News Update :
Powered by Blogger.

பாட்னா குண்டுவெடிப்பு: டெல்லி விமான நிலையத்தில் இன்று தீவிரவாதி பிடிபட்டான் patna bomb blast terrorist arrested delhi airport

Penulis : Tamil on Thursday, 31 October 2013 | 03:30

Thursday, 31 October 2013

பாட்னா குண்டுவெடிப்பு: டெல்லி விமான நிலையத்தில் இன்று தீவிரவாதி பிடிபட்டான் patna bomb blast terrorist arrested delhi airport

பாட்னா, அக். 31–

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் 6 பேர் பலியானார்கள். 82 பேர் காயம் அடைந்தனர். பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரசார கூட்டத்தை சீர்குலைக்க இந்த குண்டுவெடிப்புகளை இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் திட்டமிட்டு நடத்தி இருப்பது தெரியவந்தது.

தெக்சீன் அக்தர் என்ற தீவிரவாதி உத்தரவின் பேரில் நடந்த இந்த நாசவேலையில் 6 தீவிரவாதிகள் ஈடுபட்டது தெரியவந்தது. குண்டு வெடிப்பு நடந்த உடனே இம்தியாஸ் அன்சாரி, தவ்சீம், தாரிக் அன்சாரி ஆகிய 3 பேர் பிடிப்பட்டனர்.

இதில் அன்சாரி குண்டு காயம் காரணமாக உயிரிழந்தான். இதற்கிடையே இம்தி யாஸ் கொடுத்த தகவலின் பேரில் 4–வது குற்றவாளி உஜ்ஜர் அகமது நேற்று கைது செய்யப்பட்டான்.

இந்த நிலையில் இன்று டெல்லி விமான நிலையத்தில் முகம்மது அப்சல் என்பவனை போலீசார் கைது செய்தனர். இவன் நேற்று கைதான உஜ்ஜர் அகமதுவின் உறவினர் ஆவார்.

விமான நிலையத்தில் தன் மனைவியை பார்க்க வந்த போது முகம்மது அப்சல் சிக்கியது தெரிய வந்துள்ளது. இவனுக்கும் பாட்னா குண்டு வெடிப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

முகம்மது அப்சலை தேசிய விசாரணைக் குழுவினர் ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரித்து வருகிறார்கள். முகம்மது அப்சல் பிடிபட்டதன் மூலம் பாட்னா நாசவேலை தொடர்பாக சிக்கி இருக்கும் தீவிரவாதிகள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

முக்கிய குற்றவாளியான தெசீன் அக்தரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

...

shared via

comments | | Read More...

ரஜினி பொண்ணை நான் தேடிப்போகல - தனுஷ் dhanush

Penulis : Tamil on Wednesday, 30 October 2013 | 22:23

Wednesday, 30 October 2013

ரஜினி பொண்ணை நான் தேடிப்போகல; அதுவாத்தான் வந்தது’ : பரபரப்பை கிளப்பிய தனுஷ் !

dhanushஇந்த பீடிக்கு அந்த லேடி கேட்குதா” என்று கமெண்ட் அடிக்கும் அளவுக்கு ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தவர் நடிகர் தனுஷ்:
அப்படிப்பட்ட தனுஷ் தான் சமீபத்தில் ஒரு டிவி பேட்டியில் “நான் நல்ல புருஷன் இல்லை, ஆனால் என் குழந்தைக்கு ஒரு நல்ல தந்தையாக இருக்க முயற்சிக்கிறேன்” என்று மனம் திறந்து கூறியிருக்கிறார்.
comments | | Read More...

தி.மு.க. ஆட்சியில் தேவர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது: மு.க.ஸ்டாலின் பேட்டி Stalin says Thevar festival celebrated DMK rule

தி.மு.க. ஆட்சியில் தேவர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது: மு.க.ஸ்டாலின் பேட்டி Stalin says Thevar festival celebrated DMK rule

கமுதி, அக்.30–

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா நடைபெற்றது. தி.மு.க. சார்பில் பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் 12.25 மணிக்கு தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:–

பசும்பொன் முத்துராம லிங்கத்தேவர் அனைத்து சமூக மக்களால் போற்றப்பட கூடியவர். தி.மு.க. ஆட்சி காலத்தில் கல்லூரிகளுக்கு பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் பெயர் சூட்டி பெருமை சேர்த்தோம்.

தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் பசும்பொன்னில் அனையா விளக்கு அமைக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் தேவர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அவர் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு தேவையற்றது. தேர்தலுக்காக இங்கு நாங்கள் வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

...

shared via

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger