News Update :
Home » » தெற்காசிய விளையாட்டு போட்டி: இலங்கை அணியில் 8 விடுதலைப்புலிகள்

தெற்காசிய விளையாட்டு போட்டி: இலங்கை அணியில் 8 விடுதலைப்புலிகள்

Penulis : karthik on Saturday 14 July 2012 | 04:41





டெல்லியில் அடுத்த ஆண்டு தெற்காசிய கூட்டமைப்பின் சார்பில் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்கும் அணிகள் தேர்வு செய்வதில் இலங்கை ஈட� �பட்டுள்ளது.
 
இந்த நிலையில் தெற்காசிய போட்டியில் பங்கேற்க விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 8 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை இலங்கை விளையாட்டு துறை மந்திரி ஹர்ஷா அபேகோன் தெரிவித்தார்.
 
இதுகுறித்து அவர் கூறும்போது, அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெற உள்ள தெற்காசிய விளையாட்டு போட்டியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து 8 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 
2009-ம் ஆண்டு நடந்த இறுதி கட்ட போருக்கு பிறகு பல்வேறு முகாம்களில் இருந்த விடுதலைப் புலிகளுக்கு மறுவாழ்வு பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களில் 133 பேரில் இருந்து திறமையானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
 
அவர்களில் 4 பேர் துப்பாக்கி சுடுவதில் திறமையானவர்கள். தலா 2 பேர் கிரிக்கெட், கராத்தே வீரர்கள் ஆவர் என்று தெரிவித்தார்.







Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger