News Update :
Home » » மம்தா பானர்ஜி விலகியதால் நிலையற்று போய்விட்டது மத்திய அரசுஎந்த நேரத்திலும் கவிழலாம்: அத்வானி

மம்தா பானர்ஜி விலகியதால் நிலையற்று போய்விட்டது மத்திய அரசுஎந்த நேரத்திலும் கவிழலாம்: அத்வானி

Penulis : karthik on Wednesday 19 September 2012 | 20:58

மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ்
விலகுவதாக அதன் தலைவர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் அதிரடியாக
அறிவித்தார். இதனால்மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த
நிலையில் இதுகுறித்து பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி, திரிணாமுல்
காங்கிரஸ் தனது ஆதரவை திரும்பப்பெற்றதை தொடர்ந்து, ஐக்கிய முற்போக்கு
கூ�® �்டணி அரசு நிலையற்று போய்விட்டது. எந்த நேரமும் ஆட்சி கவிழலாம்
எனகருத்து தெரிவித்தார். மேலும், மத்திய அரசை காப்பாற்றப்போவது சமாஜ்வாடி
கட்சியா, பகுஜன் சமாஜ் கட்சியா என்று தெரிந்துகொள்வதற்கு
பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டுமாறு பாரதீய ஜனதா
வலியுறுத்தும் என தகவல்கள் கூறுகின்றன. இதற்கிடையே ஐதராபாத்தில் பாரதீய
ஜனதா செய்தி தொடர்பாளர் ஷா நவாஸ் உசேன் நேற்று நிருபர்களிடம் பேசினார்.
அப்போது அவர், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மூழ்கும்
கப்பல்.நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல், டீசல் விலை உயர்வு,
கியாஸ்சிலிண்டர் கட்டுப்பாடு போன்றவற்றால் தள்ளாடுகிற கப்பல் (மத்திய
அரசு) எந்த நேரமும் மூழ்கும். இந்த மூழ்கும் கப்பலில் பயணம்
செய்கிறவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தங்களை காத்துக்கொள்ள
வேண்டும். மக்க ள் நலனையும் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார். பாரதீய
ஜனதா துணைத்தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி, லக்னோவில் நேற்று
நிருபர்களிடம் பேசுகையில், மம்தா அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பார்
என்பதை இப்போதே கூற முடியாது. ஆனால் இப்போது ஐக்கியமுற்போக்கு
கூட்டணியில் இடம் பெற்றுள்ள பல கட்சிகள், பாரதீய ஜனதா கூட்டணியில்
இருந்து சென்றவைதான். எங்கள் கூட்டணியில் சேர விரும்புகிறவர்க
வரவேற்கிறோம் என தெரிவித்தார்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger