News Update :
Home » » மலேரியா காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகள் சாதனை

மலேரியா காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகள் சாதனை

Penulis : karthik on Sunday 15 July 2012 | 03:44





சுவிட்சர்லாந்தில் பேஸெல் நகரத்தில் உள்ள மருத்துவக்கல்லூரியின் திட்டத்தலைவரான பிளேய்ஸ் ஜெண்ட்டான் 40 ஆண்டுகால உழைப்புக்கு பின்பு மலேரியா காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்ததில் வெற்றி கண்டுள்ளார். 

அந்த தடுப்பு மருந்து பல்வேறு மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்ப ட்டு இப்போது நம்பிக்கை அளித்து வருகிறது. மலேரியா நோய் வைரசால் ஏற்படுவதில்லை. ஒட்டுண்ணியால் தோன்றுகிறது. ஒட்டுண்ணியால் ஏற்படும் ஒரு நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். 

இதுவும் மருந்து கொடுக்கப்பட்டவரில் நூற்றுக்கு ஐம்பது பேருக்கு பலனிக்கிறது. இந்த ஐம்பது பேர் பலனடைவதே மருத்துவ உலகில் குறிப்ப� ��டத்தக்க சாதனையாகும். 

ஏழு ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் 1 1/2 வயது குழந்தை முதல் ஐந்து வயது சிறுவர் வரை சுமார் 16 ஆயிரம் பேரிடம் இந்த மருந்தைக் கொடுத்து பரிசோதனை செய்து பார்த்ததில் பாதிப் பேருக்கு நோய் தீர்ந்து விட்டது. இருபது வகையான மருந்துகளை கொடுத்து சோதித்தில் இந்த தடுப்பு மருந்து மட்டுமே பாதிப்பேரையாவது சுகப்படுத்தியது. 

இதற்காக பலரும் இருபதாண்டுகளுக்கு மேல் கடுமையான உழைத்துள்ளனர். மலேரியா பாதிக்கப்பட்ட அனைவரும் உயிரிழப்பதைக் காட்டிலும் பாதிப்பேராவது உயிர் பிழைப்பது பெரிய வெற்றிதான். 

இந்த மருந்து நோயைத் தடுக்கிறது என்பது உறுதியான நம்பிக்கையை மருத்துவ ஆராய்ச்சியாளருக்கு அளிக்கின்றது. இதுவே பெரிய சாதனை என்று ஜெனீவா மருந்து ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக இயக்குனர் பெர்னார்டு பிக்கோல் தெரிவித்தார்.






Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger