News Update :
Home » » ஊழலுக்கு இடதுசாரி மட்டும் என்ன விதிவிலக்கா ? கேரள மாஜி முதல்வர் அச்சு.,மீது நில மோசடிவழக்கு

ஊழலுக்கு இடதுசாரி மட்டும் என்ன விதிவிலக்கா ? கேரள மாஜி முதல்வர் அச்சு.,மீது நில மோசடிவழக்கு

Penulis : karthik on Friday 13 January 2012 | 02:17

நாட்டில் எந்தகட்சிதான் ஊழல் இல்லாத நிர்வாகத்தை தரப்போகிறதோ என்ற
கேள்விதான் எழுந்தி நிற்கிறது. காரணம் காங்கிரஸ் முதல் கம்யூ., வரை எந்த
ஒரு கட்சியும் யோக்கியவான் என்ற நெஞ்சு நிமிர்த்து சொல்ல திராணி இல்லாமல்
போயிருக்கிறது என்பதுதான் நிசப்தம். ஜார்கண்ட் முதல்கர்நாடகாவரை பல்வேறு
முதல்வர்கள் ஊழல் வழக்கில் சிக்கியவர்களாகத்தான் இருக்கின்றனர். கேரள
மாநிலத்தில் பெரும் செல்வாக்குடன் இருந்தவரும் வாய்சொல்லில் வீரருமான
அச்சுதானந்தன் மீது தற்போது நில மோசடி வழக்கு பதிவாகியிருக்கிறது. இன்று
கோழிக்கோடு கோர்ட்டில் இதற்கானஆவணங்கள் தாக்கல் செய்யப்படுகிறது. இவரது
ஆட்சி காலத்தில் காசர்கோடு என்ற மாவட்டத்தில் முன்னாள் ராணுவத்தினருக்கு
இடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட து.
இதில் அச்சுதானந்தன் தனது உறவினருக்கு முறைகேடாக இடம் ஒதுக்கி சலுகை
காட்டியுள்ளார். இந்த விவகாரம் குறித்து புகார் செய்யப்பட்டு , பல
யோசனைகளுக்குபின்னர் விசாரணை நடத்தப்பட்டது. இதில் உண்மை இருந்ததயைடுத்து
லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். இவருடன்
அமைச்சராக இருந்த கே.பி., ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் உள்பட 7 பேர்
இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக சேர்க்ப்பட்டுள்ளனர்.
மார்க்., கம்யூ., கட்சியை சேர்ந்தவி.எஸ்., என்றழைக்கப்படும் அவர்
பேச்சுதிறன் கொண்டவர்.இவர் 1985 முதல் இந்த கட்சியின் பொலிட்பீரோ
உறுப்பினாராக இருந்து வருகிறார். கேரளாவில் கம்யூ., கட்சியை பலப்படுத்திய
பெருமை இவருக்கு உண்டு.
ஆழப்புழா மாவட்டத்தில் பிறந்த இவருக்கு வயது 88. நான் நேர்மையானவன்
என்கிறார் அச்சு எனது மீது காங்கிரஸ் அரசு, சேறு வாரி பூசுவதற்காக லஞ்ச
ஒழிப்பு துறையை பயன்படுத்தியிருக்கிறது. நான் எவ்வித தவறும் செய்யவில்லை.
நான் 50 ஆண்டுகால அரசியலில் இருப்பவன். மக்களுக்கு என்னைப்பற்றி
தெரியும். சட்டப்படி வழக்கை சந்திப்பேன் என்றார் அச்சு. ஆனால் கேரள
காங்கிரஸ் இதனை மறுத்துள்ளது. இதில் எவ்வித பழிவாங்கும் நோக்கமும் இல்லை
என்று கூறியிருக்கிறது. எதிர்கட்சி தலைவர் பதவி ராஜினாமா ? மோசடி வழக்கு
தொடர்வதையொட்டி அச்சுதானந்தன் தனது எதிர்கட்சிதலைவர் பதவியில் இருந்து
விலக முடிவு செய்திருக்கிறார். இதற்கென அவர் தன்னை பதவியில் இருந்து
விடுவிக்குமாறு சி.பி.ஐ.எம்., மத்தியக்குழுவிடம் அனுமதி கேட்டுள்ளார்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger