News Update :
Home » » எஸ்.எம்.எஸ் அனுப்ப விதிக்கப்பட்ட உச்சவரம்பை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

எஸ்.எம்.எஸ் அனுப்ப விதிக்கப்பட்ட உச்சவரம்பை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

Penulis : karthik on Saturday 14 July 2012 | 02:16





ஒரு செல்போனில் இருந்து தனிப்பட்ட தகவல் பரிமாற்றத்திற்கு நாளொன்று 200 குறுஞ்செய்திகள்தான் அனுப்பலாம் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விதி� �்திருந்த கட்டுப்பாட்டை டெல்லி உயர்நீதிமன்றம் தளர்த்தியுள்ளது. ஆனால் செல்போன் உரிமையாளர்களுக்கு அவர்கள் விருப்பம் இல்லாமல் விளம்பர நோக்கோடு அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் மீது விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
இதுபற்றி டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், 'தனிநபர் குறுஞ்செய்திகள் மீது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விதித்த கட்டுப்பாடு, பேச்சு சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளது. அதே நேரம் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு தனிநபர் குறுஞ்செய்திகள் மீது புதிய கட்டுப்பாடுகளை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விதித்துக்கொள்ளலா� ��்' எனக் கூறப்பட்டுள்ளது.
 
வர்த்தக நோக்கோடு அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பல கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் ஒரு செல்போன் எண்ணில் இருந்து நாள் ஒன்றுக்கு 200 குறுஞ்செய்திகள் மட்டுமே அனுப்பலாம் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தற்போது தீர்ப்பு அளித்துள்ளது.







Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger