News Update :
Home » » அப்பாக்கள் வரலையே: ஸ்ருதி, ஐஸ்வர்யா வருத்தம்!

அப்பாக்கள் வரலையே: ஸ்ருதி, ஐஸ்வர்யா வருத்தம்!

Penulis : karthik on Tuesday 27 September 2011 | 00:31

 
 
 
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும், ஸ்ருதி ஹாசன் நடிக்கும் 3 படப்பிடிப்பிற்கு தங்களது அப்பாக்கள் ரஜினி மற்றும் கமல் வரவலில்லையே என்று அவர்கள் வருத்தம் அடைந்துள்ளனராம்.
 
ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா தனுஷ் 3 படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இதில் கதாநாயகனாக அவரது கணவர் தனுஷ் நடிக்கிறார். தனுஷுக்கு ஜோடியாக தனது தோழி ஸ்ருதி ஹாசனை நடிக்க வைத்துள்ளார்.
 
ஐஸ்வர்யாவும், ஸ்ருதியும் செட்டில் இருப்பதால் அவர்களது தந்தைகள் அதாவது ரஜினியும், கமலும் படப்பிடிப்புக்கு வருவார்கள் அவர்களை ஒன்றாகப் பார்த்துவிடலாம் என்று படக்குழுவினர் ஆர்வமாக உள்ளனர்.
 
அதேபோல தங்கள் அப்பாக்கள் நிச்சயம் படப்பிடிப்புக்கு வந்து தாங்கள் எப்படி பணிபுரிகிறோம் என்பதைப் பார்ப்பார்கள் என்று ஐஸ்வர்யாவும், ஸ்ருதியும் கூட மிகுந்த எதிர்பார்ப்புடன் தான் உள்ளனர்.
 
படப்பிடிப்பு துவங்கி இத்தனை நாட்களாகியும் அப்பாக்கள் வராததால் மகள்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
 
அட, இதுக்கெல்லாமா வருத்தப்படுவாங்க...!



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger