News Update :
Home » » கமல்-தனுஷ்-ஜாக்கிசான்! ஆஸ்கார் தயாரிப்பில்!

கமல்-தனுஷ்-ஜாக்கிசான்! ஆஸ்கார் தயாரிப்பில்!

Penulis : karthik on Friday 13 January 2012 | 00:44

மிகப்பெரிய பட்ஜெட்டில் படமெடுக்க திட்டமிடும் இயக்குனர்களின் நினைவிற்கு
வரும் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். கமல்ஹாசன் நடித்த தசாவதாரம்
படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் தான்.
இந்த வருடத்தின் இறுதிக்குள் கமல்ஹாசனும் ரவிச்சந்திரனும் இணைவார்கள் என
தெரிகிறது. இதை பற்றி ரவிச்சந்திரன் " தசாவதாரம் படத்திற்கு அடுத்ததாக
கமலும் நானும் இணைவது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது.
கமல் இயக்கி நடித்துக்கொண்டிருக்கும் " விஸவரூபம் " படம் முடிந்ததும்
என் படத்தில் நடிப்பதாக கூறியுள்ளார். படத்தை பற்றிய மற்ற தகவல்கள்
விரைவில் வெளிவரும். " என்று கூறியிருப்பதாக தெரிகிறது.
கமல்ஹாஸனை புக் செய்த ஆஸ்கார் ரவிச்சந்திரன் அடுத்ததாக நடிகர் தனுஷுடன்
இணைகிறார். தனுஷ் நடிக்கும் 3 படத்தின் படப்பிடிப்பு கடைசி
கட்டத்தில்இருக்கிறது. படப்பிடிப்பு முடிந்ததும் சிறிய ஓய்விற்குப்பின்
ஆஸ்கார் ரவிச்சந்திரன் படத்தில் நடித்துக் கொடுப்பதாகதனுஷ் ஒப்புக்
கொண்டுள்ளார்.
இது பற்றி ரவிச்சந்திரன் " தனுஷ் ஆஸ்கார் நிறுவனத்தின் தயாரிப்ப்பில்
நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்றைய இளம்நடிகர்களில் சிறந்தநடிகர்
தனுஷ் " என்று புகழாரம் சூட்டியுள்ளார். இயக்குனர்களுடன்
பேசிக்கொண்டிருப்பதாகவும் , தனுஷுக்கு அட்வான்ஸ் கொடுத்து விட்டதாகவும்
கூறியுள்ளார்.
தனுஷ் மற்றும் கமல்ஹாஸனை புக் செய்துள்ள தயாரிப்பாளர் ரவிச்சந்திரன்
ஹாலிவுட் நடிகர்ஜாக்கிசானையும் புக் செய்திருப்பதாக தெரிகிறது.
ஜாக்கிசான் நடிக்கும் படத்தை தயாரிக்கப் போகும் ரவிச்சந்திரன் அந்த
படத்தில் தமிழ் மற்றும் இந்தி திரையுலக நட்சத்திரங்களையும் நடிக்க
வைக்கும் திட்டத்தில் உள்ளதாக பேசிக்கொள்றார்கள்.
ஆஸ்கார் ரவிச்சந்திரனும் , ஜாக்கிசானும் நல்ல நண்பர்கள். ரவிச்சதிரன்
தயாரித்த தசாவதரம்படத்தின் பாடல் வெளிட்டு நிகழ்ச்சிக்கு ஜாக்கிசான்
சிறப்பு விருந்தினராக வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger