News Update :
Home » , » இளவரசன் உடல் மறுபிரேத பரிசோதனை அறிக்கை

இளவரசன் உடல் மறுபிரேத பரிசோதனை அறிக்கை

Penulis : Tamil on Thursday 25 July 2013 | 04:24

தர்மபுரி மாவட்டத்தில் திவ்யா என்ற பெண்ணை இளவரசன் என்ற வாலிபர் காதலித்து கலப்பு திருமணம் செய்துகொண்டார். இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் கலவரம் வெடித்தது. பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் சேர்ந்து வாழ்ந்த இந்த இளம் தம்பதி, துரதிர்ஷ்டவசமாக பிரிய நேரிட்டது. மனைவி பிரிந்து சென்ற சில நாட்களில் இளவரசன் தர்மபுரியில் ரெயில் தண்டவாளம் அருகே இறந்து கிடந்தார்.


அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை அறிக்கையில், இளவரசன் தலையில் அடிப்பட்டதால் இறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதில் தங்களுக்கு திருப்தி இல்லை என்று இளவரசனின் நண்பர் ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார்.

இதையடுத்து டெல்லி எய்ஸ்ம் மருத்துவமனை டாக்டர்கள் 3 பேர், இளவரசனின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டது.

அதன்படி எய்ம்ஸ் டாக்டர்கள் மறுபிரேத பரிசோதனை செய்தபின்னர், இளவரசனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்களின் மறுபிரேத பரிசோதனை அறிக்கை இளவரசனின் தந்தையிடம் வழங்கப்பட்டது. தர்மபுரி நீதிமன்றம் வழங்கிய அந்த அறிக்கையில், இளவரசனின் தலையில் மிகப்பெரிய காயம் ஏறப்டடதால் மரணம் ஏற்பட்டிருக்கிறது. ரெயில் மோதியதால் இந்த காயம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. கனமான இரும்பு பொருள் தாக்கியதாலும் இறந்திருக்கலாம். அதேசமயம் உடலில் வேறு எந்த காயமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger