News Update :
Home » » இணையதளங்களுக்கு தணிக்கை இல்லை- மத்திய அரசு

இணையதளங்களுக்கு தணிக்கை இல்லை- மத்திய அரசு

Penulis : karthik on Saturday 17 December 2011 | 04:36

 
 
 
சமூக இணைய தளங்களை தணிக்கை செய்யும் எண்ணமில்லை என்று மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.
 
இணைய தளங்களில் நடைபெறும் குற்றங்களை தடுப்பது பற்றிய ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் கூகுள், பேஸ்புக், டுவிட்டர் போன்ற இணைய தள நிறுவங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் தலைமை தாங்கினார்.
 
கூட்டம் முடிந்ததும், கபில்சிபல் நிருபர்களிடம் கூறுகையில், "இணைய தள குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டிக்க தேவையான சட்டங்கள் தற்போது அமலில் இருக்கிறது. எனவே புதிய சட்டம் கொண்டு வர தேவை இல்லை'' என்றார்.
 
"இந்திய மக்களுக்கு பேச்சுரிமை போல எண்ணத்தை வெளிப்படுத்தும் உரிமையும் இருக்கிறது. அதன்படி இணையதளங்களில் மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதை தடை செய்ய முடியாது. இதற்காக இணைய தளத்தில் சென்சார் கொண்டு வரும் எண்ணம் அரசுக்கு இல்லை'' என்று, மத்திய தொலை தொடர்புத்துறை இணை அமைச்சர் சச்சின் பைலட் தெரிவித்தார்.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger