News Update :
Home » » சொன்னது உண்மையாகி போச்சுப்பா இப்போ ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது

சொன்னது உண்மையாகி போச்சுப்பா இப்போ ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது

Penulis : karthik on Sunday 22 January 2012 | 03:52

கூடன்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்திற்கு அமெரிக்காவில்
இருந்து பெற்று ஜெர்மனியை சேர்ந்த ஒருவர் மூலம் நிதி அனுப்பி
வைக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் வந்த பணத்தை தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள்சிலருக்கு வட்டிக்கு விட்டும் வருமானத்தைபெருங்கி தங்களை
வளப்படுத்திக்கொண்டனர் என்றும் தெரிய வந்திருக்கிறது. ரூ. 14 ஆயிரம் கோடி
செலவில் கூடன்குளம் அணுமின் நிலையத்தின் மூலம் ஆயிரம் மெகாவாட் மின்சாரம்
உற்பத்தி செய்ய 8 யூனிட்டுகள் துவக்கப்பட்டன. பணிகள் அனைத்தும்
முடிவடைந்தவேளையில் இது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்ற
பீதியை உருவாக்கி உதயக்குமார் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டு
வருகிறது. இதற்கு மாநில அரசின் உதவியையும் சிறுபான்மை சமூகம் என்பதால்
ஒரளவு பெற்று விட்டார். இதனால் இவர்கள் கூறியதை கேட்டு தமிழக அரசு மத்திய
அரசுக்கு மக்களின் அச்சம் நீங்கும் வரை இதனை திறக்க கூடாது என்றும்
கடிதம் எழுதியது. இதனை தொடர்ந்து போராட்டம் வலுப்பெற்ற காரணத்தினால்
மத்திய அரசு சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு, போராட்டக்காரர்களுடன்
பேச்சு நடத்தப்பட்டது. 3 முறை நடந்த இந்த பேச்சு தோல்வியில் முடிந்தது.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அணுஉலையை பார்வையிட்டு, இது இந்திய
நாட்டுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றும், எவ்வித பாதிப்பையும்
ஏற்படுத்தாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் சர்டிபிகேட் கொடுத்தார்.
இருப்பினும் இந்த பகுதியினர் எதிர்ப்பை கைவிடவில்லை.
இந்த போராட்டம் பல நாட்கள் தொடர்ந்து நடந்தது. இப்பகுதி கிராமத்தினர்
பணிக்கு கூட செல்லாமல் அணுமின்நிலைய வாசல் அருகே மேடை அமைத்து காத்து
கிடந்னர். போராடும் மக்களுக்கு சாப்பாடு முதல் படி காசு வரை செம கவனிப்பு
நடந்தது. ஒரு தனியார் போராட்டக்குழு இப்படி தொடர்ந்து போராட எங்கிருந்து
நிதி வருகிறது என்றும், இது வெளிநாட்டு பணமாக இருக்குமோ என்றும் மத்திய
அதிகாரிகளுக்குசந்தேகம் வலுத்தன.
இதனை தினமலர் நாளிதழ் கூட பல முறை செய்தியாக வெளியிட்டுள்ளது. மத்திய
அமைச்சர் நாராயணசாமி இந்த நிதி குறித்து ஆராய வருமான வரித்துறை
அதிகாரிகளிடம் பணித்துள்ளோம் என்றார்.
வட்டிக்கு விட்டு பிழைப்பு நடந்தது : இதன்படி கடந்த வாரம் வருமானவரி
மற்றும் உள்துறை மத்திய அதிகாரிகள் தூத்துக்குடி மற்றும் மதுரையில் உள்ள
தனியார் தொண்டு நிறுவனங்களில் சென்று ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில்
முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர், பின்னர் டில்லி சென்ற
குழுவினர் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிக்கை எதுவும் வெளியிடாமல்
இருந்தனர். இந்நிலையில் இந்த நிதி அமெரிக்காவில் இருந்து அனுப்பி
வைக்கப்பட்ட பணம் , ரெய்னா ஹெர்மான் என்ற ஜெர்மனியை சேர்ந்தவர் மூலம்
நிதி போராட்டக்காரர்களை சென்றடைவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பணம் கேரள
மீனவ சங்கங்கள் மூலம்தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு வந்து பின்னர்
கூடன்குளம் போராட்டக்காரர்களுக்கு போய் சேர்ந்திருக்கிறது. இந்த பணத்தை
சிலர் வட்டிக்கும் விட்டு பிழைத்துள்ளனர். அணு ஆயுதத்தை பொறுத்தவரை
இந்தியா முன்னேறுவது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளான ஜெர்மன்,
பிரான்ஸ்சுக்கு பொறாமையாகத்தான் இருந்து வருகிறது. சமீபத்திய பொக்ரான்
அணு சோதனை மூலம் அமெரிக்கா இந்தியாவின் திறமையை கண்டு ஆச்சரியம்
அடைந்தது. இதனால் ரஷ்யா மூலம் இந்தியா கூடன்குளம் அணுமின் நிலைய துவக்கம்
இந்நாடுகளுக்கு மன நெருடலாகவே இருந்து வந்திருக்கிறது. இதன் காரணமாக
அமெரிக்கா தூண்டுதலின் பேரில் இந்த போராட்டம் வலுப்பெற்று இருக்குமோ என்ற
சந்தேகமும் எழுந்துள்ளது.
பீடி தொழிலாளர் மற்றும் மீனவர்கள் தங்களின் சொந்த காசை கொடுத்ததன் பேரில்
எங்கள் போராட்டம் நடந்து வருகிறது என உதயக்குமார் கூறி வந்தார்.
இந்நிலையில் மத்திய அரசின் ஆய்வில் தெரிய வந்திருப்பதால் தொண்டு
நிறுவனங்கள் மீதும் போராட்டக்காரர்கள் மீதும்
கேரளாவில் படித்தவர் உதயக்குமார்: போராட்டத்தை முன்னிறுத்தி நடத்திவரும்
உதயக்குமார் கேரள பல்கலை.,யில் பட்டம் பயின்றவர். இதனால் இவருக்கும்
இங்குள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் தொடர்பு இருந்து வந்துள்ளது.
ஜெர்மன் மூலம் வந்த நிதி கேரளாவுக்கு வந்தது, இந்த பணத்தை
போராட்டக்காரர்களிடம் ஒப்படைக்க கேரளத்தை சேர்ந்தவர்கள் அடிக்கடி
கூடன்குளம் வந்து போயுள்ளனர். வரும் 31 ம் தேதி மத்தியகுழுவினர் 4 ம்
கட்ட் பேச்சு நடத்தவுள்ளனர். இந்த பேச்சு வார்த்தையில் போராட்டக்குழுவில்
இடம் பெற்றுள்ள நிபுணர்களையும் அழைக்க வேண்டும் என உதயக்குமார்
வலியுறுத்தி வந்தார். இந்த குழுவினரும் கேரளாவில் இருந்து வந்த பணத்தை
பெற்றுள்ளனர், குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வரும் பணம் ஏழைகளுக்கு
உதவும் விதமாகத்தான் இருக்க வேண்டும். இதனை திரும்ப பெறுவதோ தொழில்
நடத்துவதோ சட்டப்படி குற்றம் ஆகும். ஆனால் வட்டிக்கு விட்டுள்ளனர்
என்பதுதான் கூடுதல் அதிர்ச்சி.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger