News Update :
Home » » மனைவியுடன் சினேகன் தொடர்பு வழக்கு: குழந்தை, தந்தையுடன் வசிக்க கோர்ட்டு உத்தரவு

மனைவியுடன் சினேகன் தொடர்பு வழக்கு: குழந்தை, தந்தையுடன் வசிக்க கோர்ட்டு உத்தரவு

Penulis : karthik on Tuesday 29 November 2011 | 21:26

 
 
 
சென்னை குடும்ப நல கோர்ட்டில் மடிப்பாக்கம் சக்திநகரை சேர்ந்த பிரபாகரன் தனது மனைவியுடன் நடிகர் சினேகன் தொடர்பு வைத்து இருப்பதாக வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
 
எனக்கும், ஜமுனாகலா தேவிக்கும் 2004-ல் திருமணம் நடந்தத. எங்களுக்கு சஞ்சனாஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. எனது மனைவி நாட்டியப் பள்ளி நடத்துகிறார். அவ ருக்கும், நடிகர் சினேகனுக்கும் தொடர்பு ஏற்பட்டது. ஜமுனாவிடம் சினேகன் நாட்டியம் கற்றார்.
 
எனது மனைவியிடம் சினிமாவில் டான்ஸ் மாஸ்டர் ஆக்குவதாக ஆசைவார்த்தை கூறினார். என் பேச்சை கேளாமல் ஜமுனா சினேகனுடன் சுற்ற தொடங்கினார். அவர்கள் தவறான உறவை ஏற்படுத்திக் கொண்டனர். ஒரு கட்டத்தில் என்னுடன் வாழமாட்டேன் என்று கூறிவிட்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
 
தற்போது குழந்தை என்னுடன் வசிக்கிறாள். குழந்தையை அபகரிக்க ஜமுனா முயற்சிக்கிறார். என்னிடமே குழந்தை வாழ உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கு நீதிபதி ராஜாசொக்கலிங்கம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
 
அப்போது குழந்தை சஞ்சனாஸ்ரீ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டாள். குழந்தை தந்தையுடன் மகிழ்ச்சியாக இருந்தது. இதையடுத்து பிப்ரவரி 1-ந்தேதி வரை தந்தையுடன் குழந்தை சஞ்சனாஸ்ரீ வசிக்க நீதிபதி உத்தரவிட்டார்.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger