News Update :
Home » » மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங் இன்று தொடங்குகிறது

மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங் இன்று தொடங்குகிறது

Penulis : karthik on Wednesday 4 July 2012 | 23:00

மருத்துவ படிப்பு தமிழ்நாட்டில் 17 அரசு மருத்துவக்கல்லூரிகளும், 13 தனியார் மருத்துவக்கல்லூரிகளும் உள்ளன. அரசு மருத்துவக்கல்லூரிகளில் 1,653 இடங்கள் ஏற்கனவே உள்ளன. செ� �்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரியில் ஏற்கனவே எம்.பி.பி.எஸ். இடங்கள் 50 மட்டுமே உள்ளன. 

இந்த ஆண்டு மேலும் 50 இடங்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது. அதாவது 100 இடங்களாக அதிகரித்துள்ளது. மேலும் புதிதாக சிவங்கை அரசு மருத்துவக்கல்லூரிக்கு 100 இடங்களுக்கும், கீழ்ப்ப ாக்கம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு கூடுதலாக 50 இடங்களுக்கும் அனுமதி கிடைத்துள்ளது. 

மொத்தத்தில் 200 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் 2145 இடங்கள் ஆகும். இதில் அகில இந்திய ஒதுக்கீடு 15 சதவீதம். மீதம் உள்ள இடங்களுக்கு கவுன்சிலிங் நடைபெறும். எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். பட ிப்பில் சேர பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் 28 ஆயிரத்து 275 பேர் விண்ணப்பித்தனர். 

அவர்களுக்கு ரேண்டம் நம்பர் மற்றும் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இன்று கவுன்சிலிங் ரேங்க் அடிப்படையில் இன்று (வியாழக்கிழமை) சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி கலை அரங்கில் கவுன்சிலிங் தொடங்குகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

பொது கவுன்சிலிங் காலை 11 மணிக்கு தொடங்குகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய் கலந்துகொண்டு கவுன்சிலிங்கை தொடங்கிவைக்கிறார். சுகாதாரத்துறை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் முன்னில� �யில் நடக்கிறது. கவுன்சிலிங் ஏற்பாடுகளை மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் சுகுமார் செய்து உள்ளார்




Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger