News Update :
Home » » வங்கியில் கொள்ளையடித்தது பீகார் வாலிபர்களா?

வங்கியில் கொள்ளையடித்தது பீகார் வாலிபர்களா?

Penulis : karthik on Wednesday 25 January 2012 | 19:44

பெருங்குடி வங்கியில் துப்பாக்கிமுனையில் நடந்த கொள்ளையில் பீகார்
வாலிபர்கள் ஈடுபட்டார்களா என்று 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை
நடத்தி வருகின்றனர்.
சென்னை பெருங்குடி ராஜிவ்காந்தி சாலையில் உள்ள ஒருகட்டிடத்தின் முதல்
மாடியில் பேங்க் ஆப் பரோடா வங்கி உள்ளது. கீழ் தளத்தில் கட்டிட
உரிமையாளர் பெனாராம் என்பவர் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். முதல்
மாடிக்குச்செல்லும் நுழைவு வாயிலில் வங்கியின் ஏடிஎம் உள்ளது. இந்த
ஏடிஎம் மையத்துக்கு மட்டும் செக்யூரிட்டி உள்ளார்.
நேற்று முன்தினம் பிற்பகல் 1.30 மணிக்கு வங்கிக்கு வாடிக்கையாளர்கள் போல
வந்த 4 மர்ம ஆசாமிகள், வங்கி அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்களை
துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் விரைந்து
சென்றனர். ஊழியர்கள், பொதுமக்கள் என்று யாரையும் வெளியே விடாமல்
வங்கிக்குள் வைத்து 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
கொள்ளையர்கள் இந்தி கலந்த தமிழில் பேசியுள்ளனர். அவர்களுக்கு வங்கி
பற்றிய முழு விவரமும் தெரிந்துள்ளது. இதனால்,இந்த வங்கிக்கு அடிக்கடி
கொள்ளையர்கள் வந்து, பார்த்த பிறகுதான் கொள்ளையடித்துள்ளனர். வங்கியில்
சிசிடிவி கேமரா இல்லை. அதனால் வந்தவர்கள் பற்றிய விவரம் அவர்களிடம்
இல்லை. வங்கிக்கு செக்யூரிட்டியும் இல்லை. இதனால்கொள்ளையர்கள் பற்றிய
எந்த விவரமும் ஊழியர்களுக்கு தெரியவில்லை.
ஆனால், வங்கி ஊழியர்களுக்கு 4 பேர் சமைத்து கொடுக்கின்றனர். அவர்கள்
மூலம் கொள்ளையர்கள் வங்கி பற்றிய தகவல்களை
தெரிந்துகொள்ளையடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவர்களிடம்
விசாரணை நடத்துகின்றனர். அதோடு பெருங்குடி, துரைப்பாக்கம், நீலாங்கரை,
சோழிங்கநல்லூர், வேளச்சேரி ஆகிய இடங்களில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்
அதிகமாக தங்கியுள்ளனர். அதனால் அவர்கள் யாராவது கொள்ளையடித்துள்ளார்களா
என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பகுதிகளில்
பல வீடுகளில் விடிய விடிய சோதனை நடத்தப்பட்டன. 500க்கும்
மேற்பட்டவர்களிடம் விசாரணை நடந்தது.
இதில், இந்தி பேசும் சிலரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்து
வருகின்றனர். ஆனால், கொள்ளையர்கள் பற்றிய எந்த தகவலும் தெரியவில்லை.
சென்னையில் துப்பாக்கி கலாச்சாரம் கடந்த சில நாட்களாக குறைந்திருந்தது.
ஆனால் கொள்ளையர்கள் தைரியமாக துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துள்ளனர்.
பீகார், உ.பி போன்ற மாநிலங்களில் எளிதாக குறைந்த விலைக்கு துப்பாக்கி
கிடைக்கும்.
இதனால் அங்கிருந்து துப்பாக்கியை எடுத்து வந்து வடமாநில வாலிபர்கள்
கொள்ளையடித்திருக்கலாம். சம்பவம் நடந்தவுடன், சென்னை, திருவள்ளூர்,
காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். வாகன
சோதனையும் நடத்தப்பட்டது. எனினும் யாரும் பிடிபடவில்லை. கொள்ளையர்களை
பிடிக்க 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கொள்ளையர்கள் வங்கியில் கொள்ளையடித்த போது அங்கு இருந்தவர்களின்
செல்போன்களை பறித்துச்சென்றனர். அவர்கள் பறித்துச்சென்ற செல்போன் எண்களை
சைபர் கிரைம் போலீஸ் உதவி கமிஷனர் ஜெகபர்சாலி தலைமையில் போலீசார்
கண்காணித்து வருகிறார்கள்.
ஆனால் நேற்று மாலை வரை 5 செல்போன்களும் இயக்கப்படாமல் சுவிட்ச் ஆப்
செய்யப்பட்டிருந்தன. இதனால் கொள்ளையர்கள் பற்றி துப்பு கிடைக்கவில்லை.
கொள்ளையர்கள் 2 துப்பாக்கி வைத்துள்ளனர். அதனால் தனிப்படை போலீசார்
பிடிக்கும்போது, அவர்கள் மீது கொள்ளையர்கள் துப்பாக்கியால் தாக்குதல்
நடத்தலாம்.
இதனால் தனிப்படை போலீசார் ஆயுதத்துடன் தான் செல்ல வேண்டும். உயிருக்கு
ஆபத்து ஏற்படும் பட்சத்தில் தேவைப்பட்டால் கொள்ளையர்களை சுட்டுப்
பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, 'கொள்ளையர்கள்
வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முதல் கட்ட விசாரணையில்
தெரியவந்துள்ளது. கொள்ளையர்கள் துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்கள்
வைத்துள்ளதால், அவர்களை சுட்டுப் பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது'
என்றார்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger