News Update :
Home » » திரிணாமுல் கட்சியின் நிலைகுறித்து ஜனாதிபதி தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்படும்: மம்தா

திரிணாமுல் கட்சியின் நிலைகுறித்து ஜனாதிபதி தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்படும்: மம்தா

Penulis : karthik on Monday 2 July 2012 | 21:27

கொல்கத்தாவில் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில்  ஜனாதிபதி தேர்தலில் தங்களது நிலைகுறித்து ஆலோசனை கூட்டம் கட்சியின்  எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கல் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிறகு, ஜனாதிபதி தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ்  கலந்துகொள்ளுமா? என மம்தா பான ர்ஜியிடம் கேட்டபோது, இருக்கலாம். ஆனால்,  ஜனாதிபதி தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு ஜனாதிபதி தேர்தலில் தங்களின்  நிலை என்ன  என்பது குறித்து  முடிவெடுக்கப்படும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.,வரும் ஜூலை  19 ஆம் தேதியன்று நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க  தனது கட்சி எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை  கொல்கத்தாவில் இருக்குமாறு மம்தா பானர� ��ஜி கேட்டுக்கொண்டுள்ளார்.திரிணாமுல் கட்சி நூற்றுக்குநூறு ஒழுங்கும் கட்டுப்பாடும் நிறைந்த கட்சி எனவும் ஒரு சிலர் குறை கூறுவது குறித்து கவலை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.  திரிணாமுல் கட்சியின் எம்.பி.சோமன்  மித்ராவும்  அவரது மனைவியும்  அக்கட்சியின் எம்.எல்.ஏ.யுமான சிக்ஹா மித்ரா இருவரும் தனது கட்சியின் தலைமை குறித்து முரண்பாடான கருத்துக்களை கூறிவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger