்குப்பதிவு செய்து தலைமறைவான
காதலனை தேடி வருகிறார்கள்.

comments | | Read More...

டென்னிஸ் டிக்கெட் வாங்க வந்த இளம்பெண் கற்பழித்த வாலிபர்

Penulis : Tamil on Thursday, 11 July 2013 | 08:33

Thursday, 11 July 2013

இங்கிலாந்தில் நடைபெற்ற விம்பிள்டன்
டென்னிஸ் தொடரில் கடந்த
ஞாயிற்றுக்கிழமை ஆடவர் ஒற்றையர்
இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் உள்ளூர்
வீரரான ஆண்டி முர்ரே, செர்பியாவின் நோவக்
ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம்
வென்றார்.
இறுதிப் போட்டியில் முர்ரேயின் ஆட்டத்தைக்
காண ஏராளமான ரசிகர்கள் டிக்கெட் வாங்க
காத்திருந்தனர். அவர்களுக்காக விம்பிள்டன்
பார்க்கில் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில்,
அங்கு டிக்கெட்டுக்காக காத்திருந்த 34
வயது பெண்ணை, 30 வயது மதிக்கத்தக்க
ஒரு வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ததாக
கூறப்படுகிறது.
இதுதொடர்பாக புகாரின் அடிப்படையில் அந்த
வாலிபரை போலீசார்
கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர்
அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரிடம்
செப்டம்பர் மாதம் மீண்டும்
விசாரணை நடத்தப்படும்
என்று ஸ்காட்லாந்து யார்டு போலீசார்
தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட
பெண்ணுக்கு மருத்துவ
பரிசோதனை செய்யப்பட்டது.

comments | | Read More...

ராணுவ வீரரை கடத்தி அவரிடம் பலவந்தமாக உடலுறவில் ஈடுபட்ட 2 பெண்கள்

Penulis : Tamil on Wednesday, 1 May 2013 | 05:46

Wednesday, 1 May 2013

  ராணுவ வீரரை கடத்தி  அவரிடம்  பலவந்தமாக உடலுறவில்  ஈடுபட்ட 2 பெண்கள்  ஆண்  கற்பழிப்பு

ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த ராணுவ வீரர், கடந்த 19ம்தேதி நள்ளிரவு மாணிக்காலாந்து மாகாணத்தில் உள்ள முடாரே நகரில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி லிப்ட் கேட்டார். காரினுள் இருந்த ஒரு ஆணும், 2 பெண்களும் அவரை ஏற்றிக்கொண்டனர்.

சற்றுதூரம் சென்றதும் கார் வேறு வழியாக செல்வதைக் கண்ட ராணுவ வீரர், தன்னை இறக்கிவிடும் படி கூறியபோது, காரை ஓட்டிய நபர் கத்தியைக் காட்டி மிரட்டினார்.

பெண்களில் ஒருத்தி அவரது கண்ணை துணியால் கட்டினாள். அடையாளம் தெரியாத இடத்தில் தனிமையான ஒரு வீட்டிற்கு ராணுவ வீரரை அவர்கள் கடத்திச் சென்றனர். அங்கு அவரது ஆடைகளை கழற்றி, நிர்வாணப்படுத்தி செல்போன், பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்ட 2 பெண்களும் பலவந்தமாக அவருடன் உடலுறவில் ஈடுபட்டனர்.

2 பெண்களும் அவருடன் 4 நாட்கள் மாறி, மாறி பலமுறை கட்டாய உடலுறவில் ஈடுபட்ட பின்னர், கடந்த 23ம் தேதி மீண்டும் கண்ணைக் கட்டி காரில் அழைத்து வந்து முடாரே நகர் அருகில் உள்ள டங்கமுவாரா மலைப் பகுதியில் இறக்கி விட்டனர். மலையோரம் இருந்த பெரிய கல்லை எடுத்து அவரது இடது காலை காயப்படுத்தி விட்டு அவர்கள் காரில் தப்பிச் சென்றனர்.

ராணுவ வீரர் முடாரே நகர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அந்த பெண்களையும், அவர்களுடன் இருந்த நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
comments | | Read More...

இந்தியாவில் கற்பழிப்பு அதிகம் நடைபெறுவதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு

Penulis : Tamil on Saturday, 30 March 2013 | 17:43

Saturday, 30 March 2013

பல்வேறு சிறப்பம்சங்களுடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்துவந்த இந்தியா, தற்போது பெருகி வரும் கற்பழிப்பு சம்பவங்களால் தனது கவர்ச்சியை இழந்து வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.சுற்றுலா துறைக்கான ஆய்வு அமைப்பான அசோச்சம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், இந்தியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கை சராசரியாக 25 சதவீதமும், பெண்களின் எண்ணிக்கை மட்டும் 35 சதவீதமும் குறைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.புதுடெல்லியில், ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட செய்தியின் சூடு தணிவதற்குள், மத்திய பிரதேச மாநிலத்தில் 8 பேரால் சுவிட்சர்லாந்து நாட்டு சுற்றுலா பயணி கற்பழிக்கப்பட்டது, ஓட்டலில் தங்கியிருந்த இங்கிலாந்து சுற்றுலா பயணியிடம் அந்த ஓட்டலின் ஊழியர் தவறாக நடந்துக் கொள்ள முயற்சித்த போது, மானத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக அந்த பெண் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்தது போன்ற செய்திகள், இந்திய சுற்றுலா துறையில் தற்போது ஏற்பட்டிருக்கும் மந்தநிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.ஆண் துணை இல்லாமல் பெண்கள் தனியாக இந்தியாவிற்கு சுற்றுலாசெல்ல வேண்டாம் என பலநாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளதும் மற்றொரு காரணமாக கருதப்படுகிறது.இதன் தாக்கத்தால், கடந்த 3 மாதங்களில் மட்டும் பல வெளிநாட்டினர் இந்தியா வருவதற்காக செய்திருந்த முன்பதிவை ரத்து செய்துக்கொண்டிருப்பதாக சுற்றுலா அமைப்பாளர்கள் 72 சதவீதம் பேர் கூறுகின்றனர்.இவர்களில் பெண்களின் எண்ணிக்கைஅதிகம்

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger